இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான ஸூஃபிகள்

ஸுஃபியிஸம்: பைஅத் கொடுக்கிறோம் என்ற பெயரில் அந்நிய ஆணும், பெண்ணும் தனியறையில் சந்திக்கின்றனர்.

இஸ்லாம்: ‘அந்நிய ஆணும், பெண்ணும் தனியறையில் சந்திப்பதை கடுமையாகக் கண்டித்த நபி (ஸல்) அவர்கள், தனித்திருக்கும் அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தானும்கூட இருப்பதாகக் கூறினார்கள்’ அறிவிப்பாளர்: உமர் (ரலி), நூல்: திர்மிதி.

ஸுஃபியிஸம்: ‘மஃரிஃபத்’ என்ற நிலையை அடைந்த ஸூஃபிகள், இஸ்லாத்தின் கடமைகளான தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களைச் செய்யத் தேவையில்லை என்று நம்புகின்றனர். ஏனெனில் அவர்கள் ‘காண்பதெல்லாம் இறையுறுவே’ என்ற நிலையை எய்தி இறைவனோடு ஐக்கியமாகி விட்டதாகக் கூறுகின்றனர். அதாவது அவர்கள் ‘வஹ்தத்துல் உஜூத்’ (Unity of Existence) என்ற அத்வைத கோட்பாட்டை நம்புகின்றனர். (நவூதுபில்லாஹி மின்ஹா)

இஸ்லாம்: இது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான மாற்று மதத்தவரின் அத்வைத கருத்தாகும். இதை நம்புபவர் முஸ்லிமாகவே இருக்க முடியாது. அல்லாஹ் கூறுகிறான்:

“நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத்தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே என்னையே நீர் வணங்கும்; என்னைத் தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலநிறுத்துவீராக!” (அல்குர்ஆன்: 20:14)

“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்குர்ஆன்: 51:56)

“நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் எனும்) நேரான வழியாகும்” (அல்குர்ஆன்: 3:51)

“….நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது” (அல்குர்ஆன்: 4:103)

இதுபோன்ற இன்னும் ஏராளமான திருமறையின் வசனங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்; அவனை வனங்காமல் பெருமையடிப்பவர்களை அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பான் என வலியுறுத்துகிறது.

தொடரும்.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.