Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்
அல்கஸாமா(கொலை வழக்கில் சாட்சி கிட்டாதபோது குற்றஞ்சாட்டப் பட்ட தரப்பிலிருந்து 50பேர் சத்தியம் செய்தல்.)
1085. அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் (பேரீச்சம் பழம் கொள்முதல் செய்வதற்காகச் சென்ற தம் தோழர்களைத் தேடி) கைபருக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் இருவரும் பேரிச்சந் தோப்புக்குள் பிரிந்துவிட்டனர். பின்னர் அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள். எனவே, (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் … Continue reading
அடிமையை விடுவித்தலின் சிறப்பு.
1082. ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால் அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு தன்னுடைய கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்குக்கான விலையைக் கொடுத்து அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்து விட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவிற்கு விடுதலை … Continue reading
எஜமானுக்கு விசுவாசமுள்ள அடிமையின் சிறப்பு.
1079. அடிமை, தன் எஜமானுக்கு விசுவாசமாக நடந்து, தன் இறைவனை நல்ல முறையில் வணங்கி வருவானாயின் அவனுக்கு இருமுறை நன்மை கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2550 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி). 1080. ஒருவருக்கு உடைமையான நல்ல பயபக்தியுள்ள அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு. இதை அறிவித்துவிட்டு, அபூஹுரைரா … Continue reading
அடிமையைத் தன்னைப்போல் உண்ண உடுத்தக் கொடுத்தல்.
1077. ‘நான் அபூதர் (ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி … Continue reading
அடிமை மீது அவதூறு கூறாதே.
1076. நிரபராதியான தம் அடிமை மீது விபச்சார அவதூறு கூறியதற்காக எஜமானனுக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர!’ என்று அபுல் காசிம் (இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. புஹாரி : 6858அபூஹுரைரா (ரலி).
இஸ்லாத்தை தழுவும் முன்பு செய்த நேர்ச்சையை நிறைவேற்று
1075. அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை தழுவும் முன்பு), ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன். (அந்த நேர்ச்சையை இன்னும் நான் நிறைவேற்றவில்லை. இப்போது அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும், உமர் (ரலி) ஹுனைன் போரில் பிடிபட்ட போர்க் … Continue reading
குடும்பத்தார்க்கு எதிராக தீங்காக சத்தியம் செய்யாதே.
1074. நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது பெரும் பாவமாகும். (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வது சிறந்ததாகும் என நபி … Continue reading
இன்ஷா அல்லாஹ் கூறுதல்.
1072. (ஒருமுறை இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், ‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) ‘இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால்” … Continue reading
செய்த சத்தியத்தை விட சிறந்ததைக் கண்டால்…
1069. à®à®©à¯ நணà¯à®ªà®°à¯à®à®³à¯ à®à®©à¯à®©à¯ à®à®±à¯à®¤à¯à®¤à¯à®¤à®°à¯ (ஸலà¯) ஠வரà¯à®à®³à®¿à®à®®à¯ à®à¯à®©à¯à®±à¯, தமà®à¯à®à®¾à® (பயண) வாà®à®©à®®à¯ à®à¯à®à¯à®à¯à®®à¯à®ªà®à®¿ ஠னà¯à®ªà¯à®ªà®¿à®©à®¾à®°à¯à®à®³à¯. ஠பà¯à®ªà¯à®¤à¯ ஠வரà¯à®à®³à¯ à®à®±à¯à®¤à¯à®¤à¯à®¤à®°à¯ (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯à®à®©à¯ à®à®¸à¯à®°à®¾(ப௠பà¯à®°à®¿à®©à¯) பà®à¯à®¯à¯à®à®©à¯ à®à¯à®²à¯à®²à®µà®¿à®°à¯à®¨à¯à®¤à®©à®°à¯ – à®à®¸à¯à®°à®¾à®ªà¯ பà¯à®°à¯ தபà¯à®à¯ பà¯à®°à®¾à®à¯à®®à¯ – ஠பà¯à®ªà¯à®¤à¯ நானà¯, ‘à®à®±à¯à®¤à¯à®¤à¯à®¤à®°à¯ ஠வரà¯à®à®³à¯! à®à®©à¯ நணà¯à®ªà®°à¯à®à®³à¯ தமà®à¯à®à®¾à® வாà®à®©à®®à¯ à®à¯à®à¯à®à¯à®®à¯à®ªà®à®¿ à®à®©à¯à®©à¯à®¤à¯ தà®à¯à®à®³à®¿à®à®®à¯ ஠னà¯à®ªà¯à®ªà®¿ … Continue reading
லாத் உஸ்ஸா மீது சத்தியம் செய்தவர்…
1068. யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூது விளையாடுவோம்” என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். … Continue reading