முஹம்மது (ஸல்) அவர்கள் மார்க்கத்தில் ஈஸா (அலை)!

மர்யமின் மகன் ஈஸா (அலை) இறங்குதல் பற்றியும் அவர் குர்ஆன் சுன்னாவின்படி தீர்ப்பு வழங்குதல் பற்றியும்….
95- என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) தான தர்மங்களை வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-2222: அபூஹூரைரா (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.