மன்னிக்கும் மாண்பாளன்!


39:53. “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

39: 54. ஆகவே (மனிதர்களே) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட் மாட்டீர்கள்.

39:55. நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.

39:56. “அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;

39:57. அல்லது: “அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால் , நானும் முத்தகீன் – பயபக்தியுடையவர்களில் – ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும் ;

39:.58. அல்லது: வேதனையை கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகி விடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;

39:59. (பதில் கூறப்படும்) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் (நிராகரிப்பவர்களில்) ஒருவனாக இருந்தாய்.”

39:60. அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம (இறுதி தீர்ப்பு) நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரத்தில் இருக்கிறதல்லவா?

அல் குர்ஆன்: அல் ஜூமர் (கூட்டங்கள்)
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on மன்னிக்கும் மாண்பாளன்!

உதவிபெற்ற கூட்டம் எது?

1. நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: ‘என்னுடைய உம்மத்தில் ஒரு கூட்டம் உண்மைக்காகப் போராடிக் கொண்டே இருப்பார்கள். அல்லாஹ்வுடைய கட்டளை எனும் மௌத்து அவர்களுக்கு வரும்வரை, அவர்களை எதிர்ப்பவர்களால் எந்தவிதத் தீங்கையும் அவர்களுக்குச் செய்து விட முடியாது’ ஆதாரம்: முஸ்லிம்.

2. ‘ஸிரியா வாசிகள் (பண்புகளால்) கெட்டு விடுவதால் உங்களுக்கு எந்தவித நன்மையுமில்லை. அல்லாஹ்வின் உதவிபெற்ற ஒரு கூட்டம் எனது உம்மத்தில் இருந்து கொண்டே இருப்பார்கள். மறுமை ஏற்படும்வரை, அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படமாட்டாது’ ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

3. உதவிபெற்ற அக்கூட்டம் ‘அஸ்ஹாபுல் ஹதீஸ்’ (ஹதீஸையுடையவர்கள்) என்பதாக இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அவ்விதமே அலிய்யுப்னுல் மதீனி (ரஹ்) அவர்கள் சொன்னதாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

4. உதவிபெற்ற அந்தக் கூட்டம் அஸ்ஹாபுல் ஹதீஸாக இல்லையென்றால், அவர்களை யாரென நானறியேன் என இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

5. நிச்சயமாக அஹ்லுல் ஹதீஸ் என்போர் ஸுன்னாவின் அடிப்படையிலுள்ள சட்டங்களைப் பின்பற்றுகின்றவர்கள். மனிதர்களிலேயே மிகவும் அறிவாளிகளாக இருப்பவர்கள். நபியவர்களின் நடைமுறைகளையும், அவர்களுடைய நற்குணங்களையும், அவற்றுடன் தொடர்புடைய ஏனைய அம்சங்களையும் அதிகம் அறிந்தவர்களாக இருப்பார்கள்.

6. இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், இமாம் இஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறுகின்றார்கள்: ‘நீங்கள் என்னைவிட அதிகமாக ஹதீஸ்களை அறிந்தவர்களாக இருகின்றீர்கள். உங்களுக்கு ஒருவர் ஸஹீஹான ஹதீஸை அறிவித்தால், அவர் ஹிஜாஸ் வாசியாக இருந்தாலும், கூபாவாசியாக இருந்தாலும், அல்லது பஸராவாசியாக இருந்தாலும் அந்த அறிவிப்பாளரை எனக்கு அறியத் தாருங்கள். நான் அவரிடம் சென்று அந்த ஹதீஸ் பற்றி வினவுவேன்’ என்று இமாமவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் எம்மையும் அஹ்லுல் ஹதீஸ்களுடன் மறுமையில் எழுப்புவானாக! அவர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர வேறெந்த ஒரு மனிதனுடைய சொல்லிலும் (அது மட்டும் தான் சரி என்று) பிடிவாதமாக இருக்க மாட்டார்கள். அந்த மனிதன் மக்களுடைய கண்ணோட்டத்தில், அந்தஸ்தில் எவ்வளவு உயர்ந்திருப்பினும் சரி.

அஹ்லுல் ஹதீஸ் நபி (ஸல்) அவர்களுடைய சொல்லில் பிடிவாதமாக இருப்பது போலவே இவர்களுக்கு எதிரானவர் (மத்ஹப்வாதி) கள் தத்தமது இமாம்களுடைய சொல்லில் பிடிவாதமாக இருக்கின்றார்கள். அஹ்லுல் ஹதீஸ் தான் வெறிபெற்ற கூட்டமாகவும், உதவிபெற்ற கூட்டமாகவும் இருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

7. அல்கதீபுல் பஃதாதிய்யி (ரஹ்) அவர்கள் தனது ‘ஷரபு அஹ்லில் ஹதீஸ்’ (அஹ்லுல் ஹதீஸின் சிறப்பு) என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

சொந்தக் கருத்தைக் கொண்டு செயல்படுபவனுக்கு அவனுடைய அறிவில் பயனுண்டு என்றிருந்தால், இதல்லாத நபி (ஸல்) அவர்களின் நடைமுறை அவனுக்குத் தேவைப்பட மாட்டாது. ஏனென்றால் ஹதீஸ் என்பதோ, எல்லா அம்சங்களையும் உள்ளடக்குகின்றது.

தௌஹீதின் அடிப்படை அறிவுகளையும், மறுமை பற்றியும், தண்டனைகள் சம்பந்தமான எச்சரிக்கைகள் பற்றியும், அல்லாஹ்வுடைய ஸிபத்து (இறைமையின் சிறப்பியல்பு) கள் பற்றியும், சுவர்க்கம் நரகம் பற்றிய செய்திகள் அங்கு நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்திருப்பவை ஆகியவை பற்றித் தகவல்களை ஹதீஸ் தருகின்றது.

மேலும் ஹதீஸிலே நபிமார்களின் சரித்திரங்கள், நல்லடியார்கள் ஸாலிஹீன்களுடைய செய்திகள், நபி (ஸல்) அவர்களுடைய உபதேசங்கள், அற்புத நிகழ்ச்சிகள் போன்றவை அடங்குகின்றன. குர்ஆனுக்கு வியாக்கியானம், அதிலுள்ள ஞானம், நல்லுபதேசம், ஸஹாபாக்களால் பாதுகாக்கப்பட்ட சட்டங்கள் போன்றவையும் அதில் அடங்குகின்றன.

அல்லாஹ், அஹ்லுல் ஹதீஸை ஷரீஅத்தின் தூண்களாக அமைத்துள்ளான். அவர்கள் மூலம் பித்அத்துகளைத் தகர்த்தெறிகிறான். அவர்கள் அல்லாஹ்வுடைய படைப்புகளில் நம்பிக்கையானவர்கள். (மார்க்க போதனையின் மூலம்) நபியவர்களுக்கும் உம்மத்துக்குமிடையில் தொடர்பை ஏற்படுத்துகின்றவர்கள். ஹதீஸின் மூலத்தை (சிதைவு ஏற்படாமல்) பாதுகாக்கின்றவர்கள். அவர்களுடைய ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய சிறப்பு இருந்து கொண்டே இருக்கின்றது.

அஸ்ஹாபுல் ஹதீஸைத் தவிர, ஏனைய ஒவ்வொரு கூட்டமும் தமது மனோ இச்சையில் நிலையாக இருந்துக் கொண்டு அதனை ஒரு நல்ல செயலாகவும் எடுத்துக் கொள்கின்றது. அஸ்ஹாபுல் ஹதீஸுக்கு அல்குர்ஆன் தான் சேமிப்பு; அஸ்ஸுன்னா அத்தாட்சி; நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களுமே அவர்களது கூட்டம்; அவர்கள் பக்கமே இவர்களது தொடர்புண்டு. இவர்கள் எப்பொழுதும் தமது சொந்த அபிப்பிராயத்தின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். இவர்களுக்கு எவன் தொல்லை ஏற்படுத்துகின்றானோ, அவனை அல்லாஹ் தண்டித்து விடுவான். இவர்களுடன் எவன் பகைத்துக் கொள்கின்றானோ, அவனை அல்லாஹ் இழிவு படுத்துவான். இதுவரை கூறப்பட்டவை அனைத்தும் அஸ்ஹாபுல் ஹதீஸ் பற்றி அல்கதீபுல் பஃதாதிய்யி (ரஹ்) அவர்கள் கூறிய கருத்துக்களாகும்.

அல்லாஹ் நம்மனைவரையும் அஹ்லுல் ஹதீஸ்களுடன் சேர்த்தருள்வானாக! அதன்படி செயல்படக் கூடியவர்களாகவும் அவர்களுடன் நட்புக் கொள்ளக் கூடியவர்களாகவும், அவர்களுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்குகின்றவர்களாகவும் நம்மனைவரையும் ஆக்குவானாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on உதவிபெற்ற கூட்டம் எது?

பெண்கள் நறுமணத்துடன் வெளியே சுற்றுதல்

ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாடையை மக்கள் நுகர வேண்டுமென்பதற்காக அவர்களைக் கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள் (அஹ்மத்) என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும் இன்றைய காலத்தில் இது மிக அதிகமாகக் காணப்படுகிறது. சில பெண்கள் இதை எந்த அளவுக்கு அலட்சியமாக, சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள் எனில் வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு தம்முடைய டிரைவர், வியாபாரி, மற்றும் பள்ளிக்கூடத்தின் காவலாளி ஆகியோரின் அருகில் சர்வ சாதாரணமாகச் செல்கின்றனர்.

ஆனால் வாசனைத் திரவியத்தைத் தடவிக் கொண்ட பெண் மீது எந்த அளவு ஷரீஅத் கடுமை காட்டியிருக்கிறதெனில் அத்தகைய பெண் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பினால் – பள்ளிக்குச் செல்வதாக இருந்தாலும் சரி – கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுச் செல்ல வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எந்தப் பெண் நறுமணம் பூசிக் கொண்டு பிறர் அந்த வாடையை நுகர வேண்டும் என்பதற்காக பள்ளிக்குச் செல்கின்றாளோ அவள் கடமையான குளிப்பைப் போன்று குளிக்காத வரை அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது’ (அஹ்மத்)

திருமண வைபவங்களும், பெண்கள் நிகழ்ச்சிகளுக்கும் புறப்படும் பெண்கள் புறப்படும் முன் பெண்கள் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தி விட்டுச் செல்கின்றனர். மட்டுமல்ல அதிகம் மணம் கமழக்கூடிய வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு கடை வீதிகளில், வாகனங்களில், ஆண், பெண் கலந்திருக்கும் கூட்டங்களில், சபைகளில், ரமளான் இரவுகளில் பள்ளிகளுக்கும் கூட செல்கின்றனர்! இதனை நாம் அல்லாஹ்விடம் தான் முறையிட வேண்டியதிருக்கிறது.

பெண்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருள் மணம் உள்ளடங்கியும் நிறம் எடுப்பாகவும் இருக்க வேண்டும் என்று ஷரீஅத்தில் கூறப்பட்டுள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மீது கோபம் கொள்ளாமலும், அறிவீனர்களான ஆண்களோ, பெண்களோ செய்கின்ற குற்றத்துக்காக நல்லோர்களான ஆண்களையும், பெண்களையும் தண்டிக்காமல் இருக்கவும் மேலும் நம் அனைவருக்கும் நேரான வழியை அவன் காட்டவும் நாம் பிரார்த்திப்போமாக!

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on பெண்கள் நறுமணத்துடன் வெளியே சுற்றுதல்

இழப்புக்கு பின் கூக்குரலிட்டு என்ன பயன்?

சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உறுதியாகவும்பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்று கொண்டோம்)” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!” என்று அறிவிப்பார்.

(ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்) வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்; மேலும் அவர்கள் இறுதி நாளையையும் (நம்பாது) மறுத்தனர்.

(நரகவாசிகள், சுவர்க்கவாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அனேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரகவாசிகள், சுவர்க்கவாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக!)” என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை-அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கிறார்கள்.

அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள், “எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே” என்று கூறுவார்கள்.

சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை-அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு- அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்; “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!”

“அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களேஅவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.

நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்; நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) மீது தடுத்து (ஹராம்-அனுமதியில்லை) விட்டான்” என்றும் கூறுவார்கள்.

(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.

நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.

இவர்கள் ( தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டணை நாள் வந்த போது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், “நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசகூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன் செய்து கொண்டிருந்த(தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்” என்று கூறுவார்கள் – நிச்சயமாக அவர்கள் தமக்கு தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டும் மறைந்து விடும்.
அல் குர்ஆன்: 7-44 முதல் 53 வரை.
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இழப்புக்கு பின் கூக்குரலிட்டு என்ன பயன்?

விசுவாசியின் விசுவாசம்

அல்லாஹ்வுக்கும், அவன் திருத்தூதருக்கும் கட்டுப்படுதல், முஸ்லிம் ஆட்சியாளர்களிடமும் பிற முஸ்லிம்களிடமும் உண்மையாளராகத் திகழ்தல்

35-நபி(ஸல்)அவர்களிடம் நான் (அவர்களது கட்டளையைச்) செவியேற்று அதற்குக் கீழ்படிந்து நடப்பேன் என்று உறுதிமொழியளித்தேன். அப்போது என்னால் இயன்ற விஷயங்களில் என்றென்றும் முஸ்லிம்களில் ஒவ்வொருவருக்கும் நன்மையே நாடுவேன், என்றும் சேர்த்துச் சொல்லும்படி என்னிடம ்நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-7204: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ரலி)

தீய செயல்கள் புரியும்போது ஈமான் குறைதல் தீய செயல்கள் புரியும் போது விசுவாசியின் விசுவாசம் அவனை விட்டும் நீங்குதல்

36- விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி அதை செய்ய மாட்டான்.(மது அருந்துகிறவன்) மது அருந்தும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும் போது இறை நம்பிக்iயாளனாக இருந்தபடி திருடமாட்டான். மற்றொரு அறிவிப்பில் மக்களின்மதிப்பு மிக்க செல்வத்தை மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்க கொள்ளையடிப்பவன் அதைக் கொள்ளையடிக்கும் போது இறைநம்பிக்கையளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான் என நபி(ஸல்)அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
புகாரி-5578: அபூஹூரைரா(ரலி)

நயவஞ்சகத்தின் அடையாளங்கள்
(நயவஞ்சகம் இரு வகைப்படும்: (1)நம்பிக்கையில் நயவஞ்சகம் (2)செயல்களில் நயவஞ்சகம்)

37- நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்த கொண்டே இருக்கும்.
அவைகளாவன:
நம்பினால் துரோகம் செய்வான். பேசினால் பொய்யே பேசுவான், ஒப்பந்தம் செய்து கொண்டால் அதை மீறுவான், விவாதம் புரிந்தால் நேர்மை தவறி பேசுவான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-34: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)

38- நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று:
பேசினால் பொய்யே பேசுவான், வாக்களித்தால் மீறுவான், நம்பினால் துரோகம் செய்வான்
ஏன நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-33: அபூஹூரைரா(ரலி)

ஒரு விசுவாசி தன் சகோதர விசுவாசியை நிராகரிப்பவன் என்றால்

39- எந்த மனிதர் தம் (முஸ்லிம்)சகோதரரைப் பார்த்து காஃபிரே!(இறைமறுப்பாளனே!) என்று அழைக்கின்றாரோ நிச்சயமாக அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-6104: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

வேண்டுமென்றே தன்தந்தையை அறிந்திருந்தும் தந்தையல்ல என்று நிராகரிப்பவனின் விசுவாசம் குறித்து

40- தன் தந்தை அல்லாத(ஒரு)வரை(அவர் தன் தந்தையல்ல என்று) விவரம் அறிந்து கொண்டே அவர் தான் என் தந்தை என்று கூறும் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாகி விடுகிறான். தனக்கு வமிசாவளித் தொடர்பு இல்லாத ஒரு குலத்தைக் குறித்து, தான், அந்தக் குலத்தைச் சேர்ந்தவன் தான் என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொள்பவன்,தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டு;ம் என நபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.
புகாரி-3508: அபூதர்(ரலி)

41- உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள் யார் தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி)விடுகின்றாரோ அவர் நன்றிகொன்றவராவார்எனநபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-6768: அபூஹூரைரா(ரலி)

42- யார் தம் தந்தை அல்லாத ஒருவரை அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே தந்தை என்று வாதாடுகிறாரோ அவர் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகிவிடும் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் கூறக்கேட்டேன்.
புகாரி-6766: சஅத் பின் அபீ வக்காஸ்(ரலி)

இந்த ஹதீஸை நான் அபூபக்ரா(ரலி)அவர்களிடம் குறிப்பிட்டேன்.அப்போது அவர்கள் இதை அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்களிடமிருந்து என் காதுகள் செவியேற்றன. என் இதயம் மனனமிட்டுக் கொண்டது என்று சொன்னார்கள்.
புகாரி-6767: அபுபக்ரா (ரலி)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on விசுவாசியின் விசுவாசம்

விசுவாசியின் விசுவாசம்

அல்லாஹ்வுக்கும், அவன் திருத்தூதருக்கும் கட்டுப்படுதல், முஸ்லிம் ஆட்சியாளர்களிடமும் பிற முஸ்லிம்களிடமும் உண்மையாளராகத் திகழ்தல்

35-நபி(ஸல்)அவர்களிடம் நான் (அவர்களது கட்டளையைச்) செவியேற்று அதற்குக் கீழ்படிந்து நடப்பேன் என்று உறுதிமொழியளித்தேன். அப்போது என்னால் இயன்ற விஷயங்களில் என்றென்றும் முஸ்லிம்களில் ஒவ்வொருவருக்கும் நன்மையே நாடுவேன், என்றும் சேர்த்துச் சொல்லும்படி என்னிடம ்நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-7204: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ரலி)

தீய செயல்கள் புரியும்போது ஈமான் குறைதல் தீய செயல்கள் புரியும் போது விசுவாசியின் விசுவாசம் அவனை விட்டும் நீங்குதல்

36- விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி அதை செய்ய மாட்டான்.(மது அருந்துகிறவன்) மது அருந்தும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும் போது இறை நம்பிக்iயாளனாக இருந்தபடி திருடமாட்டான். மற்றொரு அறிவிப்பில் மக்களின்மதிப்பு மிக்க செல்வத்தை மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்க கொள்ளையடிப்பவன் அதைக் கொள்ளையடிக்கும் போது இறைநம்பிக்கையளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான் என நபி(ஸல்)அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
புகாரி-5578: அபூஹூரைரா(ரலி)

நயவஞ்சகத்தின் அடையாளங்கள்
(நயவஞ்சகம் இரு வகைப்படும்: (1)நம்பிக்கையில் நயவஞ்சகம் (2)செயல்களில் நயவஞ்சகம்)

37- நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்த கொண்டே இருக்கும்.
அவைகளாவன:
நம்பினால் துரோகம் செய்வான். பேசினால் பொய்யே பேசுவான், ஒப்பந்தம் செய்து கொண்டால் அதை மீறுவான், விவாதம் புரிந்தால் நேர்மை தவறி பேசுவான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-34: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)

38- நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று:
பேசினால் பொய்யே பேசுவான், வாக்களித்தால் மீறுவான், நம்பினால் துரோகம் செய்வான்
ஏன நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-33: அபூஹூரைரா(ரலி)

ஒரு விசுவாசி தன் சகோதர விசுவாசியை நிராகரிப்பவன் என்றால்

39- எந்த மனிதர் தம் (முஸ்லிம்)சகோதரரைப் பார்த்து காஃபிரே!(இறைமறுப்பாளனே!) என்று அழைக்கின்றாரோ நிச்சயமாக அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-6104: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

வேண்டுமென்றே தன்தந்தையை அறிந்திருந்தும் தந்தையல்ல என்று நிராகரிப்பவனின் விசுவாசம் குறித்து

40- தன் தந்தை அல்லாத(ஒரு)வரை(அவர் தன் தந்தையல்ல என்று) விவரம் அறிந்து கொண்டே அவர் தான் என் தந்தை என்று கூறும் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாகி விடுகிறான். தனக்கு வமிசாவளித் தொடர்பு இல்லாத ஒரு குலத்தைக் குறித்து, தான், அந்தக் குலத்தைச் சேர்ந்தவன் தான் என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொள்பவன்,தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டு;ம் என நபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.
புகாரி-3508: அபூதர்(ரலி)

41- உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள் யார் தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி)விடுகின்றாரோ அவர் நன்றிகொன்றவராவார்எனநபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-6768: அபூஹூரைரா(ரலி)

42- யார் தம் தந்தை அல்லாத ஒருவரை அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே தந்தை என்று வாதாடுகிறாரோ அவர் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகிவிடும் என அல்லாஹ்வின் தூதர் நà
®ªà®¿(ஸல்)அவர்கள் கூறக்கேட்டேன்.
புகாரி-6766: சஅத் பின் அபீ வக்காஸ்(ரலி)

இந்த ஹதீஸை நான் அபூபக்ரா(ரலி)அவர்களிடம் குறிப்பிட்டேன்.அப்போது அவர்கள் இதை அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்களிடமிருந்து என் காதுகள் செவியேற்றன. என் இதயம் மனனமிட்டுக் கொண்டது என்று சொன்னார்கள்.
புகாரி-6767: அபுபக்ரா (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on விசுவாசியின் விசுவாசம்

நன்றி மறந்த நாளைய முதியோர்களே!

மனிதன் என்பவன் பலவகைகளில் நன்றி மறப்பவனாக இருக்கிறான். நானொருவனுக்கு உதவி செய்து, அதை சமயம் வரும் போது அவனுக்கு உணர்த்துவதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் சமூகத்தில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சார்ந்தவனாகதான் இருக்க வேண்டியுள்ளது. என்னிடம் உதவி பெற்றவன், எனக்கு உதவி தேவைப்படும் போது அவன் செய்யாத பட்சத்தில், அவனுக்கு நான் செய்த உதவியை சொல்லி காட்டி, இது மனித தன்மையில் உள்ளது அல்ல என்பதை அவனுக்கு நாம் உணர்த்த வேண்டும்.

இதில் நம் மனதை மிகவும் பாதித்து கொண்டிருக்கும் விஷயம் என்னவெனில்; இன்று வளர்ந்து வாலிப பருவத்தில் வளைய வரும் பலர் தங்களுடைய பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு, தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்து கொள்கிறார்கள். இது முறையா என்று சிந்திக்க வேண்டாமா? இவன் அல்லது இவள் தக்க பருவம் அடையும் வரை தன் சுகங்கள் அத்தனையும் தியாகம் செய்து, தன் வாழ்க்கையையே இவர்களுக்காக அர்ப்பணித்த பெற்றோரை, அவர்களுடைய கடைசி காலத்தில், அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் காலத்தில், நம்முடைய மனசாட்சியை ஒழித்து வைத்து விட்டு ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறோமே இவனை விட நன்றி மறப்பவன் எவன் சொல்லுங்கள் பார்ப்போம்.

அறிவுடைவன் சிந்தித்து பார்க்கட்டும். தான் இன்று இருக்கும் நிலைக்கு யார் காரணம் என்பதையும், இன்று இவன் உடம்பில் ஓடும் இரத்தம், அன்று அவன் தாய் தன் இரத்தத்தை பாலாக்கி கொடுத்தது தான் என்பதையும், தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் அடித்தளம் அமைத்து கொடுத்தவர்கள் யார் என்பதையும், மனித மனம் உள்ளவன் சிந்தித்து பார்க்க கடமை பட்டுள்ளான்.

இன்று நான், நான் என்று மமதையும், திமிர்தனத்திலும், அலைபவன், நேற்று தன் தந்தையுடைய உடம்பில் அருவருப்பான விந்து துளியாக இருந்ததையும் நினைத்து பார்க்கட்டும். இன்னும் இன்று இவன் பெற்றோருக்கு இவன் செய்வதை இவனுடைய பிள்ளைகள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், இதையே இவனுடைய பிள்ளைகள் நாளை இவனுக்கு செய்ய காத்திருக்கிறார்கள் என்பதையும், இப்போதே எண்ணி பார்த்து கொள்ளட்டும்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on நன்றி மறந்த நாளைய முதியோர்களே!

வெற்றிபெற்ற கூட்டத்தின் அடையாளம்

1. வெற்றிபெற்ற கூட்டம் மனிதர்களுக்கு மத்தியில் சிறுபான்மையாக இருக்கும். ‘அபூர்வமான மனிதர்களுக்கு நல்வாழ்த்து உண்டாகட்டும் இவர்கள், அதிகமான தீய மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் ஸாலிஹான (நல்ல) மனிதர்கள். இவர்களுக்கு வழிபடுபவர்களை விட மாறு செய்பவர்களே அதிகமாக இருப்பார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

அல்குர்ஆன் இவர்களைப் பற்றிப் புகழ்ந்து பின்வருமாறு கூறுகின்றது.

“எனது அடியார்களில் சொற்பமானவர்களே (எனக்கு) நன்றி செலுத்துபவர்களாக இருக்கின்றனர்” (34:13)

2. வெற்றிபெற்ற கூட்டத்தை அதிகமான மக்கள் எதிர்ப்பார்கள். அவர்களைப் பற்றி அவர்தூறான பலவற்றைச் சொல்வார்கள். பட்டப் பெயர்களைச் சொல்லி அழைப்பார்கள். நபிமார்களின் நடைமுறையைக் கொண்டு இவர்களுக்குப் படிப்பினை உண்டு என்பதைப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான்.

“இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும், ஜின்னிலும் உள்ள ஷைத்தான்களை நாம் விரோதிகளாக ஆக்கியிருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான (பொய்க்) கூற்றுக்களை இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். உம்முடைய இறைவன் நாடியிருந்தால், இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்க் கூற்றுக்களையும் விட்டொழியும்” (6:112)

நபி (ஸல்) அவர்கள், மக்களைத் தௌஹீதின் பக்கம் அழைக்கும் போது, அவர்களைப் ‘பொய்யன்’ என்றும் ‘சூனியக்காரன்’ என்றும் கூறினார்கள். அதே மக்கள் நபியவர்களது இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு முன்னால் அவர்களை நம்பிக்கையாளர் என்றும், உண்மை பேசுபவர் என்றும் கூறி அழைப்பவர்களாக இருந்தனர்.

3. அஷ்ஷெய்கு அப்துல் அஜீஸ் அப்துல்லாஹ் இப்னு பாஸ் அவர்களிடத்தில் ‘வெற்றிபெற்ற கூட்டம் எது’? என்று கேட்கப்பட்ட போது, ‘ஸலபிய்யூன்கள்’ என்னும் முன்னோர்களான நபி (ஸல்) அவர்களினதும், ஸஹாபாக்களினதும் வழியில் எவர்களெல்லாம் இருக்கின்றனரோ, அவர்கள்தான் வெற்றிபெற்றவர்கள் என்று பதிலளித்தார்கள்.

மேற்காட்டியவை, வெற்றிபெற்ற கூட்டத்தின் சில வழிமுறைகளும், அடையாளங்களுமாகும். அல்லாஹ்வின் உதவிபெற்ற கூட்டமான வெற்றி பெற்றவர்களின் அடிப்படைக் கொள்கையில் நாமும் இருப்பதற்காக இன்ஷா அல்லாஹ் இந்நூலில் சில பிரிவுகளைச் சொல்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on வெற்றிபெற்ற கூட்டத்தின் அடையாளம்

அந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல்

சமூகப் பழக்கவழக்கங்களில் சில நம் சமுதாயத்தில் இறைமார்க்கத்தையும் விஞ்சி விட்டன. அதுபோல மக்களின் தவறான பழக்கங்களும், பாரம்பரிய நடைமுறைகளும் இறைச்சட்டங்களை எந்த அளவுக்கு மிகைத்து விட்டன எனில் யாருக்கேனும் ஷரீஅத்தின் சட்டங்களை நீ எடுத்துச் சொன்னால், அவற்றை ஆதாரத்தோடு நிரூபித்து, சான்றுகளையும் தெளிவு படுத்தினால் உடனே உன்னை பழமைவாதி, அடிப்படைவாதி, குடும்ப உறைவை குலைப்பவன், நல்ல எண்ணங்களில் சந்தேகத்தை ஏற்படுத்துபவன்… என்றெல்லாம் அவதூறு கூறி விடுவர். அத்தகைய பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் அந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல்.

சிறிய தந்தையின் மகள், மாமி மகள், தாய் மாமன் மகள், சின்னம்மா மகள், அண்ணன் – தம்பி மனைவி, சிறிய தந்தையின் மனைவி, மாமாவின் மனைவி போன்ற பெண்களுடன் முஸாஃபஹாச் செய்வது நம் சமுதாயத்தில் தண்ணீர் குடிப்பதை விடவும் சாதாரண விஷயமாக மாறி விட்டன. (தமிழ் நாட்டில் இந்தப் பழக்கம் இல்லை) மார்க்க ரீதியாக இச்செயல் எவ்வளவு ஆபத்தானது தெளிந்த நோக்குடன் சிந்தித்துப் பார்த்தால் அதைச் செய்ய மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் அவருக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட அவரது தலையில் இரும்பு ஊசியால் குத்துவதே மேல்’ அறிவிப்பவர்: மஅகல் பின் யஸார் (ரலி) நூல்: தப்ரானி

இச்செயல் நபி (ஸல்) அவர்கள் கூறியதுபோல கை செய்யும் விபச்சாரம் என்பதில் ஐயமில்லை. இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘கண்கள் விபச்சாரம் செய்கின்றன, கைகள் விபச்சாரம் செய்கின்றன, கால்களும் விபச்சாரம் செய்கின்றன, மர்ம உறுப்பும் விபச்சாரம் செய்கின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நூல்: அஹ்மத்

முஹம்மத் (ஸல்) அவர்களை விட தூய உள்ளம் கொண்டவர் உலகில் யாரேனும் உண்டா? அவ்வாறிருந்தும் ‘நான் பெண்களிடம் முஸாஃபஹா செய்ய மாட்டேன்’ என்றெல்லாம் கூறியுள்ளார்கள். அஹ்மத், தப்ரானியில் இதற்கு சான்றுள்ளது.

அண்ணலாரின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கரம் எந்தப் பெண்ணுடைய கரத்தின் மீதும் பட்டதே இல்லை. எனினும் வாய்மொழி மூலமே அவர்களிடம் (பெண்களிடம்) பைஅத் – உறுதிப் பிரமாணம் பெறுவார்கள். (முஸ்லிம்)

அறிந்து கொள்ளுங்கள்! சில கணவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அவர்கள் ஒழுக்கமுள்ள தம் மனைவியரை, தம் சகோதரர்களிடம் முஸாஃபஹா செய்யா விட்டால் விவாகரத்துச் செய்து விடுவதாக எச்சரிக்கின்றனர்.

இங்கு ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அவசியமாகும். அதாவது திரைக்கு அப்பால் நின்று கொண்டு கையில் ஒரு துணியைப் போட்டுக் கொண்டு முஸாஃபஹாச் செய்தால் அது கூடும் என்றாகி விடாது. நேரடியாகச் செய்வது, துணியை வைத்துச் செய்வது ஆகிய இரண்டும் தடுக்கப்பட்டவை தான்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on அந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல்

நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்


22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

22:66. இன்னும்; அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

22:67. (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர்.

22:68. (நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: “நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக.

22:69. நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் கியாமநாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.”

22:70. நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவுன் சுலபமானது.

22:71. மேலும்: இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை; இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை; எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை.

22:72. இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடுரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது தான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

அல் குர்ஆன்- ஸூரா அல் ஹஜ்.
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்