Category Archives: ஈமான் (நம்பிக்கை)
குர்ஆன் வசனங்களை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றும் ஸூஃபிகள்
ஸூஃபியிஸம்: ஸூஃபிகளில் சிலர் இறைவனைப் பெண்ணாக வர்ணிக்கிறார்கள். உதாரணமாக ஸூஃபி இப்னுல் ஃபாரிஸ் என்பவர் தன்னுடைய ‘கஷ்ஃபுல் உஜூஹ்’ என்ற நூலில் இவ்வாறு வர்ணித்திருக்கிறார். (நவூதுபில்லாஹி மின்ஹா)
அல்லாஹ்வின் திருநாமம் அவர்கள் முன் கூறப்பட்டால்…
ஸுஃபியிஸம்: இதைப் பின்பற்றுபவர்கள் ‘திக்ரு’ (ஹல்கா) செய்கிறோம் என்ற பெயர்களில் உரத்த குரலில் சப்தமாக ‘அல்லாஹ்’ எனக்கூவி அழைத்து பாட்டிசைத்து உடலை அசைத்து ஆட்டம் போடுகின்றனர்.
இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான ஸூஃபிகள்
ஸுஃபியிஸம்: பைஅத் கொடுக்கிறோம் என்ற பெயரில் அந்நிய ஆணும், பெண்ணும் தனியறையில் சந்திக்கின்றனர். இஸ்லாம்: ‘அந்நிய ஆணும், பெண்ணும் தனியறையில் சந்திப்பதை கடுமையாகக் கண்டித்த நபி (ஸல்) அவர்கள், தனித்திருக்கும் அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தானும்கூட இருப்பதாகக் கூறினார்கள்’
அனாச்சாரங்களைப் பின்பற்றும் ஸூஃபிகள்
ஸூஃபியிஸம்: ஸூஃபிகள், ஸாதுலிய்யா தரீக்காவின் ஹல்கா (திக்ரு) முறை, காதிரிய்யா தரீக்காவின் ராத்தீபு (திக்ரு) முறை, நூரிய்யா தரீக்காவின் வணக்கமுறை என ஒவ்வொரு தரீக்காவினரும் பல்வேறு வணக்க முறைகளை உருவாக்கி இருக்கின்றனர்.
தரீக்காக்கள் இஸ்லாத்தில் உள்ளதா?
ஸூஃபியிஸம்: ஸூஃபிகள், ஸாதுலிய்யா தரீக்கா, காதிரிய்யா தரீக்கா, நூரிய்யா தரீக்கா என்று பல தரீக்காக்களை உருவாக்கி மார்க்கத்தைப் பல பிரிவுகளாக பிரித்து விட்டனர்.
ஸூஃபியிஸம் – குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு
தகவல் மூலம்: www.islam-qa.com ‘ஸூஃபியிஸம்’ (Sufyism) என்ற சொல் நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது, நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் காலத்திலோ அல்லது தாபியீன்கள், தபஅ தாபியீன்கள் காலத்திலோ அல்லது கண்ணியத்திற்குரிய நாற்பெரும் இமாம்களின் காலத்திலோ இருந்ததில்லை. ‘ஸூஃபியிஸம்’ எங்கிருந்து இஸ்லாத்திற்கு வந்தது என்று ஆராய்ந்தவர்கள் இந்தப்பெயர் வந்ததற்கான இரண்டு காரணங்களைக் கூறுகின்றனர்.
6. ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகி விடுமா?
சிலர் இதைப்பற்றி எந்த ஒரு ஆலிமும் எதுவும் கூறியதில்லையே, நீங்கள் தானே புதிதாக கூறுகிறீர்கள்! அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேட்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு கற்றறிந்த அறிஞர் – ஆலிம் எவரும் இத்தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருந்ததில்லை. இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதக செயலாகிய நல்லடியார்களிடம் கையேந்துவதை ஆரம்பக்கால முதற்கொண்டே … Continue reading
5. முன்னோர்கள் செய்தது மார்க்கமாகி விடாது
ஒரு சிலருக்கு தெளிவு ஏற்பட்டாலும் அவரை ஷைத்தான் இவ்வாறு குழப்புவான். ‘தலைமுறை தலைமுறையாக நமது முன்னோர்களும், தாய், தந்தையரும் நல்லடியார்களிடம் பிரார்த்தித்து வந்திருக்கிறார்களே, அவர்கள் செய்தவை அத்தனையும் தவறானவையா? அவர்கள் எல்லோரும் பாவிகளா? அவர்கள் எல்லோரும் நரகத்திற்குத்தான் செல்வார்களா? என்று ஷைத்தான் சிலரின் உள்ளத்தில் முன்னோர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி, அவர்கள் குர்ஆன் மற்றும் … Continue reading
4. அவ்லியாக்களின் பொருட்டால் தேவைகளைக் கேட்குதல்
மார்க்கத்தில் ஓரளவு விபரமுள்ள இன்னும் சிலர் அவ்லியாக்களிடம் நேரடியாக கேட்டுப்பெறுவது தான் பாவம். ஆனால் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாக பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம் என்கின்றனர். இவ்வாறு கேட்பதற்கு மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால் நம்மைவிட நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள். அதிலும் உமர் (ரலி) … Continue reading
3. வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே!
நாங்கள் பாவங்கள் செய்த பாவிகள். ஆகவே எங்களின் பிரார்த்தனைகள் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். எனவே பாவங்களே செய்யாத இறை நேசசெல்வர்களிடம் எங்களின் தேவைகளைக் கூறினால் அவர்கள் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைத்து எங்களின் தேவைகளைப் பெற்றுத் தருவார்கள் என சிலர் கூறுகின்றனர். நாம் பாவங்கள் நிறையச் செய்தவர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் அளவற்ற அருளாளனும், நிகரற்ற … Continue reading