Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்
அல்லாஹ் தவிர பிறவற்றின் மீது சத்தியம் செய்யத் தடை.
1066. (என் தந்தை) உமர் (ரலி) கூறினார்: என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்” என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும் போதும் சரி; பிறரின் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் … Continue reading
கஃபாவுக்கு நடந்து செல்ல நேர்ச்சை.
1064. ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!” என்று மக்கள் கூறினார்கள், நபி (ஸல்) அவர்கள் ‘இவர் … Continue reading
நேர்த்திக்கடன் விதியை மாற்றாது.
1062. நபி (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், ‘நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)” என்றார்கள். புஹாரி :6608 இப்னு உமர் (ரலி). 1063. நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் … Continue reading
நிறைவேற்றப்படாத நேர்ச்சைகளை நிறைவேற்றுதல்.
1061. ஸஅத் இப்னு உபாதா (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கோரியவராக, ‘என் தாயார் மீது ஒரு நேர்ச்சை கடமையாகியிருக்க, (அதை நிறைவேற்றும் முன்பே) அவர் இறந்து போய்விட்டார். (என்ன செய்வது?)” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘அவர் சார்பாக நீ அதை நிறைவேற்று” என்று கூறினார்கள். புஹாரி :2761 இப்னு … Continue reading
மரணசாசனம் அத்தியாவசியமில்லை.
1057. நான௠஠பà¯à®¤à¯à®²à¯à®²à®¾à®¹à¯ à®à®ªà¯à®©à¯ ஠ப௠஠வà¯à®à®ªà®¾ (ரலி) ஠வரà¯à®à®³à®¿à®à®®à¯, ‘நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ வஸியà¯à®¯à®¤à¯ – மரண à®à®¾à®à®©à®®à¯ à®à¯à®¯à¯à®¤à®¾à®°à¯à®à®³à®¾?’ à®à®©à¯à®±à¯ à®à¯à®à¯à®à¯à®©à¯. ஠வரà¯à®à®³à¯, ‘à®à®²à¯à®²à¯” à®à®©à¯à®±à¯ பதிலளிதà¯à®¤à®¾à®°à¯à®à®³à¯. நானà¯, ‘஠பà¯à®ªà®à®¿à®¯à¯à®©à¯à®±à®¾à®²à¯ à®®à®à¯à®à®³à®¿à®©à¯ à®®à¯à®¤à¯ வஸியà¯à®¯à®¤à¯ – மரண à®à®¾à®à®©à®®à¯ à®à¯à®¯à¯à®µà®¤à¯ à®à®ªà¯à®ªà®à®¿à®à¯ à®à®à®®à¯à®¯à®¾à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯? ஠லà¯à®²à®¤à¯ மரண à®à®¾à®à®©à®®à¯ à®à¯à®¯à¯à®¯à®µà¯à®£à¯à®à¯à®®à¯à®©à¯à®±à¯ à®®à®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®ªà¯à®ªà®à®¿à®à¯ à®à®à¯à®à®³à¯à®¯à®¿à®à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯?’ … Continue reading
வக்ஃப் செய்வது பற்றி..
1056. (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) கையில் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் விஷயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவே, அதை நான் என்ன செய்யவேண்டும் என்று … Continue reading
மரணித்தவருக்காக செய்யும் தர்மங்கள் பலனளிப்பது பற்றி..
1055. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்” என்றனர். புஹாரி :1388 ஆயிஷா (ரலி).
மொத்த சொத்தில் முன்றில் ஒரு பங்கு வசிய்யத் செய்
1053. இறுதி ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே, என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் … Continue reading
மரண சாசனம்
1052. (மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2738 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) .
ஆயுட்கால அன்பளிப்பு பற்றி….
1050. உம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி (ஸல்) அவர்கள், ‘அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது” என்று தீர்ப்பளித்தார்கள். புஹாரி 2625 ஜாபிர் (ரலி). 1051. ஆயுட்கால அன்பளிப்பு அனுமதிக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2626 அபூஹுரைரா (ரலி).