Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்
உறவினர்க்கு உதவுதலின் சிறப்பு.
582.஠னà¯à®¸à®¾à®°à¯à®à®³à®¿à®²à¯ ஠ப௠தலà¯à®¹à®¾ (ரலி) ஠தி஠வà®à®¤à®¿ பà®à¯à®¤à¯à®¤à®µà®°à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯. ஠வரà¯à®à¯à®à¯à®ªà¯ பà¯à®°à¯à®à¯à® மரà®à¯à®à®³à¯ ஠திà®à®®à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®©. ஠வரின௠à®à¯à®²à¯à®µà®à¯à®à®³à®¿à®²à¯ பà¯à®°à¯à®¹à®¾ à®à®©à¯à®± தà¯à®à¯à®à®®à¯ ஠வரà¯à®à¯à®à¯ மிà®à®µà¯à®®à¯ விரà¯à®ªà¯à®ªà®®à®¾à®©à®¤à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. ஠த௠மஸà¯à®à®¿à®¤à¯(னà¯à®©à®ªà®µà®¿)à®à¯à®à¯ à®à®¤à®¿à®°à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ ஠தà¯à®¤à¯à®à¯à®à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®³à¯ à®à¯à®©à¯à®±à¯ à® à®à¯à®à¯à®³à¯à®³ நலà¯à®² தணà¯à®£à¯à®°à¯à®à¯ à®à¯à®à®¿à®ªà¯à®ªà®¤à¯ வழà®à¯à®à®®à¯. ‘நà¯à®à¯à®à®³à¯ நà¯à®à®¿à®à¯à®à¯à®®à¯ பà¯à®°à¯à®à¯à®à®³à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ தானம௠… Continue reading
தேவைக்குப் பின்னரே தானம்
581.தம் தோழர்களில் ஒருவர் ‘என் ஆயுட்காலத்திற்குப் பிறகு நீ விடுதலையாவாய்’ என்று தம் அடிமையிடம் சொல்லிவிட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அத்தோழருக்கு அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை எண்ணூறு திர்ஹங்களுக்கு விற்று, அந்தத் தொகையை அத்தோழருக்குக் கொடுத்தனுப்பினார்கள். புஹாரி :7186 … Continue reading
நல்லறங்களுக்கு தானம் செய்தால்..
580.வலிவும் உயர்வும் கொண்ட அல்லாஹ், ‘நீ (என் திருப்தியை அடைந்திட) செலவுசெய். உனக்காக நான் செலவு செய்வேன்” என்று சொன்னான். மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. செலவிடுவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் செலவிட்டது … Continue reading
ஜகாத் கொடுக்காதவர் நிலை.
579.நான் குறைஷிகள் நிறைந்திருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்தேன். அப்போது பரட்டை முடியுள்ள சொரசொரப்பான ஆடையணிந்த முரட்டுத் தோற்றமுள்ள ஒருவர் அவர்களிடம் வந்து ஸலாம் கூறிவிட்டு, ‘(ஜகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக … Continue reading
தான தர்மங்களை ஊக்குவித்தல்.
577.நான் நபி (ஸல்) அவர்களுடன் (பாறைகள் நிறைந்த) மதீனாவின் ஹர்ராப் பகுதியில் இஷா (இரவு) நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது உஹத் மலை எங்களை எதிர்கொண்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அபூதர்ரே! (இந்த) உஹத் மலை எனக்காகத் தங்கமாக மாறி, அதிலிருந்து ஒரேயொரு தீனார் (பொற்காசு) என்னிடம் இருந்தாலும் அதை, அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி … Continue reading
ஜகாத் கொடுக்காதோர் தண்டனையில்..
575.நான் நபி (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, ‘கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள்” என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், ‘என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?’ … Continue reading
ஜகாத் கொடுக்காவிட்டால் பாவம்.
574.குதிரை வைத்திருப்பது மூன்று பேருக்கு மூன்றுவகையான விளைவுகளைத் தருவதாகும். ஒருவருக்கு நற்கூலி பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காக பசுமையான ஒரு வெட்டவெளியில் அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்த … Continue reading
ஸதக்கத்துல் ஃபித்ர்.
570.முஸ்லிம்களிடையேயுள்ள அடிமை, சுதந்திரமானவர் ஆண், பெண் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையை நோன்புப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். புஹாரி :1504 இப்னு உமர் (ரலி) 571. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாவு அளவு … Continue reading
ஜகாத் கொடுப்பவர் கொடுக்காதவர் பற்றி
569.நபி (ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல், காலித் இப்னு வலீத், அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் (ஜகாத் தர) மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், இப்னு ஜமீல் ஏழையாக இருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரைச் செல்வந்தராக்கிய பிறகு அவர் ஜகாத் தர மறுத்துள்ளார். … Continue reading
குதிரைகளின் அடிமைகளின் ஜகாத்.
568.”(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் குதிரைகளுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை..”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1463 அபூஹுரைரா (ரலி)