நிர்பந்தமான நேரத்தில்……

156-நானும் நபி (ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு சுவரின் பின்னாலுள்ள ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்தார்கள். உங்களில் ஒருவர் எவ்வாறு நிற்பாரோ அதைப் போன்று நின்றவர்களாகச் சிறுநீர் கழித்தார்கள். அப்போது நான் கொஞ்சம் ஒதுங்கிச் சென்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என் பக்கம் கை அசைத்து அழைத்தார்கள். நான் வந்து அவர்கள் தங்கள் தேவையை நிறைவேற்றும் வரை அவர்களின் பின் பக்கம் நின்று கொண்டிருந்தேன்.
புகாரி-225:ஹூதைஃபா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நிர்பந்தமான நேரத்தில்……

அல்லாஹ்வின் உதவியற்ற மக்கள்!

மேலும்: இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை; இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை; எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை. (அல்குர்ஆன்: 22:71)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ்வின் உதவியற்ற மக்கள்!

காலுறைகள் மீது மஸஹ் செய்தல் பற்றி…

155- ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் உளூ செய்து, தமது இரு கால் உறையின் மீது மஸஹ் செய்து விட்டுப் பின்னர் எழுந்து தொழுவதை நான் கண்டேன். இது பற்றி ஜரீர் (ரலி)இடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன் எனப் பதில் கூறினார்கள்.

புகாரி-387: ஹம்மாம் பின் ஹாரிஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on காலுறைகள் மீது மஸஹ் செய்தல் பற்றி…

புகழ் மிக்க அர்ஷின் அதிபதி!

“அல்லாஹ் தான் வானங்கள் பூமி இவற்றுக்கிடையிலுள்ளவை அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்து பிறகு அர்ஷின் மீது ஸ்திரப்பட்டான். உங்களை இரட்சிப்பதற்கும், உங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கும் அவனை தவிர வேறு ஒருவருமில்லை. இதனை நீங்கள் சிந்திக்கவேண்டாமா?”. (அல்குர்ஆன்: 32:4)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on புகழ் மிக்க அர்ஷின் அதிபதி!

ஈஸாவே! (ஏசுவே!) நினைத்துப் பாரும்

3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான் இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகி விடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).

அல் குர்ஆன்: ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)

5:199. (நபியே) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் (நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்த போது) என்ன பதில் அளிக்கப் பட்டீர்கள்? என்று கேட்பான்; அதற்கு அவர்கள்; அது பற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்; என்று கூறுவார்கள்.

5:110. அப்போது அல்லாஹ் கூறுவான்; “மர்யமுடைய மகன் ஈஸாவே! (ஏசுவே) நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்) வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்தையும் (நினைத்துப் பாரும்) இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தை போலுண்டாக்கி அதில் நீர் ஊதிய போது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்து கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயிலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்த போது, அவர்களில் நிராகரித்தவர்கள் “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.

அல் குர்ஆன்: அல் மாயிதா (உணவுத் தட்டு)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on ஈஸாவே! (ஏசுவே!) நினைத்துப் பாரும்

மகத்துவமிக்க அல்லாஹ்வின் சாட்சி!

(நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்; அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்; மேலும் சாட்சி கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன். (அல்குர்ஆன்: 4:166)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மகத்துவமிக்க அல்லாஹ்வின் சாட்சி!

4. அவ்லியாக்களின் பொருட்டால் தேவைகளைக் கேட்குதல்

மார்க்கத்தில் ஓரளவு விபரமுள்ள இன்னும் சிலர் அவ்லியாக்களிடம் நேரடியாக கேட்டுப்பெறுவது தான் பாவம். ஆனால் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாக பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம் என்கின்றனர். இவ்வாறு கேட்பதற்கு மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால் நம்மைவிட நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள். அதிலும் உமர் (ரலி) அவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவர்களின் மார்க்க ஞானத்தை எவராலும் குறைவாக எடை போட்டுவிட முடியாது. அத்தகைய உமர் (ரலி) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் மழைக்காக நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் இறைவனிடம் கேட்டிருக்கலாம். ஏனென்றால் அப்பாஸ் (ரலி) அவர்களைவிட நபி (ஸல்) அவர்களே இறைவனிடம் மிக நெருக்கமானவர்கள். அந்தஸ்திலும் உயர்ந்தவர்கள். அவ்வாறு உமர் (ரலி) அவர்கள் கேட்காததிலிருந்து மறைந்தவர்களின் பொருட்டால் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது. ஒருக்கால் அனுமதிக்கப்பட்டது உமர் (ரலி) அவர்களுக்கு தெரியாமலிருந்தால், இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள அப்பாஸ் (ரலி) அவர்களோ இதை அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்களோ உமர் (ரலி) அவர்களுக்கு உணர்த்தியிருப்பார்கள். நம்மைவிட அதிகம் மார்க்கத்தை அறிந்து செயல்பட்ட நபித்தோழர்களான உமர் (ரலி) அப்பாஸ் (ரலி) அனஸ் (ரலி) போன்றவர்கள் அதுபோல் செய்து நமக்கு வழிகாட்டியிருப்பார்கள். அவ்வாறு செய்யாததிலிருந்து அவ்லியாக்களின் பொருட்டால் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

‘ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு தொழ வைத்தார்கள். பின்பு எங்களை நோக்கி நீண்ட உரை நிகழ்த்தினார்கள். அப்பொழுது கண்கள் கண்ணீரை சொறிந்தன. இதயங்கள் அச்சத்தால் நடுங்கின. ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இது விடை பெறுபவரது உரையாக அல்லவா தெரிகிறது. எனவே தாங்கள் எதைக் குறித்து எங்களுக்கு கட்டளையிடுகிறீர்கள் என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுமாறு உங்களுக்கு கட்டயிடுகிறேன். ஒரு அபிஸீனிய அடிமை உங்களுக்கு தலைமையேற்றால் கூட அவருக்கு செவிமடுங்கள். எனக்கடுத்து நீங்கள் நிறைய கருத்துவேற்றுமைகளை சந்திப்பீர்கள். அப்போது எனது வழிமுறைகளையும், நேர்வழி நடந்த எனது கலீஃபாக்களின் நடைமுறைகளையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! புதுமைகளை விட்டொழியுங்கள்! ஒவ்வொரு புதுமையும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடே! என்று கூறினார்கள்’ அறிவிப்பாளர்: இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) நூல்: அபூதாவூத் (3991), இப்னுமாஜா (42), அஹ்மத் (16521), தாரமி (95).

மேற்கண்ட ஹதீஸில் தனக்குப்பிறகு பின்பற்றுவதற்கு தகுதியான அபூபக்கர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகிய நால்வரை குறிப்பிட்டு அவர்களை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது.

மாறாக அவ்லியாக்களின் பொருட்டால் கேட்கலாம், அவ்வாறு கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள்:

* மேற்கண்ட ஹதீஸை நிராகரிக்கின்றனர்.

* உமர், அப்பாஸ், அனஸ் ரலியல்லாஹு அன்ஹும் போன்ற நபித்தோழர்களுக்கு தெரியாதது தங்களுக்கு தெரிந்து விட்டதாக வாதிடுகின்றனர்.

* அவ்வாறு எண்ணுவதன் மூலம் நபித்தோழர்களை குறைத்து மதிப்பிட முனைகின்றனர். நவூதுபில்லாஹி மின்ஹா. இத்தவற்றை விட்டும் நாம் நீங்கிக் கொள்ள வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக! ஆமீன்!

ஆய்வு தொடரும்

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on 4. அவ்லியாக்களின் பொருட்டால் தேவைகளைக் கேட்குதல்

தௌஹீதுவாதி யார்?

எவனொருவன் மேலே கூறப்பட்ட மூன்று வகையான ஷிர்க்குகளை விட்டு நீங்கி, அல்லாஹ்வை, வணக்கத்திலும் துஆவிலும், அவனுடைய ஸிபத்துகளிலும் ஒருமை (தனிமை)ப்படுத்துகிறானோ, அவன்தான் ஏகத்துவவாதிக்குரிய எல்லாவித சிறப்புகளையும் அடைந்தவனாவான். ஷிர்க்கான அவற்றில் ஒன்றையேனும் அவனும் நம்புவானென்றால் அவன் ஏகத்துவவாதியாக மாட்டான். பின்வரும் அல்குர்ஆன் வசனம் அதுபற்றிக் கூறுகின்றது.

“அவர்கள் இணைவைத்தாலோ, அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்கள் யாவும் அவர்களை விட்டு அழிந்து விடும்” (6:88)

ஷிர்க்கு வைத்தவன் தௌபாச்செய்து அல்லாஹ்வுடன் இணையாக்கப்பட்டதை விட்டு முற்றாக விலகி விடுவானென்றால் அவன் ஏகத்துவவாதியாகி விடுகிறான். அல்லாஹ்வே! எங்களை ஏகத்துவவாதிகளாக ஆக்கிவிடுவாயாக! ஷிர்க்கு வைப்பவர்களாக ஆக்கிவிடாதே!

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தௌஹீதுவாதி யார்?

நீரால் சுத்தப்படுத்துதல் பற்றி…

153- நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் செல்லும் போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரப்பிய தோல் பாத்திரத்தையும் ஒரு கைத்தடியையும் சுமந்து செல்வோம் (தேவையை முடித்து) தண்ணீரால் அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்.

புகாரி-152: அனஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நீரால் சுத்தப்படுத்துதல் பற்றி…

மனிதர்கள் ஒன்று சேர்க்கப்படும் நாள்!

(நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்டவெளியாக காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். (அல்குர்ஆன்: 18:47)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மனிதர்கள் ஒன்று சேர்க்கப்படும் நாள்!