பலிப்பிராணியை வாகனமாக்குதல்.

833. ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துச் செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘அதில் ஏறிக் கொள்வீராக!” என்று கூறினார்கள். அதற்கவர் ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘(பரவாயில்லை) நீர் அதில் ஏறிக் கொள்ளும்!” என்றார்கள். (அவர் அதில் ஏறாததால்) இரண்டாவது முறையிலோ, மூன்றாவது முறையிலோ நபி (ஸல்) அவர்கள் ‘உமக்குக் கேடு உண்டாகட்டும்! ஏறுவீராக!” என்று கூறினார்கள்.

புஹாரி :1689 அபூஹூரைரா (ரலி).

834. ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துச் செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘அதில் ஏறிக் கொள்ளும்!” என்றார்கள். அதற்கவர், ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே?’ என்றதும். ‘(பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும்!” என்றார்கள். மீண்டும் அவர் ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றதும் ‘(பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும்!” என மூன்றாம் முறையும் கூறினார்கள்.

புஹாரி : 1690 அனஸ் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.