Author Archives: Jafar
மக்கா வெற்றி போது ஓதிய குர்ஆனிய வசனங்கள்..
457. ”இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தம் ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி ‘அல்ஃபதஹ்’ என்னும் (48-வது) அத்தியாயத்தை ‘தர்ஜுஉ’ என்னும் ஓசை நயத்துடன் ஒதிக்கொண்டிருந்தததை கண்டேன்” என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) கூற கேட்டேன். மக்கள் என்னைச் சுற்றிலும் திரண்டு விடுவார்கள் என்றில்லாவிட்டால் அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அவர்கள் ‘தர்ஜுஉ’ செய்து ஓதிக்காட்டியதைப் … Continue reading
குர்ஆனை இனிய ராகத்துடன் ஓதுதல்..
455.அல்லாஹ், தன் தூதர் (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அதனைச் செவிகொடுத்துக் கேட்டது போல் வேறெதையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஸலமா (ரஹ்) அவர்களின் தோழர் ஒருவர் (அப்துல் ஹமீத் இப்னு அப்திர் ரஹ்மான்) கூறுகிறார்: குர்ஆனை இனிமையாக ராகமாக ஓதுதலாகும். புஹாரி :5023 அபூஹூரைரா … Continue reading
குர்ஆனிய வசனங்கள் சில மறந்துவிடுதல் பற்றி..
451.ஒருவர் இரவு நேரத்தில் ஓர் அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருப்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன இன்ன அத்தியாயங்களிலிருந்து எனக்கு மறக்க வைக்கப்பட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டி விட்டார்” என்று கூறினார்கள். புஹாரி:5038 ஆயிஷா (ரலி) 452.குர்ஆனை(ப் பார்த்தோ மனப்பாடமாகவோ) ஓதுகிறவரின் நிலையெல்லாம், கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தின் உரிமையாளரின் … Continue reading
கிரகணம் வந்தால் ஒரு தலைவர் இறந்து விடுவாரா?
கேள்வி எண்: 25. கிரகணங்கள் என்பது யாருடைய பிறப்பு – இறப்பிற்காக ஏற்படுவதில்லை. மாறாக இது இறைவன் வகுத்த ஒரு நியதியே என்று கூறியதன் மூலம் கிரகணங்களைக் குறித்த மூட நம்பிக்கைகளை அன்றே களைந்தெறிந்த நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை கூறுக.
தொழுகையில் தாம் எதை ஓதுகிறோம் என்ற உணர்வுடன்
448.நபி (ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. ‘இந்தக் கயிறு ஏன்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘இது ஸைனபு (ரலி)க்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றில் சாய்ந்து கொள்வார்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், … Continue reading
துன்பம் ஏற்படுவதற்கான காரணங்களும் அவற்றை நீக்குவதற்கான வழிகளும்.
துன்பங்கள் ஏற்படுவது பற்றியும் அவற்றை அடியார்களிடமிருந்து அல்லாஹ் நீக்குவது பற்றியும் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி..
442.நபி (ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கும் எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும் – அல்லது அவரின் காதில் – ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று பதிலளித்தார்கள். புஹாரி:3270 இப்னு மஸ்வூத் (ரலி) 443.நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் … Continue reading
வேதங்களை நம்புவது! (பாகம்-1)
வேதம் என்றால் எந்தவித மறுப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய சொல், சட்டம், வாழ்க்கை நடைமுறை, வணக்க வழிபாட்டு முறைகளைக் கூறக்கூடியவை போன்றவற்றைக் கூறுகிறார்கள். ஒன்றை வேதம் என்று ஏற்றுக் கொள்ளவேண்டுமானால் அது குறைபாடற்ற இறைவனிடமிருந்து வந்திருக்க வேண்டும். மனிதன், மனிதர்கள், பேரறிஞர்கள், ஒரு குழு, ஒருநாடு ஏன் முழு உலகும் சேர்ந்து உருவாக்கினாலும் அப்படிப்பட்ட … Continue reading
இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல்.
437-நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்கிக்) கயிற்றை … Continue reading
மரணசாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்
பிறருக்குத் தீங்கிழைத்தல் என்பதும் இல்லை, பிறரால் தீங்கிற்கு உள்ளாவதென்பதும் இல்லை என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை அம்சமாகும். அந்த அடிப்படையில் ஒருவன் தனது வாரிசுகளுக்கு (மரணசாசனத்தின் மூலம்) தீங்கிழைப்பது தடை செய்யப்பட்டதாகும். இவ்வாறு செய்கின்றவனுக்கு நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது.