ஜமாஅத் தொழுகைக்கு ஓடி வருதல் கூடாது..

350– தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-908: அபூஹுரைரா (ரலி)


351– நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்) என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு (ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம் என்று பதில் கூறினர். அவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்கு கிடைத்த ரக்அத்களை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்கு தவறி போனதைப் பூர்த்தி செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-635: அபூகதாதா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஜமாஅத் தொழுகைக்கு ஓடி வருதல் கூடாது..

தொழுகைக்கு தக்பீர் கட்டியதும் என்ன ஓதுவது?

349– நபி (ஸல்) அவர்கள் தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சற்று நேரம் மவுனமாக இருப்பார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தாய் தங்களுக்கு அர்ப்பணம். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மவுனமாக இருக்கும் சமயத்தில் என்ன கூறுவீர்கள்? என்று நான் கேட்டேன். இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போல், எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப் படுவது போல் என் தவறுகளை விட்டும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக! என்று நான் கூறுவேன் என்றார்கள்.

புஹாரி-744: அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகைக்கு தக்பீர் கட்டியதும் என்ன ஓதுவது?

தாகூத்துகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்

‘தாகூத்’ என்றால், அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படக் கூடியவையும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் வழிபடாமல், வணக்கத்தாலும், வழிபாட்டாலும் பின்பற்றுவதாலும் வேறொருவரைக் கொண்டு திருப்தியடைவதும் ஆகும். அல்லாஹ்வுக்கு அடிபணியுமாறும், தாகூத்துகளை விட்டு விலகி விடுமாறும் தத்தமது கூட்டத்தாருக்குக் கட்டளையிடுமாறு ரஸூல்மார்களை அல்லாஹ் அனுப்பினான். இதுபற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான். Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தாகூத்துகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்

உலகின் ஒளி விளக்கு!

25:61 வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.

15:16 வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து, பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.
Posted in படத்தொகுப்புகள் | Comments Off on உலகின் ஒளி விளக்கு!

தொழுகையை முடித்ததும் செய்யும் திக்ருகள்..

347– வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர எவரும் இல்லை. அவன் ஏகன் அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சி அவனுக்குரியது. புகழும் அவனுக்குரியது. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்பு உடையவனும் உன்னிடம் எந்தப் பயனும் அளிக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் கூறக் கூடியவர்களாக இருந்தனர்.

புஹாரி-844: முகீரா பின் ஷுஃபா (ரலி)

348– ஏழை மக்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போலவே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்; உம்ராச் செய்கின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை) என்று முறையிட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்தி விட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும் அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்தக் காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை இறைவனைத் துதியுங்கள், 33 தடவை இறைவனைப் புகழுங்கள், 33 தடவை இறைவனைப் பெருமைப் படுத்துங்கள் என்று கூறினார்கள். நாங்கள் இந்த விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும் அல்லாஹு அக்பர் 33 தடவையும் கூறலானோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றி கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹூ அக்பர் என்று 33 தடவை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 தடவைகள் கூறியதாக அமையும் என்று விளக்கம் தந்தார்கள்.

புஹாரி-843: அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகையை முடித்ததும் செய்யும் திக்ருகள்..

ஸூஃபிகள் கொடுக்கும் தட்டு, தகடு, தாயத்து!

ஸூஃபியிஸம்: இக்கொள்கையை உடையவர்கள் தங்களின் ஸூஃபிகள் கொடுத்த தட்டு, தகடு, தாயத்து போன்றவற்றை ஆபத்து, சிக்கல்களிலிருந்து பாதுகாவல் பெறுவதற்காக பயன்படுத்துகின்றனர். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on ஸூஃபிகள் கொடுக்கும் தட்டு, தகடு, தாயத்து!

அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரும் விஷயங்கள்..

344– நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுவதை நான் செவியுற்றுள்ளேன்.

புஹாரி-833: ஆயிஷா (ரலி)


345– இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்வார்கள். தாங்கள் கடனை விட்டும் அதிகமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன? என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது ஒரு மனிதன் கடன் படும் போது பொய் பேசுகிறான்; வாக்களித்து விட்டு அதை மீறுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

புஹாரி-832: ஆயிஷா (ரலி)

346– நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே! நிச்சயமாக நான் மண்ணறை வேதனை, நரக வேதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை, மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.

புகாரி- 1377. அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரும் விஷயங்கள்..

கனவில் பொய்யுரைத்தல்

சிலர் காணாதக் கனவுகளைக் கண்டதாக இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். மக்களுக்கு மத்தியில் நற்பெயரையோ, சிறப்பையோ பெறுவதற்காக, அல்லது பொருளாதார இலாபம் பெறுவதற்காக அல்லது தம் எதிரிகளை அச்சுறுத்துவதற்காக இன்னும் இதுபோன்ற நோக்கங்களுக்காக இவ்வாறு செய்கின்றனர். பெரும்பாலான பாமரர்களுக்கு கனவுகளில் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் உள்ளது. அதனால் இப்பொய்க் கனவுகள் மூலம் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். காணாத கனவுகளைக் கண்டதாகக் கூறுகின்றவர்களுக்கு ஹதீஸ்களில் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது. Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on கனவில் பொய்யுரைத்தல்

கப்ர் வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுதல்..

343– மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது) ‘மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர்’ என்று கூறினர். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்) என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இருவரும் உண்மையே சொன்னார்கள். (மண்ணறையிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அந்த வேதனை(யால் அவதியுறும் அவர்களின் அலறல்)தனை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன” என்றார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.

புகாரி- 6366. ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கப்ர் வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுதல்..

மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-4)

மாதவிடாய் (ஹைல்)

ஹைல் என்பது பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய்க்கு சொல்லப்படும்.
 

மாதவிடாயின் (ஹைலின்) காலம்
 

பெண்களுக்கு ஒன்பது வயதிலிருந்து மாதவிடாய் வருவதற்கு வாய்ப்பிருக்கின்றது. அதனுடைய குறைந்த காலத்திற்கும் கூடிய காலத்திற்கும் அளவு கூறமுடியாது. அதாவது ஒவ்வொரு மாதத்திலும் மிகவும் குறைந்த நாட்களில் மாத்திரம் மாதவிடாயாக இருந்து அதிக நாட்கள் சுத்தமாக இருப்பது. அல்லது ஒவ்வொரு மாதத்திலும் அதிக நாட்கள் மாதவிடாயாக இருந்து குறைந்த நாட்கள் சுத்தமாகவும் இருக்கலாம். இதற்கு கால அளவு சொல்லமுடியாது. Continue reading

Posted in இஸ்லாமியப் பெண் | Comments Off on மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-4)