மாதவிடாயில் விடுபட்ட தொழுகையை…

192- ஒரு பெண் ஆயிஷா (ரலி)விடம் பெண்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமான பின் தொழுவதால் மட்டும் போதுமானதா? (அல்லது விடுபட்ட தொழுகையையும் தொழ வேண்டுமா?) என்று கேட்டபோது நீ (காரிஜியாக்களின் பிறப்பிடமான) ஹரூர் என்னுமிடத்தைச் சார்ந்த பெண்ணா? நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். எங்களிடம் விடுபட்ட தொழுகையை தொழுமாறு ஏவமாட்டார்கள் – அத்தொழுகையை நாங்கள் தொழமாட்டோம் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

புகாரி-321: முஆதா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மாதவிடாயில் விடுபட்ட தொழுகையை…

நூஹையும், (நோவா) இப்ராஹீமையும் (ஆப்ரகாம்)..

அன்றியும், திடமாக நாமே (அல்லாஹ்வே) நூஹையும், (நோவா) இப்ராஹீமையும் (ஆப்ரகாம்) தூதர்களாக அனுப்பினோம்; இன்னும் அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர். (அல்குர்ஆன்: 57:26)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நூஹையும், (நோவா) இப்ராஹீமையும் (ஆப்ரகாம்)..

தொடர் இரத்தப்போக்கு உள்ள பெண் பற்றி…

190- அபூ ஹூபைஷ் என்பாரின் மகள் பாத்திமா என்ற பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப் போக்கு ஏற்படும் ஒரு பெண். (அதிலிருந்து) நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா? எனக் கேட்டார். அதற்கு இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டு விடு. அது நின்று விட்டால் இரத்தம் பட்ட இடத்தை கழுவிவிட்டுத் தொழுகையை நிறைவேற்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் பின்னர் அடுத்த மாதவிடாய் வரும்வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூ செய்து கொள் என்றும் சொன்னார்கள்.

புகாரி-228: ஆயிஷா (ரலி)

191- உம்மு ஹபீபா என்ற பெண் ஏழு வருடங்கள் உதிரப் போக்குடையவராக இருந்தார். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, குளிக்குமாறு அவர்களிடம் கட்டளையிட்டு, இது நோய் எனக் கூறினார்கள். ஒவ்வொரு தொழுகைக்கும் அப்பெண்மணி குளிப்பவராக இருந்தார்.

புகாரி-327: ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொடர் இரத்தப்போக்கு உள்ள பெண் பற்றி…

நிராகரிப்போரின் பயனற்ற கதறல்!

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ‘ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நிராகரிப்போரின் பயனற்ற கதறல்!

மாதவிடாய் பெண் எவ்வாறு சுத்தம் செய்வது…

189- ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து மாதவிடாய் நின்றபின் எப்படிக் குளிக்க வேண்டும்? என வினவினார். நபி (ஸல்) அவர்கள் அவள் குளிக்கும் முறையை அவளுக்கு கூறிவிட்டு கஸ்தூரி வைக்கப்பட்ட பஞ்சை எடுத்து அதனால் சுத்தம் செய், எனக் கூறினார்கள். அப்பொது அப்பெண் நான் எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? எனக் கேட்டார். அதைக் கொண்டு நீ சுத்தம் செய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மீண்டும் அந்தப் பெண் எப்படி? என்று கேட்ட போது ஸூப்ஹானல்லாஹ்! சுத்தம் செய்து கொள்! எனக் கூறினார்கள். உடனே நான் அந்தப் பெண்ணை என் பக்கம் இழுத்து கஸ்தூரி கலந்த பஞ்சைக் கொண்டு இரத்தம் பட்ட இடத்தில் வைத்துச் சுத்தம் செய் என அவளுக்குக் கூறினேன்.

புகாரி-314: ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மாதவிடாய் பெண் எவ்வாறு சுத்தம் செய்வது…

நீர் பார்க்கவில்லையா?

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். (அல்குர்ஆன்: 22:65)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நீர் பார்க்கவில்லையா?

தரிசனம் செய்யப்படும் இடங்கள்

ஸிரியா, இராக், எகிப்து இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும், இவையல்லாத இன்னும் பல நாடுகளிலும் நாம் காணுகின்ற, கட்டப்பட்ட கப்றுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் எதனையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. கப்றின் மீது கட்டிடம் கட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளது பின்வருமாறு அமைந்துள்ளது. Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தரிசனம் செய்யப்படும் இடங்கள்

மூன்று முறை தலைக்கு நீர் ஊற்றுதல்…

187- நானோ மூன்று முறை எனது தலையில் தண்ணீரை ஊற்றுவேன். இதை அறிவிக்கும் ஜூபைர் பின் முத்யிம் (ரலி) நபி (ஸல்) அவர்கள் தாங்கள் இரு கைகளால் சைகை செய்து காட்டினார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

புகாரி-254: ஜூபைர் பின் முத்யிம் (ரலி)

188- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு சிலரும் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களிடத்தில் குளிப்பைப் பற்றிப் கேட்டோம். அதற்கு ஒரு ஸாவு அளவு தண்ணீர் போதும் என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது என்றார். உன்னை விடச் சிறந்த, உன்னை விட அதிகமான முடிவைத்திருந்த நபி (ஸல்) அவர்களுக்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருந்தது எனக் கூறினார்கள். பின்னர் ஒரே ஆடையை அணிந்தவர்களாக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

புகாரி-252: அபூ ஜஃபர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மூன்று முறை தலைக்கு நீர் ஊற்றுதல்…

நம்பிக்கை கொண்டவர்களுக்கு!

விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்த பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறு யாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் – இது முஃமின்களுக்கு (நம்பிக்கை கொண்டவர்களுக்கு) விலக்கப் பட்டிருக்கிறது. (அல்குர்ஆன்: 24:3)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நம்பிக்கை கொண்டவர்களுக்கு!

குளிக்கும் நீரின் அளவு…

184-ஃபரக் என்ற ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் சேர்ந்து குளித்தோம். (ஃபரக் என்பது இரு கை கொள்ளளவு தண்ணீரின் பண்ணிரண்டு மடங்காகும்)

புகாரி-250: ஆயிஷா (ரலி)
185- நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் நபி (ஸல்) அவர்களுடைய குளிப்பு எப்படியிருந்தது? என்று கேட்டார். ஆயிஷா (ரலி) ஸாவு, போன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குளித்தார்கள். தமது தலை மீது தண்ணீரை ஊற்றினார்கள். அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் ஒரு திரை இருந்தது.

புகாரி-251: அபூஸலமா (ரலி)
186- நபி (ஸல்) அவர்கள் நான்கு முத்துவிலிருந்து ஜந்து முத்துவரை உள்ள தண்ணீரில் குளிப்பார்கள். ஒரு முத்து அளவு தண்ணீரில் உளூ செய்வார்கள்.
புகாரி-201: அனஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on குளிக்கும் நீரின் அளவு…