Author Archives: Jafar
கல்லறை மீது பள்ளி கட்டக்கூடாது.
305– உம்மு ஹபீபா (ரலி)வும் உம்மு ஸலமா (ரலி)வும் தாங்கள் அபீஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்க தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் … Continue reading
நடை, உடை, பாவனையில் ஆண், பெண்ணுக்கும் பெண், ஆணுக்கும் ஒப்பாகுதல்.
அல்லாஹ் மனிதர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்ற இயற்கை சுபாவம் என்னவெனில் ஒரு ஆண், எந்த ஆண்மையின் மீது அல்லாஹ் அவனைப் படைத்தானோ அந்த ஆண்மையையும் ஒரு பெண், எந்தப் பெண்மையின் மீது அல்லாஹ் அவளைப் படைத்தானோ அந்தப் பெண்மையையும் பேணி பாதுகாப்பதாகும். இது, மனிதர்களின் வாழ்க்கை எந்தக் காரண காரியங்களைக் கொண்டல்லாமல் சீர் பெற முடியாதோ அந்தக் காரண … Continue reading
கிப்லா மாற்றம் பற்றி….
302– நபி (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் கஃபாவை நோக்கித் தொழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்போது நீர் வானத்தை நோக்கி உமது முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம் (2:144) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான். உடனே கஃபாவை முன்னோக்கி … Continue reading
மஸ்ஜிதுன் நபவி நிர்மாணம்!
301– நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவின் மேற்புறத்தில் வசித்த வந்த பனூ அம்ரு பின் அவ்ஃபு எனும் கோத்திரத்தினருடன் பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பின்னர் பனூநஜ்ஜார் கூட்டத்தினரை அழைத்து வருமாறு கூறினார்கள். (தங்கள்) வாள்களைத் தொங்க விட்டவர்களாக அவர்கள் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் வாகனத்தின் மீது அமர்ந்திருந்ததும் வாகனத்தில் … Continue reading
பூமியின் கருவூலங்களுடைய சாவிகள்
300– நான் ஒருங்கிணைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் விதைக்கப்பட்டு எனக்கு உதவப்பட்டுள்ளது. (ஒருமுறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய சாவிகள் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூ ஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு, ‘நபி … Continue reading
முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும். 30:47
அல்லாஹ் இந்த (30:47) வசனத்தில் முஃமின்களுக்கு உதவி செய்வதாகவும், அவர்களது பகைவர்களுக்குத் தோல்வியை ஏற்படுத்துவதாகவும் உறுதிமொழி கூறுகின்றான். அல்லாஹ் தனது ரஸூலுக்கு பத்ரு, அஹ்ஸாப் போன்ற யுத்தங்களில் உதவி செய்துள்ளான். நபியவர்களது மௌத்துக்குப் பின்னால் அவர்களது தோழர்களுக்கும் உதவி செய்துள்ளான். எதிரிகள் தோல்விக்குமேல் தோல்வி கண்டார்கள்.
பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்
298-அபூதர் (ரலி) அறிவித்தார்: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அல் மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் … Continue reading
ஒரே ஆடையுடன் தொழுதல்….
294– ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடத்தில் ஒரே ஆடை அணிந்து கொண்டு தொழுவதைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் இருக்கின்றனவா? என்று கேட்டார்கள். புகாரி-358: அபூஹூரைரா (ரலி) 295– உங்களில் யாரும் தமது தோள் மீது எதுவும் இல்லாதிருக்க ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழ வேண்டாம் … Continue reading
அல்லாஹ்வின் அடையாளமான குர்பானிக்கான ஒட்டகங்கள்!
22:28. தங்களுக்குறிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரை சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
தொழுபவரின் முன்பாக படுத்தல்..
288– நபி (ஸல்) அவர்கள் எனது படுக்கை விரிப்பில் தொழும் போது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் குறுக்கே ஜனாஸா கிடப்பது போல் நான் கிடப்பேன். புகாரி-383:ஆயிஷா (ரலி) 289– நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களின் விரிப்பில் அவர்களுக்குக் குறுக்கே உறங்கிக் கொண்டிருப்பேன்.அவர்கள் வித்ருத் தொழ எண்ணும் போது என்னை எழச் செய்வார்கள். … Continue reading