அனைத்தும் சோதனையே!

அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை சிலரை விடப் பதவிகளில் உயர்த்தினான் – நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடையவன். (அல்குர்ஆன்: 6:165)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அனைத்தும் சோதனையே!

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை!

122- ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியேக) வேண்டுதல் செய்து விட்டனர். அல்லது ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (விசேஷப்) பிரார்த்தனை உண்டு. அதனை அவர்கள் (இம்மையிலேயே) கேட்டு விட்டனர். அது ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டது. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய வைத்துள்ளேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-6305: அனஸ்(ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை!

உபதேசம் யாருக்கு பயனளிக்கும்?

“நாம் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பயனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன்: 11:34)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on உபதேசம் யாருக்கு பயனளிக்கும்?

தூதர்கள் எதற்காக வந்தார்கள்?

தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:165)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on தூதர்கள் எதற்காக வந்தார்கள்?

அல்லாஹ் நாடினால்……..

121- ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தவருக்காகப் பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பெற்ற) ஒரு பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் என் பிரார்த்தனையை மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரைக்க பத்திரப்படுத்தி வைக்க நான் விரும்புகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-7474: அபூஹூரைரா(ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அல்லாஹ் நாடினால்……..

1. இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?

இறைநேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு

இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், ‘நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையல்லவா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அதுபோல் தான் நாங்களும் இறைவனிடம் எங்களுக்காக வாதாடி, கேட்டுப் பெறுவதற்காக இறைவனுக்கு நெருக்கமான இறைநேசர்கள் மூலம் வேண்டுகிறோம்’ என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் ஓரளவுக்குக் கூட அறியாமல் இருப்பதே காரணமாகும். நீதிபதி நாம் குற்றம் செய்தவர்களா அல்லது நிரபராதியா என்பதை நமக்காக வாதாடும் வக்கீல் எடுத்து வைக்கும் சாட்சியங்களை வைத்தே அறிந்து கொள்வார். அதுவும் சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாவிட்டால் நிரபராதிக்குக் கூட தண்டனையளிக்கும் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள். மேலும், குற்றவாளி விடுதலை பெறுவதையும் காண்கிறோம்.

இது இப்படியிருக்க அகிலங்களையெல்லாம் படைத்து பரிபக்குவப்படுத்தி பாதுகாத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு நமது தேவைகள் என்ன என்பது தெரியாதா? இதயங்களில் உள்ள இரகசியங்களை அறிபவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று தன்னுடைய திருமறையிலே பல இடங்களில் கூறுகின்றானே!

“வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும், பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான். மேலும், இருதயங்களில் உள்ளவற்றையெல்லாம் அல்லாஹ் அறிகிறான்” (அல்குர்ஆன்: 64:4). இன்னும் பல வசனங்களில் (11:5, 67:13-14, 2:284, 5:7, 8:43, 21:4, 20:7, 27:65, 59:22) அல்லாஹ் மட்டுமே இருதயங்களில் உள்ள இரகசியங்களை அறிகிறான் என்றும் மற்ற யாரும் அவற்றை அறிய முடியாது என்றும் கூறுகின்றானே! நாம் கூறாமலேயே நம் தேவைகளை அறிந்திருக்கும் இறைவனுக்கு, கேவலம் ஒரு வக்கீலோ அல்லது அதிகாரியோ எடுத்துச் சொன்னாலே தவிர அறிந்து கொள்ள முடியாமல் இருக்கின்ற நீதிபதியையும், அமைச்சரையும் உதாரணங்களாகக் கூறி அல்லாஹ்விற்கு உவமைகளை ஏற்படுத்தி இணைவைத்த மாபாதகம் ஆகாதா? இவ்வாரு இறைவனுக்கு உவமைகளைக் கூறுபவர்களை அல்லாஹ் கடுமையாக எச்சரிக்கின்றான்: “ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள்” (அல்குர்ஆன்: 16:74)

ஆகவே அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறுவது இந்த திருமறை வசனத்தை மீறிய மாபெரும் குற்றமாகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே! அல்லாஹ் தன் திருமறையில் அல்லாஹ்வையே அழையுங்கள் என்றும், அவன் பிரார்த்தனைப் புரிபவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்கிறான் என்றும் ஆனால், உங்களால் அழைக்கப்படுபவர்களால் பதிலளிக்க முடியாது என்று பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகின்றான்.

“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல்குர்ஆன்: 7:194)

ஆய்வு தொடரும்

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on 1. இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?

சத்தியம், ஈமான் இவற்றை நிராகரித்தால்…

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்) தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (அல்குர்ஆன்: 4:170)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on சத்தியம், ஈமான் இவற்றை நிராகரித்தால்…

இறைவனிடம் பரிந்துரைக்கு தகுதியானவர்!

120- அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டு வரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே (பற்களால்) பற்றிக் கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன் (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்து கொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும் அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக் கொள்ளவோ, பொறுத்துக் கொள்ளவோ, முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும் அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடி) பார்க்கமாட்டீர்களா? என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறு சிலரிடம் (உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர். ஆகவே மனிதர்களில் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்,உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்கு சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்கு சிரம்பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காக பரிந்து பேசுங்கள் நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும்;(துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா? என்றுகேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் (நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்)கோபம் கொண்டிருக்கிறான். இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (நான் நெருங்கக்கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாம் என்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது.! என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது.! என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது.! என்று கூறிவிட்டு நீங்கள் வேறு எவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள்.

உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள் என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு பிறகும் அவன் இதைப் போல் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போல் விஷேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராக பிரயோகித்து விட்டேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! என்று கூறிà
®µà®¿à®Ÿà¯à®Ÿà¯, நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள் என்பார்கள். (அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று) இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் என் இறைவன் இன்று என் மீது (கடுங்)கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் ஒரு போதும் கோபங்கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒரு போதும் கோபங்கொள்ளப்போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன். ஆம் மூன்றையும் அறிவிப்பாளர் அபூஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.! என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது.!என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது.!(ஆகவே) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்)மூசாவிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள்.

அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்களிடம் சென்று மூசாவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தன்னுடைய தூதுவத்தினை வழங்கியும் உங்களிடம் உறையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப் படுத்தியுள்ளான். (ஆகவே) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கூறுவார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள் இன்று என் இறைவன் (என் மீது கடுங்) கோபங்கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபங்கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒரு போதும் கோபங்கொள்ளப்போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரை கொலை செய்து விட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! (ஆகவே) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள். அவ்வாறே மக்கள் ஈசா (அலை) அவர்களிடம் சென்று ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்த போதே மனிதர்களிடம் பேசினீர்கள்.(ஆகவே) எங்களுக்காக உங்கள்இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் சிக்கிக் கொண்டு இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு ஈசா (அலை) அவர்கள் என் இறைவன் இன்று (என் மீது கடுங்) கோபங்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் அவன் ஒரு போதும் கோபங்கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒரு போதும் கோபங்கொள்ளப்போவதுமில்லை. (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.! என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது.! என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது.! (ஆகவே) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள்.

அப்போது மக்கள் என்னிடம் வந்து முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கூறுவர். அப்போது à®
¨à®¾à®©à¯ நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ்மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள், அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி இறைவா! என் சமுதாயம், இறைவா! என் சமுதாயம் என்பேன். அதற்கு முஹம்மதே! சொர்க்கத்தின் வாசல்களில் வலப்பக்க வாசல்வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள். அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்து கொள்ளலாம் என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் மக்காவிற்கும் (யமனிலுள்ள) ஹிம்யர் எனும் ஊருக்கும் இடையிலுள்ள அல்லது மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஷ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள தூரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி- 4712: அபூஹூரைரா(ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இறைவனிடம் பரிந்துரைக்கு தகுதியானவர்!

லாஇலாஹ இல்லல்லாஹ்!

119- அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று (இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரைச் செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போய் பாருங்கள், ஏனென்றால் அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பராவார், என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும் அந்தத் தகுதி எனக்கு இல்லை, நீங்கள் மூசாவிடம் செல்லுங்கள் என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை என்று கூறியவாறு தாம் புரிந்த தவற்றை அவர்கள் நினைவு கூர்ந்தபடி (நபி) ஈசாவிடம் செல்லுங்கள் என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்வார்கள். அப்போது அவர்கள் (நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை. நீங்கள் இறுதி நபியான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள் என கூறுவார்கள். உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், அதற்குரியவன் தான் என்று சொல்லி விட்டு (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதிக் கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றி புகழும் வகையில் எனக்கு அவன் எனது எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன்முன்) நான்சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன்.

அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து) முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள், சொல்லுங்கள் உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள் தரப்படும் பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று சொல்லப்படும். அப்போது நான் என் இறைவா! என் சமுதாயம், என் சமுதாயம் என்பேன். அப்போது சொல்லுங்கள் எவரது உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்ததோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள் என்று சொல்லப்படும். ஆகவே நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போது முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள், உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள் தரப்படும் பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று கூறப்படும். அப்போது நான் என் இறைவா! என் சமுதாயம், என் சமுதாயம் என்று சொல்வேன். அப்போது செல்லுங்கள், யாருடைய உள்ளத்தில் அணுவளவு அல்லது கடுகளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொல்லப்படும். நான் சென்று, அவ்வாறே செய்து விட்டு, மீண்டும் திரும்பி வந்து அதேப் புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும் முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள், உங்கள் சொல் செவியேற்கப்படும், கேளுங்கள். தரப்படும் பரிந்துரை செய்யுங்கள் ,உங்கள் பரிந்துரை ஏற்கப்படும். என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான் என் இறைவா! என் சமுதாயம், என் சமுதாயம் என்பேன். அதற்கு அவன் செல்லுங்கள் எவரது உள்ளத்தில் கடுகு மணியைவிட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள். என்று
சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

(நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.) பிறகு நான்காம் தடவையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலைகளைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள், செவியேற்கப்படும். கேளுங்கள், அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும். என்று இறைவனின் தரப்பிலிருந்து சொல்லப்படும். அப்போது நான் என் இறைவா! (உலகில்) லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)என்று சொன்னவர்கள் விஷயத்தில் பரிந்துரை செய்ய) நான் கேட்பேன். அதற்கு இறைவன் என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும் பெருமையின் மீதும் ஆணையாக! லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன் என்று சொல்வான்.

புகாரி-7510: அனஸ்(ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on லாஇலாஹ இல்லல்லாஹ்!

அல்லாஹ் அவர்களை அழிப்பானாக!

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் மஸீஹை (இயேசு) அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பபபடுகிறார்கள்? (அல்குர்ஆன்: 9:30)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ் அவர்களை அழிப்பானாக!