Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்
உடலுறவில் அஸ்ல் செய்வது பற்றி….
913. நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) நான் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைப் பார்த்தேன். அவர்களிடம் (சென்று) அமர்ந்து கொண்டு ‘அஸ்ல்’ பற்றிக் கேட்டேன். அபூ ஸயீத் (ரலி) கூறினார். நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது, அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் … Continue reading
கணவன் அழைப்புக்கு இணங்க மறுத்தால்..
912. ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :5194 அபூஹுரைரா (ரலி).
மனைவியுடன் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொள்ளுதல் பற்றி…
911. ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள். எனவே, ‘உங்கள் பெண்கள் உங்களுக்குரிய ‘விளை நிலம்’ ஆவர். எனவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள்” எனும் (திருக்குர்ஆன் 02:223 வது) இறைவசனம் அருளப்பட்டது. புஹாரி :4528 ஜாபிர் (ரலி).
உடலுறவின் போது செய்யும் பிரார்த்தனை.
910. உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ளும்போது ‘பிஸ்மில்லாஹி; அல்லாஹும்ம ஜன்னிப்னிஷ் ஷைத்தான் வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஸக்த்தனா’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்! இறைவா! என்னை விட்டு ஷைத்தானை விலக்கி வைப்பாயாக! எனக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தை விட்டும் ஷைத்தானை விலக்கி வைப்பாயாக!’) என்று பிரார்த்தித்து அதன்பின்னர் அந்தத் தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை … Continue reading
மும்முறை தலாக்கு கூறப்பட்ட பெண் அதே கணவரை மீணடும் மணக்க என்ன செய்வது?
908. ரிஃபாஆ அல் குரழீ (ரலி) அவர்களின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் ரிஃபாஆவிடம் (அவரின் மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். எனவே, நான் அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் (ரலி) அவர்களை மணந்தேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பைத் போன்றது … Continue reading
வலீமா விருந்துக்கு அழைக்கப்பட்டால்….
906. உங்களில் ஒருவர் வலீமா (மண) விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதனை ஏற்றுச் செல்லட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5173 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி). 907. ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா – மணவிருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய … Continue reading
மணமகன் வலீமா விருந்து கொடுத்தல்.
902. நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ ஸà¯à®©à®ªà¯ (ரலி) ஠வரà¯à®à®³à¯ மணநà¯à®¤à¯ à®à¯à®£à¯à®à®ªà¯à®¤à¯ ஠ளிதà¯à®¤ (வலà¯à®®à®¾) மணவிரà¯à®¨à¯à®¤à®¤à¯à®ªà¯ பà¯à®©à¯à®±à¯ தம௠மனà¯à®µà®¿à®¯à®°à®¿à®²à¯ வà¯à®±à¯à®µà®°à¯ மணநà¯à®¤à®ªà¯à®¤à¯à®®à¯ ஠ளிà®à¯à®à®µà®¿à®²à¯à®²à¯; ஸà¯à®©à®ªà¯ (ரலி) ஠வரà¯à®à®³à¯ மணநà¯à®¤à®ªà¯à®¤à¯ நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ à®à®°à¯ à®à®à¯à®à¯ (à® à®±à¯à®¤à¯à®¤à¯) மணவிரà¯à®¨à¯à®¤à®³à®¿à®¤à¯à®¤à®¾à®°à¯à®à®³à¯. பà¯à®¹à®¾à®°à®¿ :5168 ஠னஸ௠(ரலி). 903. à®à®±à¯à®¤à¯à®¤à¯à®¤à®°à¯ (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ ‘ஸà¯à®©à®ªà¯ பினà¯à®¤à¯ à®à®¹à¯à®·à¯ … Continue reading
அடிமைப்பெண்ணை விடுதலை செய்து பின் மணமுடித்தல்.
900. ‘நபி (ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி (ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய … Continue reading
குர்ஆன் வசனங்கள் மஹ்ராக….
898. ஒரு பெண்மணி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்” என்று கூறினார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தம் தலையைத் தொங்கவிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் … Continue reading
சிறுமியை அவளின் தந்தை திருமணம் செய்து வைத்தல்.
897. நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் வீட்டில் தங்கினோம். அங்கு எனக்கு நோய் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடி வளர்ந்து அதிகமாகி விட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் … Continue reading