Category Archives: தினம் ஒரு வசனம்

தமக்குத் தாமே தீங்கிழைத்துக்…..

அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாக்கப்பட்டது; இன்னும் நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டி இருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்). (அல்குர்ஆன்: 14:45)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on தமக்குத் தாமே தீங்கிழைத்துக்…..

ஒவ்வோர் ஆத்மாவுக்கான முழுமையான கூலி!

ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்த (தீர்ப்பு) நாளில், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் – அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 16:111)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on ஒவ்வோர் ஆத்மாவுக்கான முழுமையான கூலி!

தவறிப்போன நம்பிக்கைகள்!

அன்றியும் (மறுமையில் அல்லாஹ் நிராகரித்துக் கொண்டிருந்த இவர்களை நோக்கி) “நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்து விட்டீர்கள்; இன்னும், நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் (என்று எண்ணிக் … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on தவறிப்போன நம்பிக்கைகள்!

கொடிய பகைவன்

(நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கின்றான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி (சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாக கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான். (அல்குர்ஆன்: 2:204)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on கொடிய பகைவன்

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியிருந்தால்..

மேலும் அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணம் கூறுகிறான்: அது அச்சமில்லாமலும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன – ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்துக் கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும், … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியிருந்தால்..

நீங்கள் அழைத்து கொண்டிருந்தவர்கள் எங்கே?

எவன் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனைச் செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கின்றானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக் கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) ‘அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நீங்கள் அழைத்து கொண்டிருந்தவர்கள் எங்கே?

இழிவு தரும் வேதனையே இவர்களின் கூலி!

6:93. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களைவிடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இழிவு தரும் வேதனையே இவர்களின் கூலி!

அசுத்தமான தடுக்கப்பட்ட உணவு வகைகள்

(நபியே) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” – ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் – (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) – ஆனால் எவரேனும் நிர்பந்திக்கப்பட்டு, வரம்பை … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அசுத்தமான தடுக்கப்பட்ட உணவு வகைகள்

எச்சரிக்கை எதற்காக?

இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். (அல்குர்ஆன்: 14:52)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on எச்சரிக்கை எதற்காக?

இரகசியங்களை முற்றிலும் அறிந்தவன்!

நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைந்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 35:38)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இரகசியங்களை முற்றிலும் அறிந்தவன்!