தரீக்காக்கள் இஸ்லாத்தில் உள்ளதா?

ஸூஃபியிஸம்: ஸூஃபிகள், ஸாதுலிய்யா தரீக்கா, காதிரிய்யா தரீக்கா, நூரிய்யா தரீக்கா என்று பல தரீக்காக்களை உருவாக்கி மார்க்கத்தைப் பல பிரிவுகளாக பிரித்து விட்டனர். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on தரீக்காக்கள் இஸ்லாத்தில் உள்ளதா?

தவறிப்போன நம்பிக்கைகள்!

அன்றியும் (மறுமையில் அல்லாஹ் நிராகரித்துக் கொண்டிருந்த இவர்களை நோக்கி) “நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்து விட்டீர்கள்; இன்னும், நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது; உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறி விட்டன” (என்று கூறுவான்). (அல்குர்ஆன்: 6:94)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on தவறிப்போன நம்பிக்கைகள்!

தூக்கம்…

212- தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் நபி (ஸல்) அவர்கள் பள்ளியின் பக்கத்தில் ஒரு மனிதரோடு இரகசியமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு வராமல் நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் மக்கள் தூங்கி விட்டனர்.

புகாரி-642: அனஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தூக்கம்…

கொடிய பகைவன்

(நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கின்றான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி (சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாக கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான். (அல்குர்ஆன்: 2:204)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on கொடிய பகைவன்

கழிவறை துஆ….

211- நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்கு நுழையும்போது, இறைவா! அறுவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானை விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

புகாரி-142: அனஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கழிவறை துஆ….

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியிருந்தால்..

மேலும் அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணம் கூறுகிறான்: அது அச்சமில்லாமலும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன – ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்துக் கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும், பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான். (அல்குர்ஆன்: 16:112)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியிருந்தால்..

ஒரு முஸ்லிம் அசுத்தம் ஆகமாட்டான்…

210- நான் குளிப்புக் கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில் நின்று கொண்டிருந்த சமயம் நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் நழுவி விட்டேன். குளித்து விட்டுப் பின்னர் வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அபூஹூரைரா! எங்கு நழுவி விட்டீர்? என்று கேட்டார்கள். குளிப்புக் கடமையாகியிருந்தேன். எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே அமர்வதை வெறுத்தேன் எனக் கூறினேன். அப்போது ஸூப்ஹானல்லாஹ்! நிச்சயமாக ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-283: அபூஹூரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஒரு முஸ்லிம் அசுத்தம் ஆகமாட்டான்…

நீங்கள் அழைத்து கொண்டிருந்தவர்கள் எங்கே?

எவன் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனைச் செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கின்றானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக் கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) ‘அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே?’ எனக் கேட்பார்கள்; (அதற்கு) ‘அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்’ என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள். (அல்குர்ஆன்: 7:37)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நீங்கள் அழைத்து கொண்டிருந்தவர்கள் எங்கே?

தண்ணீர் இல்லாதபோது தயம்மம் செய்க..

206- நாங்கள் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். பைதாவு அல்லது தாத்துல்ஜைஸ், என்ற இடத்தை வந்தடைந்ததும் எனது கழுத்தணி அறுந்து (தொலைந்து) விட்டது. அதை தேடுவதற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கி விட்டோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூபக்ர் (ரலி)இடம் சிலர் வந்து (உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்து விட்டார்கள். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை. அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை என்று முறையிட்டனர். அபூபக்ர் (ரலி) (என்னருகே) வந்தபோது நபி (ஸல்) அவர்கள் தங்களது தலையை எனது மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்து விட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை, அவர்களிடத்திலும் தண்ணீர் இல்லை எனக் (கடிந்து) கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லி விட்டு, தங்களது கையால் எனது இடுப்பில் குத்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் தலை என் மடி மீது இருந்த காரணத்தினால் நான் அசையாது இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயம்முமுடைய வசனத்தை இறக்கினான். எல்லோரும் தயம்மும் செய்து கொண்டனர். இது பற்றிப் பின்னர் உஸைது பின் ஹூளைர் (ரலி) அபூபக்ருடைய குடும்பத்தினர்களே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத்துகளில் இது முதலாவதாக இல்லை. (எத்தனையோ பரக்கத்துகள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன) எனக் கூறினார். நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பி விட்டபோது அதன் அடியில் (காணாமல் போன) என் கழுத்தணி கிடந்ததைக் கண்டேன்.

புகாரி-334: ஆயிஷா (ரலி)

207- அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அபூ மூஸல் அஷ்அரி (ரலி) ஆகியோருடன் நானும் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி) அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி)இடம் அபூஅப்திர்ரஹ்மானே! குளிப்புக் கடமையான ஒருவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழவேண்டியதில்லை என அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) சொன்னார்கள். அதற்கு அபூ மூஸா (ரலி), நபி (ஸல்) அவர்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி)இடத்தில் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது என்று சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்? என்று கேட்டார். அதற்கு (அம்மார் (ரலி) உமர்(ரலி) இடம் அச்செய்தியைக் கூறியபோது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா? என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) பதில் கூறினார்கள். அப்போது அம்மார் (ரலி) அறிவிப்பதை விட்டு விடுங்கள். தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள் என்ற இந்த இறைவசனத்தை என்ன செய்வீர்கள்? என்று அபூமூஸா (ரலி) கேட்டார்கள். அதற்கு இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டால் யாருக்காவது தண்ணீர் கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளூ செய்வதை விட்டு விட்டு தயம்மும் செய்து விடுவார்கள் என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) தாம் சொல்லக்கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலே சொல்லிவிட்டார்கள். இதற்காகத் தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ? என ஷகீகிடம் நான் கேட்டேன். அதற்கு ஆம்! எனப் பதில் கூறினார்கள். ‘என்னை ஒரு வேலைக்காக நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தபோது எனக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே பிராணிகள் மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். இச்செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி (ஸல்) அà®
µà®°à¯à®•ள் தங்களின் இரண்டு கைகளால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் இரண்டு கைகளையும் தட்டிவிட்டு, தங்களின் வலக்கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தங்களின் இடக்கரத்தால் வலப்புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரண்டு கைகளால் தங்களின் முகத்தைத் தடவிவிட்டு ‘இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாக இருந்தது’ என்று கூறினார்கள் என்ற செய்தியை ‘உமர் (ரலி) அவர்களிடம், அம்மார் சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?’ என அபூ மூஸா (ரலி) கேட்டதற்கு, ‘அம்மார் சொன்னதில் உமர் (ரலி) திருப்திப்படவில்லை’ என்பது உமக்குத் தெரியாதா? என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) திரும்பக் கேட்டார்” என ஷகீக் அறிவித்தார்.

புகாரி-346: ஷகீக் பின் ஸலமா (ரலி)

208- ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்ய வேண்டும்? என்று வினவினார். அப்போது அங்கிருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) உமர் (ரலி) இடத்தில் நானும் நீங்களும் ஒரு பிரயாணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை. நானோ மண்ணில் புரண்டு விட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி (ஸல்) அவர்களிடம் நான் சொன்ன போது நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதி விட்டு அவ்விரு கைகளால் தமது முகத்தையும் இரு முன் கைகளையும் தடவிக் காண்பித்து இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்தது எனக் கூறிய சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா? என்று கேட்டார்கள்.

புகாரி-338: அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)

209- நானும் நபி (ஸல்) அவர்களுடைய மனைவியான மைமூனா (ரலி)உடைய அடிமை அப்துல்லாஹ் பின் அல் ஹாரிது பின் அஸ்ஸிம்மத்தில் அன்சாரி (ரலி)இடம் சென்றோம். எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் பீர்ஜமல் என்ற இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அவர்களைச் சந்தித்து ஸலாம் சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் சென்று (அதில் கையை அடித்து) தமது முகத்தையும் இருகைகளையும் தடவிய பின்னர் அவருடைய ஸலாத்திற்கு பதில் சொன்னார்கள் என்று அபூஜூஹைம் (ரலி) கூறினார்கள்.

புகாரி-337: அபூ ஜூஹைம் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தண்ணீர் இல்லாதபோது தயம்மம் செய்க..

ஷிர்க்கின் கேடுகளும் அதன் தீமைகளும்

நிச்சயமாக ஷிர்க்கின் தீமைகள் தனி மனித வாழ்க்கையிலும் கூட்டு வாழ்க்கையிலும் உண்டு. அவற்றில் மிக முக்கியமானவை பின்வருமாறு:

1. ஷிர்க் வைத்தல் மனித இனத்துக்கு இழிவை ஏற்படுத்துகின்றது. அது மனிதனுடைய கண்ணியத்தைக் குறைக்கின்றது. அவனுடைய அந்தஸ்தைத் தாழ்த்துகின்றது. அவனுடைய அந்தஸ்து யாதெனில், அல்லாஹ் அவனைப் பூமியில் தன்னுடைய பிரதிநிதியாக அமைத்து, அவனை கண்ணியப்படுத்தி, எல்லா வஸ்துக்களுடைய பெயர்களையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தான் என்பதாகும். Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on ஷிர்க்கின் கேடுகளும் அதன் தீமைகளும்