‘எச்சரிக்கை’ நூலின் முடிவுரை

இதுவரை மக்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்ற விலக்கப்பட்ட காரியங்களை முடிந்தவரை இங்கு கூறியுள்ளோம். 

எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவனுடைய திருப்பெயர்களின் மூலம் இறைஞ்சுவோமாக! அவன் நமக்கும் அவனுக்கும் நாம் மாறு
செய்வதற்கும் இடையில் அரணாக இருக்கக்கூடிய இறையச்சத்தையும், அவனுடைய சுவனத்தின் பால் சேர்த்து வைக்கக்கூடிய வழிபாட்டையும் தருவானாக!
நம்முடைய பாவங்களையும், நம்முடைய காரியங்களில் நாம் வரம்பு மீறுவதையும் அவன் மன்னித்தருள்வானாக! அவன் விலக்கிய விலக்கல்களை விடுத்து அவன் ஹலாலாக்கியவற்றை மட்டும், அவன் அல்லாதவர்களை விடுத்து அவனுடைய அருளை மட்டும் நமக்குப் போதுமாக்கித் தருவானாக! நம்முடைய பாவங்களைக் கழுவி, நம்முடைய தவ்பாவை ஏற்றுக் கொள்வானாக! திண்ணமாக அவன் யாவற்றையும் செவியேற்பவனும் (அழைப்பவரின் அழைப்புக்கு) பதில் தருபவனும் ஆவான். மேலும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் அனைவர் மீதும் அவனுடைய கருணையும் சாந்தியும் உண்டாவதாக!

எல்லாப் புகழும் அகில உலகத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே!அல்லாஹ் ஸுப்ஹானஹுவதஆலா அவனது சன்மார்க்கம் ஸ்திரமடைய ஒத்தாசை புரியுமாறும், அவனது திருக்கலிமாவை உயர்வாக்கி வைக்குமாறும், எங்கள் கருமங்களுக்குப் பொறுப்பாயுள்ளவர்களைச் சீர்திருத்துமாறும், அன்னார் அனுசரணையுடன் தீய விளைவுகளை அழித்தொழித்து விடுமாறும்,சத்திய வழியை நிலைநாட்டி, அசத்திய வழியை நிலைகுலைக்க அன்னாருக்கு ஊக்கமும் உதவியுமளிக்குமாறும், எங்களுக்கும் – உங்களுக்கும் ஏனைய முஸ்லிம்களுக்கும், நாடும் நாட்டு மக்களும் சீரும் சிறப்பும் பெற்று மகோன்னத வாழ்வு வாழ நல்லுதவி புரியுமாறும் அல்லாஹ்விடம் இரந்து கேட்கிறோம். நிச்சயமாக அவனே சகல வஸ்துக்கள் மீதும் சக்தி பெற்றவன். இறைஞ்சுவோருக்கு இடுக்கண் துடைக்க அவனே அருகதையுள்ளவன்.

ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல் லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலீயுல் அளீம். வஸல்லல்லாஹு வஸல்லம வபாறக அலா அப்திஹி வறசூலிஹி முஹம்மதின் வஆலிஹீ வஸஹ்பிஹீ வஸல்லம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

முடிவுற்றது.

மீண்டும் ஒரு நல்லொழுக்கம் போதிக்கும் நூலுடன் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்களின் மார்க்கச் சகோதரன்:

Jafar (safamarva)

Kuwait 

This entry was posted in எச்சரிக்கை. Bookmark the permalink.