1411. நபி (ஸல்) அவர்கள், ‘கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே” என்று கூறினார்கள்.
கண் திருஷ்டி, சூன்யம் பற்றி….
மூவரில் இருவர் ரகசியம் பேசுதல் கூடாது.
சிரமத்திலிருக்கும் அந்நியப் பெண்ணுக்கு உதவுதல்.
மைல் கல்லையும், சாம்பலாகிப் போகும் மரத்தையும் வணங்குவது எவ்விதத்தில் பகுத்தறிவாகும்?
உண்மையை உணர்ந்து கொண்ட உள்ளங்கள்! அவர்கள் அதே நம்பிக்கையில் நிலைத்திருக்க அல்லாஹ் அருள் புரிவானாக!!! படத்தை பெரிதுபடுத்தி படிக்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.
நன்றி: வசந்தம் மாத இதழ் குவைத்.
அல்லாஹ்வை போற்றுபவர், போற்றாதவர் இருவருக்குமான உவமைகளாக அல்லாஹ்வின் தூதர் கூறியது என்ன?
கேள்வி எண்: 87. தனது இறைவனை நினைவு கூறுபவனுக்கும், தனது இறைவனை நினைவு கூறாதவனுக்கும் உவமைகளாக நபி (ஸல்) அவர்கள் கூறியது என்ன? Continue reading
ஆண் பெண் அல்லாத அலிகள் பற்றி….
சபையில் அமரும் ஒழுக்கம்.
புஹாரி : 6269 இப்னு உமர் (ரலி)
வேதத்தையுடையோர் அனைவரும் சமமல்லர்!
2:41.இன்னும நான் இறக்கிய (வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி (ஒழுகி) வருவீர்களாக.
3:98. “வேதத்தையுடையோரே! அல்லாஹ்வின் ஆயத்கள் (என்னும் அத்தாட்சிகளையும், வசனங்களையும்) ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வே நீங்கள் செய்யும் (அனைத்துச்) செயல்களையும் நோட்டமிட்டுப் பார்ப்பவனாக இருக்கிறானே!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
3:21. “நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும், மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
3:113. (எனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்;. வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்;. இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.
3:199. மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்; இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.
அல்குர்ஆன்
சந்தேகம் நீங்க தன் மனைவி எனக் கூறுதல்.
குர்ஆன் எதைக் குறித்துப் பேசுகின்றது?
இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட இறுதி இறைவாக்கே திருக்குர்ஆன்! இதுவே, ஒவ்வொரு முஸ்லிமுடைய நம்பிக்கை மற்றும் வாழ்வியல் நடைமுறையின் தோற்றுவாயாக அமைந்திருக்கின்றது. மனித இயல்போடு தொடர்புடைய ஒவ்வொரு பணபைக் குறித்தும் அது பேசுகின்றது.
பகுத்தறிவு, கொள்கை விளக்கம், வணக்கவழிபாடு, சட்டம் என்று அவற்றை பட்டையலிட்டுக் கொண்டே செல்ல முடியும். ஆனால், திருக்குர்ஆனின் அடிப்படைக் கொள்கை படைப்பாளனுக்கும், படைப்பினங்களுக்கும் இடையிலான உறவைக் குறித்தே!
அதேவேளை, ஒரு நல்ல சமுதாயம் உருவாகிடவும், மனித ஒழுங்குகள் சீர்பெறவும், சமநிலை பொருளாதாரம் நிலவவும் திருக்குர்ஆன் தெளிவான வழிமுறைகளைக் காட்டுகின்றது.
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.
