Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

உடலுறவுக்குப் பின் குளிப்பு அவசியம்….

சட்ட மாற்றத்திற்கு முன் 196- நபி (ஸல்) அவர்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். தலையிலிருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நாம் உம்மை அவசரப்படுத்தி விட்டோம் போலும்? என்றார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். நீர் (மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எடுத்து … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on உடலுறவுக்குப் பின் குளிப்பு அவசியம்….

மறைவிடங்களைப் பேணுதல் பற்றி…

195- (நபி (ஸல்) அவர்கள் சிறு பிராயத்தில்) கஃபத்துல்லாஹ்வின் கட்டுமானப்பணி நடக்கும் போது அதைக் கட்டுபவர்களோடு கற்களை எடுத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) என் சகோதரரின் மகனே! உன் வேஷ்டியை அவிழ்த்து அதை உன் தோள் மீது வைத்து அதன் மேல் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மறைவிடங்களைப் பேணுதல் பற்றி…

தனிமையில் நிர்வாணமாகக் குளித்தல் பற்றி…

194- இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் அல்லாஹ்வின் மீதாணையாக மூஸா விரை வீக்கமுடையவர் எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை என இஸ்ரவேலர்கள் கூறிக் கொண்டார்கள். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தமது ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்து … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தனிமையில் நிர்வாணமாகக் குளித்தல் பற்றி…

குளிக்கும்போது திரையிட்டு கொள்ளுதல்..

193- மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி) நபி (ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது யாரவர்? எனக் கேட்டார்கள். நான் அபூதாலிபின் மகள் உம்முஹானி என்றேன். உடனே உம்முஹானியே! வருக! … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on குளிக்கும்போது திரையிட்டு கொள்ளுதல்..

மாதவிடாயில் விடுபட்ட தொழுகையை…

192- ஒரு பெண் ஆயிஷா (ரலி)விடம் பெண்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமான பின் தொழுவதால் மட்டும் போதுமானதா? (அல்லது விடுபட்ட தொழுகையையும் தொழ வேண்டுமா?) என்று கேட்டபோது நீ (காரிஜியாக்களின் பிறப்பிடமான) ஹரூர் என்னுமிடத்தைச் சார்ந்த பெண்ணா? நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். எங்களிடம் விடுபட்ட தொழுகையை தொழுமாறு ஏவமாட்டார்கள் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மாதவிடாயில் விடுபட்ட தொழுகையை…

தொடர் இரத்தப்போக்கு உள்ள பெண் பற்றி…

190- அபூ ஹூபைஷ் என்பாரின் மகள் பாத்திமா என்ற பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப் போக்கு ஏற்படும் ஒரு பெண். (அதிலிருந்து) நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா? எனக் கேட்டார். அதற்கு இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொடர் இரத்தப்போக்கு உள்ள பெண் பற்றி…

மாதவிடாய் பெண் எவ்வாறு சுத்தம் செய்வது…

189- ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து மாதவிடாய் நின்றபின் எப்படிக் குளிக்க வேண்டும்? என வினவினார். நபி (ஸல்) அவர்கள் அவள் குளிக்கும் முறையை அவளுக்கு கூறிவிட்டு கஸ்தூரி வைக்கப்பட்ட பஞ்சை எடுத்து அதனால் சுத்தம் செய், எனக் கூறினார்கள். அப்பொது அப்பெண் நான் எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? எனக் கேட்டார். … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மாதவிடாய் பெண் எவ்வாறு சுத்தம் செய்வது…

மூன்று முறை தலைக்கு நீர் ஊற்றுதல்…

187- நானோ மூன்று முறை எனது தலையில் தண்ணீரை ஊற்றுவேன். இதை அறிவிக்கும் ஜூபைர் பின் முத்யிம் (ரலி) நபி (ஸல்) அவர்கள் தாங்கள் இரு கைகளால் சைகை செய்து காட்டினார்கள் என்று குறிப்பிட்டார்கள். புகாரி-254: ஜூபைர் பின் முத்யிம் (ரலி) 188- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மூன்று முறை தலைக்கு நீர் ஊற்றுதல்…

குளிக்கும் நீரின் அளவு…

184-ஃபரக் என்ற ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் சேர்ந்து குளித்தோம். (ஃபரக் என்பது இரு கை கொள்ளளவு தண்ணீரின் பண்ணிரண்டு மடங்காகும்) புகாரி-250: ஆயிஷா (ரலி) 185- நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் நபி (ஸல்) அவர்களுடைய குளிப்பு எப்படியிருந்தது? என்று … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on குளிக்கும் நீரின் அளவு…

கடமையான குளிப்பின் முறை

182- நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்கு தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக்கரத்தால் தமது இடது கையில் தண்ணீரை ஊற்றி இரு கைகளையும் கழுவினார்கள். தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தமது முகத்தைக் கழுவினார்கள். மேலும் தமது … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கடமையான குளிப்பின் முறை