தொழுகைக்கு முன் உணவு தயாராக இருந்தால்..

327– இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி: அனஸ் பின் மாலிக் (ரலி)


328– இரவு நேர உணவு தயாராகி விடுமானல் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை அருந்துங்கள். உங்கள் உணவை(த் தொழுகையை விட) முற்படுத்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-672: அனஸ் (ரலி)

329– இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-671: ஆயிஷா (ரலி)


330– உங்களில் ஒருவருடைய இரவு உணவு வைக்கப்பட்டு, (மஃரிபுத்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடுமானால் முதலில் உணவை அருந்துங்கள். உணவை உண்டு முடிவது வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-673: இப்னு உமர் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.