சூடான பானங்கள் அருந்துவதனால்…..

கேள்வி எண்: 3. ‘அதிக சூடான பானங்களை அருந்துவதன் மூலம் மனிதனின் குடலில் உட்புறம் உள்ள அடுக்குகள் (Layers) சேதமுறுவதால் மனிதனுக்கு குடலில் (வயிற்றில்) வலி ஏற்படுகிறது’ என்பதை விளக்கும் திருமறை வசனமாகிய “……நரகத்தில் எவன் என்றென்றும் தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?” என்று முடியும் வசனம் எது?

பதில்: அத்தியாயம் 47 வசனம் 17.

சிறு விளக்கம்: நமது குடலின் உட்புறத்தில் மெல்லிய வழவழப்பான ஒரு அடுக்கு இருக்கிறது. இது உணவுப் பொருட்கள் குடல்களின் வழியே எளிதாக செல்வதற்கும், செரிமானம் போன்ற இன்னும் பல காரணங்களுக்காகவும் பயன்படுகின்றது. நாம் அதிக சூடான பானங்களை அருந்துவதினால் குடலின் உட்புறம் உள்ள இந்த அடுக்குகள் சேதமுறுகின்றன. அதனால் நமக்கு வயிற்றுவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மிக அதிக சூடான பானங்கள் உட்கொள்வதன் மூலம் குடல்கள் அறுந்து விடும் அபாயம் கூட உண்டு என்கின்றனர்.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.