Category Archives: கேள்வி பதில்
பால் உற்பத்தியாகும் இடம்
கேள்வி எண்: 7. கால்நடைகளுக்கு பால் உற்பத்தியாகும் இடம் குறித்து திருமறை கூறும் வசனத்தை இன்றைய நவீன விஞ்ஞானக் கருத்துடன் விளக்குக: பதில்: உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார். இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் … Continue reading
விலகாமல் செல்லும் கோள்கள்
கேள்வி எண்: 6. எந்நேரமும் சதா சுழன்று, சுற்றிக் கொண்டிருக்கும் பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் இதர கோள்களும் அதனதன் பாதைகளிலிருந்து விலகி சென்றிடாமல் தாம் தடுத்துக் கொண்டிருப்பதாக இறைவன் கூறும் திருமறை வசனம் எது?பதில்: “நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான். அவை இரண்டும் … Continue reading
அணுவைவிட மிகச்சிறிய பொருட்களும் உண்டு
கேள்வி எண்: 5. அணுவைவிட மிகச்சிறிய பொருட்களும் உண்டு என்ற இன்றைய அறிவியல் கருத்தை கூறும் வசனம் எது? பதில்: இதன் வசனம் 34:3, 10:61. சிறு விளக்கம்: அறிவியலில் இயற்பியல் என்றொரு பிரிவு இருப்பதை நாம் அறிவோம். இதன் உட்பிரிவுதான் அணுக்களைப் பற்றிய பாடமாகும். அணு என்பது ஒரு பொருளின் மிக மிக சிறிய … Continue reading
தூக்கம் சிறு மரணமே!
கேள்வி எண்: 4. பிரிட்டீஷ் விஞ்ஞானி டாக்டர் அப்துல்லா அலிசன்-ஐ பிரமிக்கச் செய்து அவர் சத்திய மார்க்கத்தைத் தேர்வு செய்ய காரணமான ‘ஒரு ஆணோ, பெண்ணோ உறங்கும்போது ஏதோ ஒன்று மனித உடலிலிருந்து வெளிச் செல்கிறது என்றும், எப்பொழுது திரும்புகிறதோ அது வந்தவுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது என்றும், ஆனால் மரணத்தின் நிலையிலோ அந்த ஏதோ ஒன்று … Continue reading
சூடான பானங்கள் அருந்துவதனால்…..
கேள்வி எண்: 3. ‘அதிக சூடான பானங்களை அருந்துவதன் மூலம் மனிதனின் குடலில் உட்புறம் உள்ள அடுக்குகள் (Layers) சேதமுறுவதால் மனிதனுக்கு குடலில் (வயிற்றில்) வலி ஏற்படுகிறது’ என்பதை விளக்கும் திருமறை வசனமாகிய “……நரகத்தில் எவன் என்றென்றும் தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?” என்று முடியும் வசனம் … Continue reading
பூமியின் நீரூற்றுக்களில் ஓடுவது மழை நீரே!
கேள்வி எண்: 2. பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே என்ற உண்மையை பிரதிபலிக்கும் வசனம் எது? பதில்: “நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்கி, அதனை பூமியின் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான். அதன்பின், அதனைக்கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர். … Continue reading
ஆணிலிருந்தே பெண்!
கேள்வி எண்: 1. ஒரு பெண் கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு அவளுடைய கணவனின் உயிரணுவே காரணம்; மனைவி காரணமல்ல என்ற தற்கால அறிவியல் ஆராய்ச்சியின் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய திருகுர்ஆன் வசனம் எது? பதில்: “இன்னும் நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் … Continue reading
அறிவிப்பு!
தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் திறம்படச் செயல்பட்டு வரும் ‘இஸ்லாமிய கல்வி மையம்’ (IEC) நடத்திய (2002-ஆம் ஆண்டு) மார்க்க அறிவு போட்டியின் கேள்வி பதில்கள் அவர்களின் முழுமையான அனுமதியுடன் இந்த தளத்தில் பதியப்படுகின்றது.