Monthly Archives: June 2010
ரியாளுஸ் ஸாலிஹீன் (1-12)
12. பாறையை அகற்றிய பிரார்த்தனைகள்! அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்)அவர்கள் இவ்வாறு கூறிட நான் கேட்டுள்ளேன்: ‘உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேர் (ஒருபாதை வழியே) நடந்து சென்றனர். ஒருகுகையில் இரவு தங்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாயினர். அவர்கள் குகையினுள் சென்றதும் மலையிலிருந்து ஒருபாறை உருண்டு வந்து குகை வாசலை … Continue reading
ரியாளுஸ் ஸாலிஹீன் (1-11)
11 – ஏராளமான நன்மைகளைப் பெறுவது எப்படி? அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருட்பேறும் உயர்வும் மிக்கவனாகிய தம் இறைவன் கூறியதாக அருளினார்கள்: ‘திண்ணமாக அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் பதிவு செய்து விட்டான்’ பிறகு அதற்கு விளக்கம் அளித்தார்கள்: ஒருவன் ஒரு நன்மையை நாடினால் அதனை அவன் செயல்படுத்தாவிட்டால் அல்லாஹ் அதனைத் … Continue reading
ரியாளுஸ் ஸாலிஹீன் (1-10)
10. ஜமாஅத்துடன் தொழுவது கடமையே! அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் ஜமாஅத்துடன் நிறைவேற்றும் தொழுகை, அவர் தனது வீட்டில் தொழும் தொழுகையை விடவும் தனது கடைத்தெருவில் தொழும் தொழுகையை விடவும் இருபதுக்கும் அதிகமான அந்தஸ்துகளைப் பெறுகிறது. அதற்குக் காரணம், ஒருவர் அழகாக உளூ செய்துகொண்டு பிறகு பள்ளிவாசல் … Continue reading
ரியாளுஸ் ஸாலிஹீன் (1-9)
9. இருவரும் குற்றவாளிகளே! அபூபக்ரா நுஃபையிப்னு ஹாரிஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: இரண்டு முஸ்லிம்கள் தங்களின் வாட்களைக் கொண்டு மோதிக் கொண்டார்கள் எனில் கொல்பவனும் கொல்லப்படுபவனும் நரகம்தான் செல்வர். நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! இவனோ கொலை செய்தவன். கொலை செய்யப்பட்டவனின் நிலை என்ன? (அவன் ஏன் நரகம் செல்லவேண்டும்?) அதற்கு நபி(ஸல்) … Continue reading
ரியாளுஸ் ஸாலிஹீன் (1-8)
8. இறைவழிப்போரும் இலட்சியமும் அபூமூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ் அல்-அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: ‘ஒருவன் வீரத்திற்காகப் போர் புரிகிறான். இன்னொருவன் மனமாச்சரியத்திற்காகப் போர் புரிகிறான்., வேறொருவன் முகஸ்துதிக்காகப் போர் புரிகிறான். இவர்களில் இறைவழியில் போர் புரிபவர் யார்? அதற்கு நபி(ஸல்) அவர்கள் இறைமார்க்கம் மேலோங்கித் திகழ்வதற்காகப் போர் புரிபவர் யாரோ … Continue reading
ரியாளுஸ் ஸாலிஹீன் (1-7)
7. ஒழுக்க மாண்பே உயர்வுக்கு அடிப்படை! அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. ஆனால் உங்களின் உள்ளங்களைப் பார்க்கிறான்’ (முஸ்லிம்) தெளிவுரை இறைவன் உங்களுடைய உடலையும் தோற்றத்தையும் குலத்தையும் பார்த்து எடைபோட்டு உங்களுக்கு உயர்வும் தாழ்வும் அளிப்பதில்லை. உங்கள் உடல் பெரியதா? சிறியதா? பிணியுற்றதா? ஆரோக்கியமானதா? … Continue reading
ரியாளுஸ் ஸாலிஹீன் (1-6)
6. மரண சாஸனமும் வாரிசுகளின் உரிமையும் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் (சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட பத்துப்பேரில் ஒருவர்) அறிவிக்கிறார்கள்: இறுதி ஹஜ்ஜின் ஆண்டில் எனக்குக் கடுமையான நோய் ஏற்பட்டிருந்த காரணத்தால் நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்பொழுது நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! நான் எந்த அளவுக்கு … Continue reading
பிரபஞ்சத்தின் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் தன்மைகள்!
அல்லாஹ் நித்திய ஜீவன் (என்றென்றும் வாழ்பவன்) (2:255) அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (28:88) எவருடைய பார்வையும் அவனை அடையாது; அவனோ யாவற்றையும் பார்க்கின்றான்! அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை. (42:11) அவன் எவ்வகையிலும் பிறப்பெடுப்பதில்லை. வேறு பொருளுடன் கலந்து விடுவதில்லை; இணைவதில்லை. (5:17)
முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் (3)
முஸ்லிம் பெண்மணி தமது கணவருடன் இஸ்லாமியப் பார்வையில் திருமணம் இஸ்லாமியப் பார்வையில் திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற அருள் வளமிக்க ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலமாகவே, இருவரில் ஒருவர் மற்றவருக்கு ஆகுமானவராக ஆகிறார். இது மட்டுமின்றி, இதன் வழியாகத்தான், இருவரும் ஒரு நீண்ட வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகின்றனர். இந்தப் பயணத்தின் மத்தியில் … Continue reading
ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-5)
5 – சொந்த மகனுக்கு ஜகாத் கொடுக்கலாமா? மஅன் பின் யஜீத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (இவருடைய தந்தையும் பாட்டனாரும் நபித்தோழர்களாவர்) என் தந்தை யஜீத் (ரலி) அவர்கள் சில தங்க நாணயங்களைத் தர்மம் செய்வதாக எடுத்துச் சென்று பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதரிடம் (யாராவது தேவையுடையோருக்கு வழங்குமாறு) கொடுத்து வைத்தார். நான் சென்று அவற்றை வாங்கிக் … Continue reading