Monthly Archives: October 2006
கடமையான குளிப்பு!
171-நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் மொண்டு) கடமையான குளிப்பை நிறைவேற்றுவோம். புகாரி-322: உம்முஸலமா (ரலி)
சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன
“இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எண்ணி எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே! நீர் கேளும். மேலும் நபியே! நீர் சொல்லும் ‘சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய … Continue reading
மாதவிடாய் ஏற்பட்ட மனைவியுடன் உறங்குதல்.
170- நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. மாதவிடாய் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் என்று … Continue reading
கைவிரல் ரேகையின் முக்கியத்துவம்
கேள்வி எண்: 13. மனிதன் இறந்து மக்கி மண்ணாகிப் போனபின், அவனை உயிர்ப்பிப்பதோடு, அவனின் கைவிரல் ரேகையைக்கூட இறைவன் செவ்வையாக உருவாக்குவான் என்று கூறுவதன் மூலம் கைவிரல் ரேகையின் இன்றைய அதிமுக்கியத்துவத்தை அன்றே பறைசாற்றிய இறைவசனம் எது? பதில்: “மரித்து (உக்கிப்போன) மனிதனின் எழும்புகளைநாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அல்ல, அவன் … Continue reading
பூர்த்தியான அல்லாஹ்வின் ஒளி!
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்குர்ஆன்: 9:32)
சுப்ஹானல்லாஹ்!
169- நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள். புகாரி-303: மைமூனா (ரலி)
குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டு போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன்: 47:24)
மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுதல் பற்றி…
168- (நபி (ஸல்) அவர்களது மனைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் விரும்பினால் மாதவிடாய் போகும் இடத்தை துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டு விட்டு அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப் படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தமது மனதைக் … Continue reading
ஷிர்க் தோன்றக்கூடிய இடங்களில் சில….
இஸ்லாமிய உலகில் பரவியிருக்கும் ஷிர்க்குகள் வெளியாகக்கூடிய இடங்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களில் மாபெரும் துன்பமாகும். முஸ்லிம்களிடத்தில் தௌஹீதை முன்வைக்கின்றவர்கள் சந்திக்கும் சோதனைகள் கஷ்டங்கள் முதலானவைகளும். இதல்லாத இன்னும் பல நோவினைகளும் இதன் காரணமாகத்தான். முஸ்லிம்களிடத்தில் நம்பிக்கையிலும் நடத்தையிலும் ஷிர்க் வெளியாகின்றது. அதிகமான முஸ்லிம் நாடுகளில் உள்ள ஷிர்க் நடைபெறக்கூடிய இடங்கள் இதற்குச் சான்றாய் அமைந்துள்ளதைக் காணலாம். … Continue reading
ஏமாற்றும் சொற்ப சுகமான இவ்வுலக வாழ்க்கை
57:20. அறிந்து கொள்ளுங்கள்; “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும், (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; … Continue reading