Author Archives: Jafar
ஜனாஸா தொழுகையில் தக்பீர் கூறுதல்
555.நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜாஸி (மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள். புஹாரி : 1245 அபூஹூரைரா (ரலி) 556. (அபிசீனிய மன்னர்) நஜ்ஜாஸி இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை அறிவித்த … Continue reading
பித்அத்தான ஸலவாத்துக்கள்
நபி (ஸல்) அவர்களது சொல்லிலோ, ஸஹாபாக்கள், தாபியீன்கள், முஜ்தஹிதான இமாம்கள் ஆகியோரின் சொல்லிலோ அடங்காத பித்அத்தான ஸலவாத்தின் அமைப்புகளை அதிகமாக செவிதாழ்த்த முடிகின்றது. அவை பின்னால் வந்தவர்களால் ஏற்படுத்தப் பட்டவையாகும். அவ்வாறான பித்அத்தான வசன அமைப்புகள் எங்கிருந்து வந்தன? என்று தெரியாத அளவு அந்த ஸலவாத்துக்கள் பொதுமக்களுக்கு மத்தியிலும் அறிஞர்களுக்கு மத்தியிலும் பரவி விட்டன. நபி … Continue reading
மரணித்தவர் ஓய்வு பெறுதல்.
554.இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் ‘(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்” என்றார்கள். மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) … Continue reading
மரணித்தவர் பற்றி….
மரணித்தவர் பற்றி புகழ்ந்தும் இகழ்ந்தும் கூறப்படுதல். 553.ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது” என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், … Continue reading
‘எச்சரிக்கை’ நூலின் முடிவுரை
இதுவரை மக்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்ற விலக்கப்பட்ட காரியங்களை முடிந்தவரை இங்கு கூறியுள்ளோம்.
ஜனாஸா தொழுகை.
ஜனாஸா தொழுகை அதில் கலந்து கொள்பவரின் சிறப்பு. 551.”ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இரண்டு கீராத்கள் என்றால் என்ன?’ என வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” … Continue reading
ஜனாஸாவை எடுத்துச் செல்வதில் துரிதம்.
550.”ஜனாஸாவைச் (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1315 அபூஹுரைரா (ரலி)
ஜனாஸாவை துணியால் போர்த்துதல்.
549.”இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது” என்று நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். புஹாரி : 5814 ஆயிஷா (ரலி)
அத்தாட்சிகளுடன் கூடிய பாதுகாப்பான வானம்!
21: 30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? 21:31 இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் … Continue reading
ஜோதிடம், சகுனம் பார்த்தல் குறித்த இஸ்லாமிய பார்வை
கேள்வி எண்: 32. ‘யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என நம்பியவர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டதை (குர்ஆனை) நிராகரித்தவர் ஆவார்’ என்ற நபிமொழியை அறிவித்தவர் யார்?