ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து..

ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து..

43 நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது(ரலி) கூறியதாவது: ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம், அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறைநிராகரிப்பாகும்.
புகாரி 48 :அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி).

ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு நிராகரிப்போராகாதீர்..

44- நபி(ஸல்)அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது(மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்)என்னிடம் மக்களை அமைதியுடன் செவிதாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக! என்று கூறினார்கள்.(மக்கள் அமைதியுற்ற பின்னர்)எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என்று சொன்னார்கள்.
புகாரி-121: ஜரீர்(ரலி)

45- நபி(ஸல்)அவர்கள்(தமது விடைபெறும் ஹஜ் உரையில்) ; ; உங்களுக்கு கேடுதான் (வைலக்கும்) அல்லது உங்களுக்கு அழிவுதான் (வைஹக்கும்) ; ; எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள், என்று கூறினார்கள். புகாரி 6166 :இப்னுஉமர்(ரலி)

This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.