இழிவு தரும் வேதனையே இவர்களின் கூலி!

6:93. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களைவிடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் (வானவர்கள்) தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ” உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்). (அல்குர்ஆன்: 6:93)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இழிவு தரும் வேதனையே இவர்களின் கூலி!

செத்த ஆட்டின் தோலைப் பதனிடுக…

205- மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மம் வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இதன் தோலை நீங்கள் பயன் படுத்தியிருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். இது செத்ததாயிற்றே! எனத் தோழர்கள் கூறியதும், இதை உண்பது தான் தடுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-1492: இப்னு அப்பாஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on செத்த ஆட்டின் தோலைப் பதனிடுக…

காற்றுப் பிரிந்தால் உளூசெய்க…

204- தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும் வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம் என்றார்கள்.

புகாரி-137: அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on காற்றுப் பிரிந்தால் உளூசெய்க…

அசுத்தமான தடுக்கப்பட்ட உணவு வகைகள்

(நபியே) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” – ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் – (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) – ஆனால் எவரேனும் நிர்பந்திக்கப்பட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்து விட்டால் – (அவர் மீது குற்றமாகாது; ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 6:145)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அசுத்தமான தடுக்கப்பட்ட உணவு வகைகள்

சமைத்த இறைச்சி உணவை உண்டால்.. …

200- நபி (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஒரு ஆட்டின் தொடைப்பகுதி இறைச்சியைச் சாப்பிட்ட பின் உளூ செய்யாமலே தொழுதார்கள்.

புகாரி-207: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

201- நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடை இறைச்சியை வெட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே கத்தியைப் போட்டு விட்டுத் தொழுதார்கள். உளூ செய்யவில்லை.

புகாரி-208: அம்ர் பின் உமய்யா (ரலி)

202- நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுத் தொடை இறைச்சியைச் சாப்பிட்டார்கள். பின்னர் (அதற்காக) உளூ செய்யாமலே தொழுதார்கள்.

புகாரி-210: மைமூனா (ரலி)

203- நபி (ஸல்) அவர்கள் பால் குடித்ததால் வாய்கொப்பளித்து விட்டு, அதிலே கொழுப்பு இருக்கிறது என்று கூறினார்கள்.

புகாரி-211: இப்னு அப்பாஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on சமைத்த இறைச்சி உணவை உண்டால்.. …

எச்சரிக்கை எதற்காக?

இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். (அல்குர்ஆன்: 14:52)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on எச்சரிக்கை எதற்காக?

சட்ட மாற்றத்திற்குப் பின்….

199- ஒருவர் தமது மனைவியின் (இரு கால், இரு கை,ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, அவளுடன் உடலுறவு கொள்வாராயின் அவர் மீது குளிப்புக் கடமையாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-291: அபூஹூரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on சட்ட மாற்றத்திற்குப் பின்….

இரகசியங்களை முற்றிலும் அறிந்தவன்!

நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைந்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 35:38)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இரகசியங்களை முற்றிலும் அறிந்தவன்!

பூமிக்கும், வானத்திற்கும் இடைப்பட்டவைகள்!

கேள்வி எண்: 15. இறைவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதோடு அல்லாமல் இவை இரண்டிற்கும் இடைப்பட்டதையும் (பல வாயுக்களை உள்ளடக்கிய காற்று மண்டலத்தையும்) படைத்திருப்பதாகக் கூறும் வசனங்கள் இரண்டைக் கூறுக.? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on பூமிக்கும், வானத்திற்கும் இடைப்பட்டவைகள்!

உடலுறவுக்குப் பின் குளிப்பு அவசியம்….

சட்ட மாற்றத்திற்கு முன்

196- நபி (ஸல்) அவர்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். தலையிலிருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நாம் உம்மை அவசரப்படுத்தி விட்டோம் போலும்? என்றார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். நீர் (மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எடுத்து விடுவீரானால், அல்லது இந்திரியம் வெளியாகாமலிருந்தால், அதற்காக நீர் உளூ செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இச்சட்டம் பின் மாற்றப்பட்டது)

புகாரி-180: அபூ சயித் அல்குத்ரீ (ரலி)

197- நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமலிருந்தால் அவர் மீது குளிப்புக் கடமையாகுமா? என்று கேட்டேன். அதற்கு மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவவேண்டும், பின்னர் உளூ செய்து கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். குளிப்பது தான் சிறந்தது. ஆனால் இந்த ஹதீஸ் கடைசி கட்டளையாக இருந்தது.

புகாரி-293: உபை பின் கஅப் (ரலி)

198- ஒருவர் (தம் மனைவியுடன்) உடலுறவு கொண்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவருடைய சட்டம் என்ன? என்று நான் உதுமான் (ரலி)இடம் கேட்டேன். அதற்கு அவர் தமது ஆண்குறியைக் கழுவி விட்டுத் தொழுகைக்கு செய்வது போன்று உளூ செய்ய வேண்டும். இதை நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என உதுமான் (ரலி) கூறினார்கள்.

புகாரி-179: ஸைத் பின் காலித் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on உடலுறவுக்குப் பின் குளிப்பு அவசியம்….