Monthly Archives: January 2007
ஜமாஅத் தொழுகைக்கு ஓடி வருதல் கூடாது..
350– தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி-908: அபூஹுரைரா (ரலி) 351– நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். … Continue reading
தொழுகைக்கு தக்பீர் கட்டியதும் என்ன ஓதுவது?
349– நபி (ஸல்) அவர்கள் தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சற்று நேரம் மவுனமாக இருப்பார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தாய் தங்களுக்கு அர்ப்பணம். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மவுனமாக இருக்கும் சமயத்தில் என்ன கூறுவீர்கள்? என்று நான் கேட்டேன். இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போல், எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ … Continue reading
தாகூத்துகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்
‘தாகூத்’ என்றால், அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படக் கூடியவையும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் வழிபடாமல், வணக்கத்தாலும், வழிபாட்டாலும் பின்பற்றுவதாலும் வேறொருவரைக் கொண்டு திருப்தியடைவதும் ஆகும். அல்லாஹ்வுக்கு அடிபணியுமாறும், தாகூத்துகளை விட்டு விலகி விடுமாறும் தத்தமது கூட்டத்தாருக்குக் கட்டளையிடுமாறு ரஸூல்மார்களை அல்லாஹ் அனுப்பினான். இதுபற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.
உலகின் ஒளி விளக்கு!
25:61 வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன். 15:16 வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து, பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.
தொழுகையை முடித்ததும் செய்யும் திக்ருகள்..
347– வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர எவரும் இல்லை. அவன் ஏகன் அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சி அவனுக்குரியது. புகழும் அவனுக்குரியது. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்பு உடையவனும் உன்னிடம் எந்தப் பயனும் அளிக்க முடியாது என்று நபி … Continue reading
ஸூஃபிகள் கொடுக்கும் தட்டு, தகடு, தாயத்து!
ஸூஃபியிஸம்: இக்கொள்கையை உடையவர்கள் தங்களின் ஸூஃபிகள் கொடுத்த தட்டு, தகடு, தாயத்து போன்றவற்றை ஆபத்து, சிக்கல்களிலிருந்து பாதுகாவல் பெறுவதற்காக பயன்படுத்துகின்றனர்.
அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரும் விஷயங்கள்..
344– நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுவதை நான் செவியுற்றுள்ளேன். புஹாரி-833: ஆயிஷா (ரலி) 345– இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். … Continue reading
கனவில் பொய்யுரைத்தல்
சிலர் காணாதக் கனவுகளைக் கண்டதாக இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். மக்களுக்கு மத்தியில் நற்பெயரையோ, சிறப்பையோ பெறுவதற்காக, அல்லது பொருளாதார இலாபம் பெறுவதற்காக அல்லது தம் எதிரிகளை அச்சுறுத்துவதற்காக இன்னும் இதுபோன்ற நோக்கங்களுக்காக இவ்வாறு செய்கின்றனர். பெரும்பாலான பாமரர்களுக்கு கனவுகளில் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் உள்ளது. அதனால் இப்பொய்க் கனவுகள் மூலம் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். காணாத கனவுகளைக் கண்டதாகக் … Continue reading
கப்ர் வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுதல்..
343– மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது) ‘மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர்’ என்று கூறினர். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி … Continue reading
மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-4)
மாதவிடாய் (ஹைல்) ஹைல் என்பது பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய்க்கு சொல்லப்படும். மாதவிடாயின் (ஹைலின்) காலம் பெண்களுக்கு ஒன்பது வயதிலிருந்து மாதவிடாய் வருவதற்கு வாய்ப்பிருக்கின்றது. அதனுடைய குறைந்த காலத்திற்கும் கூடிய காலத்திற்கும் அளவு கூறமுடியாது. அதாவது ஒவ்வொரு மாதத்திலும் மிகவும் குறைந்த நாட்களில் மாத்திரம் மாதவிடாயாக இருந்து அதிக நாட்கள் சுத்தமாக இருப்பது. அல்லது … Continue reading