Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்
தொழுகைக்கு தக்பீர் கட்டியதும் என்ன ஓதுவது?
349– நபி (ஸல்) அவர்கள் தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சற்று நேரம் மவுனமாக இருப்பார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தாய் தங்களுக்கு அர்ப்பணம். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மவுனமாக இருக்கும் சமயத்தில் என்ன கூறுவீர்கள்? என்று நான் கேட்டேன். இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போல், எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ … Continue reading
தொழுகையை முடித்ததும் செய்யும் திக்ருகள்..
347– வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர எவரும் இல்லை. அவன் ஏகன் அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சி அவனுக்குரியது. புகழும் அவனுக்குரியது. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்பு உடையவனும் உன்னிடம் எந்தப் பயனும் அளிக்க முடியாது என்று நபி … Continue reading
அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரும் விஷயங்கள்..
344– நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுவதை நான் செவியுற்றுள்ளேன். புஹாரி-833: ஆயிஷா (ரலி) 345– இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். … Continue reading
கப்ர் வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுதல்..
343– மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது) ‘மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர்’ என்று கூறினர். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி … Continue reading
தொழுகையை முடித்ததும் தக்பீர் கூறுதல்..
342– நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள் என்பதைத் தக்பீர் மூலம் நான் அறிந்து கொள்வேன். புஹாரி-842: இப்னு அப்பாஸ் (ரலி)
சில குர்ஆனிய வசனங்களுக்கு ஸஜ்தா செய்தல்..
338– நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஒதிக் காட்டும் போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நாங்கள் அனைரும் ஸஜ்தாச் செய்வோம். புகாரி- 1075 இப்னு உமர் (ரலி) 339– இப்னு மஸ்வூத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஒதும் … Continue reading
தொழுகையில் ஸஜ்தா ஸஹ்வு செய்தல்..
334– தà¯à®´à¯à®à¯à®à¯à®à®¾à® பாà®à¯à®à¯ à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà®à¯à®à®¾à®²à¯ பாà®à¯à®à¯ à®à®ªà¯à®¤à®®à¯ தனà®à¯à®à¯à®à¯ à®à¯à®à¯à®à®¾à®®à®²à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à®±à¯à®à®¾à® à®·à¯à®¤à¯à®¤à®¾à®©à¯ பின௠தà¯à®µà®¾à®°à®¤à¯à®¤à®¿à®©à¯ வழியாà®à®à¯ à®à®¾à®±à¯à®±à¯à®µà®¿à®à¯à®à®µà®©à®¾à® à®à®à®¿ விà®à¯à®à®¿à®±à®¾à®©à¯. பாà®à¯à®à¯ à®®à¯à®à®¿à®¨à¯à®¤à®¤à¯à®®à¯ திரà¯à®®à¯à®ªà®¿ வநà¯à®¤à¯ à®à®à®¾à®®à®¤à¯ à®à¯à®±à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯à®®à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯ à®à®à¯à®à®¿à®±à®¾à®©à¯. à®à®à®¾à®®à®¤à¯ à®®à¯à®à®¿à®¨à¯à®¤à®¤à¯à®®à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯ வநà¯à®¤à¯ தà¯à®´à¯à®ªà®µà®°à®¿à®©à¯ à®à®³à¯à®³à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®à¯à®°à¯à®µà®¿ ‘à®à®¤à¯ à®à®¤à¯à®¯à¯à®²à¯à®²à®¾à®®à¯ நினà¯à®¤à¯à®¤à¯à®ªà¯à®ªà®¾à®°à¯’ à®à®©à®à¯ à®à¯à®±à®¿, ஠வர௠à®à®¤à¯à®µà®°à¯ நினà¯à®¤à¯à®¤à¯à®ªà¯ பாரà¯à®¤à¯à®¤à®¿à®°à®¾à®¤à®µà®±à¯à®±à¯à®¯à¯à®²à¯à®²à®¾à®®à¯ நினà¯à®µà¯à®à¯à®à®¿ … Continue reading
வெள்ளைப்பூண்டு வெங்காயம் உண்பது பற்றி..
331– யார் இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறாரோ அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம் என்று கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி-853: இப்னு உமர் (ரலி) 332– ஒரு மனிதர் அனஸ் (ரலி) இடம் வெங்காயம் பற்றி நபி (ஸல்) அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அனஸ் … Continue reading
தொழுகைக்கு முன் உணவு தயாராக இருந்தால்..
327– இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி: அனஸ் பின் மாலிக் (ரலி) 328– இரவு நேர உணவு தயாராகி விடுமானல் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை அருந்துங்கள். உங்கள் … Continue reading
சித்திரங்களாலான ஆடையை….
326– கோடுகள் போடப்பட்ட ஒரு மேலாடை அணிந்து நபி (ஸல்) அவர்கள் தொழதார்கள். அதன் கோடுகள் என் கவனத்தை திருப்பிவிட்டன. இதை அபுஜஹ்மிடம் கொடுத்து விட்டு மற்றொரு ஆடையைக் கொண்டு வாருங்கள்! என்று கூறினார்கள். புஹாரி-752: ஆயிஷா (ரலி)