Author Archives: Jafar

தானத்தால் நரக நெருப்பிலிருந்து..

596.”பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1417 அதீ இப்னு ஹாத்திம் (ரலி) 597.அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தானத்தால் நரக நெருப்பிலிருந்து..

சிறந்த பொருளில் செய்யும் தானம்.

595.நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே செல்லும் – பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on சிறந்த பொருளில் செய்யும் தானம்.

தடுக்கப்பட்ட ‘கியாம்’ (எழுந்து நிற்குதல்)

‘எவனொருவன் தனக்காக மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென விரும்புகிறானோ, அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் தேடிக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்) ‘ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) அவர்களை விட மிக விருப்பத்துக்குரிய எந்த ஒரு மனிதரும் இருக்கவில்லை. நபியவர்களைக் கண்டால் அவர்கள் (மரியாதைக்காக) எழுந்து நிற்க … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தடுக்கப்பட்ட ‘கியாம்’ (எழுந்து நிற்குதல்)

தானத்தை வாங்குவோர் இல்லாது போகுமுன்..

தானம் பெறுவோர் இல்லாது போகும் முன்பு தர்மம் செய்தல். 592. ”தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தானத்தை வாங்குவோர் இல்லாது போகுமுன்..

தானம் செய்பவனும் கஞ்சனும்..

591.”ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!’ என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார். புஹாரி : 1442 அபூஹுரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தானம் செய்பவனும் கஞ்சனும்..

தங்களுடைய மூதாதையர்களின் அடிச்சுடுகளின் மீதே விரைந்து செல்லும் வழிகேடர்கள்

2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களீடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 5:104. “அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தங்களுடைய மூதாதையர்களின் அடிச்சுடுகளின் மீதே விரைந்து செல்லும் வழிகேடர்கள்

தான தர்மம் கடமையாகும்.

589.”தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்” என்று கூறினார்கள். மக்கள், ‘அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்’ … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தான தர்மம் கடமையாகும்.

மரணித்தவருக்காக தானம் செய்தல்.

588.ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்” என்றனர். புஹாரி :1388 ஆயிஷா (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மரணித்தவருக்காக தானம் செய்தல்.

அல்குர்ஆன் உயிருடன் இருப்பவர்களுக்கேயன்றி இறந்தவர்களுக்குரியதல்ல.

“(நபியே!) அவர்கள் இதன் (இக்குர்ஆனின்) வசனங்களைக் கவனித்து ஆராய்வதற்காகவும், (இதனைக் கொண்டு) அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும், மிக்க பாக்கியம்பெற்ற இவ்வேதத்தை நாமே உம்மீது அருள் புரிந்தோம்” (38:29) முன்னோர்களான முஸ்லிம்கள் அல்குர்ஆனுடைய ஏவல்களை எடுத்து நடப்பது கொண்டும் அதன் விலக்கல்களைத் தவிர்ந்து நடப்பது கொண்டும் தங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொள்பவர்களாக இருந்தனர். அதன் மூலம் இம்மையிலும் … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on அல்குர்ஆன் உயிருடன் இருப்பவர்களுக்கேயன்றி இறந்தவர்களுக்குரியதல்ல.

உறவினர்க்கு உதவுதலின் சிறப்பு.

582.அன்ஸார்களில் அபூ தல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ன்னபவி)க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on உறவினர்க்கு உதவுதலின் சிறப்பு.