Monthly Archives: December 2006
பாதி வளர்ந்தும், பாதி வளராமலும் இருக்கும் உறுப்புகள்
கேள்வி எண்: 17. மனிதன் தன் தாயின் கருவறையில் வளரும் ஒரு கட்டத்தில், அவனுடைய உறுப்புகள் பாதி வளர்ந்த நிலையிலும் பாதி வளராத நிலையிலும் இருப்பதாக நவீன அறிவியல் உலகம் கண்டறிந்த உண்மையை பிரதிபலிக்கும் திருமறை வசனம்
ஸுப்ஹு மஃரிப் தொழுகையில் சப்தமாக ஓதுதல்..
262– எங்களில் ஒருவர் தம் அருகிலிருப்பவரை அறிந்து கொள்ளும் (அளவில் வெளிச்சம் ஏற்படும்) சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுபவர்களாக இருந்தனர். அறுபது (வசனங்கள்) முதல் நூறு வரை ஸுப்ஹில் ஓதுவார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் போது லுஹர் தொழுபவாகளாக இருந்தனர். அஸரையும் தொழுவார்கள். (அஸர் தொழுகையை நிறைவேற்றிய) எங்களில் ஒருவர் மதீனாவின் கடைக் … Continue reading
நீதவான்களை புகார் கூறுவதில் பயந்து கொள்ளுங்கள்
261– (கஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) மீது கூஃபா வாசிகளில் சிலர் உமர் (ரலி) இடத்தில் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர் (ரலி) அவரை நீக்கி விட்டு அம்மார் (ரலி) அவர்களை அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து அபூஇஸ்ஹாக்! … Continue reading
ளுஹர் அஸ்ர் தொழுகையில் சப்தமின்றி ஓதுதல்..
260– லுஹர் தொழகையின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் நபி (ஸல்) அவர்கள் ஓதுவார்கள். (அந்த இரண்டு ரக்அத்துகளில்) முதல் ரக்அத்தில் நீண்ட அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் சிறிய அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்களை எங்களுக்கு கேட்குமாறு ஓதுவார்கள். அஸர் தொழுகையில் (முதல் இரண்டு ரக்அத்களில்) அல்ஹம்து … Continue reading
இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான ஸூஃபிகள்
ஸுஃபியிஸம்: பைஅத் கொடுக்கிறோம் என்ற பெயரில் அந்நிய ஆணும், பெண்ணும் தனியறையில் சந்திக்கின்றனர். இஸ்லாம்: ‘அந்நிய ஆணும், பெண்ணும் தனியறையில் சந்திப்பதை கடுமையாகக் கண்டித்த நபி (ஸல்) அவர்கள், தனித்திருக்கும் அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தானும்கூட இருப்பதாகக் கூறினார்கள்’
ஸுப்ஹுத் தொழுகையில் சப்தமாக ஓதுதல்..
259– நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் உக்காழ் எனும் சந்தையை நோக்கி புறப்பட்டனர். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கு வானுலகச் செய்திகள் தெரிவது தடுக்கப் பட்டுவிட்டது. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் எறியப்பட்டன. (ஒட்டுக் கேட்க சென்ற) ஷைத்தான்கள் தம் தலைவர்கள் இடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) திரும்பிய போது உங்களுக்கு என்ன … Continue reading
குர்ஆனை செவி தாழ்த்தி கேட்டல்..
257– (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டு வரும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் வதனத்திலேயே காணப்படலாயிற்று. எனவே, அல்லாஹ், ‘லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா” … Continue reading
தொழுகையில் குரலை உயர்த்துதல் பற்றி..
256. (நபியே!) உங்கள் தொழுகையில் நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம். எனும் (17:110ஆவது) இறைவசனம் (பின்வரும் சூழ்நிலையில்) அருளப்பெற்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுதுகொண்டு) இருந்தார்கள். (அவ்வாறு தோழர்களுடன் சேர்ந்து தொழும்போது) குரலை உயர்த்(திக் குர்ஆனை … Continue reading
தடை செய்யப்பட்ட வஸீலா
தடுக்கப்பட்ட வஸீலா என்பது மார்க்கத்தில் எவ்வித ஆதாரமுமற்றதாகும். இது பல வகைப்படும். 1. வஸீலா என்று சொல்லிக் கொண்டு இன்று நடைபெறுவது போன்று, மரணித்தவர்களிடம் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுதலும், அவர்களைக் கொண்டு உதவி தேடுவதும் மரணித்தவர்களிடம் வஸீலாத் தேடுவதாகும்.
பள்ளிக்கு வரும் பெண்கள்!
253- உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி- 5238: இப்னு உமர் (ரலி) 254- உமர் (ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமா அத்தாகத் தொழச் செல்வார். அவரிடம்(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும் இதை … Continue reading