நீங்கள் கவனித்தீர்களா?

“அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? ‘அவர்கள் பூமியில் எதைப் படைத்திருக்கின்றனர்?’ என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை” (என்று நபியே! நீர் கூறும்). (அல்குர்ஆன்: 35:40)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நீங்கள் கவனித்தீர்களா?

நிச்சயமாக வானமும், பூமியும்…..

நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன்: 35:41)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நிச்சயமாக வானமும், பூமியும்…..

மறைவிடங்களைப் பேணுதல் பற்றி…

195- (நபி (ஸல்) அவர்கள் சிறு பிராயத்தில்) கஃபத்துல்லாஹ்வின் கட்டுமானப்பணி நடக்கும் போது அதைக் கட்டுபவர்களோடு கற்களை எடுத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) என் சகோதரரின் மகனே! உன் வேஷ்டியை அவிழ்த்து அதை உன் தோள் மீது வைத்து அதன் மேல் கல்லை எடுத்துச் சுமந்து கொண்டு வரலாமே, என நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் வேட்டியை அவிழ்த்து அதைத் தமது தோள் மீது வைத்தார்கள். வைத்ததும் அவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்து விட்டார்கள். அதற்கு பின் நபி (ஸல்) அவர்கள் நிர்வாணமாக ஒரு போதும் காட்சியளிக்கவில்லை.

புகாரி-364: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மறைவிடங்களைப் பேணுதல் பற்றி…

நல்லுபதேசம் பெறுவதற்காக…

(இது திருக் குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை (அல்லாஹ்வாகிய) நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம். (அல்குர்ஆன்: 24:1)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நல்லுபதேசம் பெறுவதற்காக…

ஆண்கள் தங்கம் அணிதல்

‘பட்டும் தங்கமும் என் சமுதாயத்தில் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன’ நபிமொழி. அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: அஹ்மத்.

இன்று கடைவீதிகளில் ஆண்களுக்கென்று தங்கத்தால் – பல்வேறு காரட்களில் – தயாரிக்கப்பட்ட அல்லது முழுமையாக தங்க முலாம் பூசப்பட்ட கைக்கடிகாரங்கள், முக்குக் கண்ணாடிகள், பட்டன்கள், பேனாக்கள், செயின்கள், சாவிக்கொத்துகள் இன்னும் பல உள்ளன. சில போட்டிகளில் ஆண்கள் அணியும் தங்கக் கைக்கடிகாரம் பரிசாக அறிவிக்கப்படுகின்றன. இதுவும் தடை செய்யப்பட்டதாகும். Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on ஆண்கள் தங்கம் அணிதல்

தனிமையில் நிர்வாணமாகக் குளித்தல் பற்றி…

194- இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் அல்லாஹ்வின் மீதாணையாக மூஸா விரை வீக்கமுடையவர் எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை என இஸ்ரவேலர்கள் கூறிக் கொண்டார்கள். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தமது ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்து விட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களுடைய ஆடையோடு அந்தக் கல் ஓடி விட்டது. உடனே மூஸா (அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து கல்லே! எனது ஆடை! என்று சப்தமிட்டுக் கொண்டு சென்றார்கள். அப்போது இஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்து விட்டு அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை என்று கூறினார்கள். மூஸா (அலை) அவர்கள் தமது ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா (அலை) அவர்கள் கல்லைக் கொண்டு அந்தக் கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-278: அபூஹூரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தனிமையில் நிர்வாணமாகக் குளித்தல் பற்றி…

ஞானமற்ற தர்க்கம்!

இன்னும் எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 22:3)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on ஞானமற்ற தர்க்கம்!

குளிக்கும்போது திரையிட்டு கொள்ளுதல்..

193- மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி) நபி (ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது யாரவர்? எனக் கேட்டார்கள். நான் அபூதாலிபின் மகள் உம்முஹானி என்றேன். உடனே உம்முஹானியே! வருக! எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் குளித்து முடித்தபின் ஒரே ஆடையைச் சுற்றிக் கொண்டவர்களாக எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்கள் தங்கள் தொழுகையை முடித்துக் கொண்டதும் அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய சகோதரர் நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹூபைராவின் மகனைக் கொலை செய்ய எண்ணியுள்ளார் என்று கூறினேன். அப்போது உம்முஹானியே! நீ யாருக்கு அடைக்கலம் அளித்திருக்கிறாயோ அவருக்கு நாங்களும் அடைக்கலம் அளிக்கிறோம், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சம்பவம் முற்பகலில் நடந்தது.

புகாரி-357: உம்மு ஹானி (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on குளிக்கும்போது திரையிட்டு கொள்ளுதல்..

நிராகரிப்பு என்ற நஷ்டம்!

அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை. (அல்குர்ஆன்: 35:39)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நிராகரிப்பு என்ற நஷ்டம்!

ஸூஃபியிஸம் – குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு

தகவல் மூலம்: www.islam-qa.com

‘ஸூஃபியிஸம்’ (Sufyism) என்ற சொல் நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது, நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் காலத்திலோ அல்லது தாபியீன்கள், தபஅ தாபியீன்கள் காலத்திலோ அல்லது கண்ணியத்திற்குரிய நாற்பெரும் இமாம்களின் காலத்திலோ இருந்ததில்லை. ‘ஸூஃபியிஸம்’ எங்கிருந்து இஸ்லாத்திற்கு வந்தது என்று ஆராய்ந்தவர்கள் இந்தப்பெயர் வந்ததற்கான இரண்டு காரணங்களைக் கூறுகின்றனர். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on ஸூஃபியிஸம் – குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு