Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்
பொய் சத்தியம் செய்து விற்றல்..
பெருமைக்காக ஆடையை கரண்டைக்குக் கீழ் அணிதல், கொடுத்த தான தர்மங்களைச் சொல்லிக் காட்டுதல், பொய் சத்தியம் செய்து பொருட்களை விற்றல் போன்றவற்றுக்கு மறுமையில் கடுந்தண்டனை குறித்து..68- மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. ஒருவன்,(மக்களின் பயணப்)பாதையில்-தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் … Continue reading
அவதூறு கூறி விரோதத்தை ஏற்படுத்துதல்..
அவதூறு கூறி விரோதத்தை ஏற்படுத்துதல் பற்றி..67- கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என நபி(ஸல்)அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று ஹூதைஃபா(ரலி) அவர்கள் கூறினார்கள்.புகாரி-6056: ஹம்மாம் பின் ஹாரிஸ்(ரஹ்)
ஒப்பாரி, கன்னங்களில் அடித்துக் கொள்வது..
ஒப்பாரி வைப்பது கன்னங்களில் அடித்துக் கொள்வது, சட்டையைக் கிழித்துக் கொள்வது, அறியாமைக் கால கலாச்சாரங்களில் ஈடுபடுவது குறித்து..65- (துன்பத்தின் போது)கன்னங்களில் அறைந்து கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி-1298: அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி) 66- (என் தந்தை)அபூ மூஸா தமது கடுமையான மரண … Continue reading
நம்மைச் சார்ந்தவனல்ல..
நம்மை எதிர்க்க ஆயதமேந்துபவன் நம்மைச் சார்ந்தவனல்ல.. 63- நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி-7070: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) 64- நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி-7071: அபூ மூசா(ரலி)
இணைவைப்பது மிகப் பெரும் பாவமாகும்
வணà®à¯à® வழிபாà®à¯à®à®³à®¿à®²à¯ ஠லà¯à®²à®¾à®¹à¯à®µà¯à®à¯à®à¯ à®à®£à¯à®µà¯à®ªà¯à®ªà®¤à¯ மிà®à®ªà¯ பà¯à®°à¯à®®à¯ பாவமாà®à¯à®®à¯.. 53. நான௠நபி(ஸலà¯) ஠வரà¯à®à®³à®¿à®à®®à¯, ‘஠லà¯à®²à®¾à®¹à¯à®µà®¿à®à®®à¯ பாவà®à¯à®à®³à®¿à®²à¯ மிà®à®ªà¯ பà¯à®°à®¿à®¯à®¤à¯ à®à®¤à¯?’ à®à®©à¯à®±à¯ à®à¯à®à¯à®à¯à®©à¯. ஠தறà¯à®à¯ ஠வரà¯à®à®³à¯, ‘஠லà¯à®²à®¾à®¹à¯ à®à®©à¯à®©à¯à®ªà¯ பà®à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®à¯à®, ஠வனà¯à®à¯à®à¯ ந௠à®à®£à¯ à®à®±à¯à®ªà®¿à®ªà¯à®ªà®¤à¯” à®à®©à¯à®±à¯ à®à¯à®±à®¿à®©à®¾à®°à¯à®à®³à¯. நானà¯, ‘நிà®à¯à®à®¯à®®à®¾à® ஠த௠மிà®à®ªà¯ பà¯à®°à®¿à®¯ à®à¯à®±à¯à®±à®®à¯ தான௔ à®à®©à¯à®±à¯ à®à¯à®²à¯à®²à®¿à®µà®¿à®à¯à®à¯, ‘பிறà®à¯ à®à®¤à¯?’ … Continue reading
நல்லறங்களில் மிகச் சிறந்தது..
அல்லாஹ்வின் மீது விசவாசங்கொள்வது நல்லறங்களில் மிகச் சிறந்தது.. 50- செயல்களில் சிறந்தது எது?என நபி(ஸல்)அவர்களிடம் வினவப்பட்டது. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைக் கொள்வது என்றார்கள். பின்னர் எது? என வினவப்பட்டது. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது என்றார்கள். பின்னர் எது? என்று கேட்கப்பட்டது ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ் என்றார்கள். புகாரி: 26 அபுஹூரைரா (ரலி) 51- … Continue reading
விசுவாசத்தில் குறைவு இருப்பது குறித்து..
மார்க்க விசுவாசத்தில், கடமைகளில் குறைவு இருப்பது குறித்து.. 49- ஹஜ்ஜுப் பெருநாள் அன்றோ நோன்புப் பெருநாள் அன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்)அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்றபோது,பெண்கள் சமூகமே! தான தர்மம் செய்யுங்கள்! காரணம் நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங்கள் தாம் என எனக்குக் காட்டப்பட்டது என்று கூறினார்கள். அல்லாஹ்வின் … Continue reading
அன்சாரிகளை நேசிப்பது குறித்து..
அன்சாரிகளை(மதீனத்து நபித்தோழர்களை)நேசிப்பது ஈமானின் அங்கம்.. 47- ஈமானின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி-17: அனஸ்(ரலி) 48- இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள். அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை … Continue reading
நட்சத்திரத்தால் மழையா?
இந்த நட்சத்திரத்தால் மழை பெற்றோம் என்று கூறுபவர் பற்றி.. 46- நபி(ஸல்)அவர்கள் ஹூதைபிய்யா என்னுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுவித்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்து மக்களை நோக்கி உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்று நாங்கள் கூறினோம். … Continue reading
ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து..
ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து.. 43 நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது(ரலி) கூறியதாவது: ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம், அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறைநிராகரிப்பாகும்.புகாரி 48 :அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி). ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு நிராகரிப்போராகாதீர்.. 44- நபி(ஸல்)அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது(மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்)என்னிடம் மக்களை … Continue reading