‘இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்’

(வழிபடுவதும் கொண்டும், பிரார்த்தனை புரிவது கொண்டும், உதவி தேடுவது கொண்டும் உன்னை மட்டுமே சொந்தமாக்குகின்றோம்.)

1. முஸ்லிம்கள் இந்த வசனத்தை ஒரு நாளைக்குப் பல விடுத்தங்கள் தொழுகையினுள்ளும் வெளியிலும் ஓதி வருகின்றனர். இதுதான் ஸூரத்துல் பாத்திஹாவின் சாரமாகும். ஸூரா பாத்திஹா குர்ஆனின் சாரமாகும்.

2. இவ்வசனம், தொழுகை, நேர்ச்சை, அறுத்துப் பலியிடல் போன்ற அனைத்து வணக்கங்களையும் உள்ளடக்குகின்றது. குறிப்பாக ‘அத்துஆஉ ஹுவல் இபாதஃ’ (துஆ என்றால் வணக்கமாகும்) என்று கூறும் நபி (ஸல்) அவர்களுடைய சொல்லையும் இது உள்ளடக்குகின்றது.

தொழுகை என்ற வணக்கத்தை ஒரு ரஸூலுக்காகவோ, அல்லது ஒரு வலிக்காகவோ செய்வதற்கு எவ்வாறு அனுமதி இல்லையோ, அவ்வாறே ‘துஆ’ என்ற வணக்கத்தையும் எவருக்காகவும் செய்ய முடியாது. இது அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டிய வணக்கமாகும். இந்த வணக்கம் பற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

“(அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கக்கூடிய அவர்களுக்கு நபியே!) நீர் கூறும்! நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இறைவனையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன்” (72:20)

3. “லாஇலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக்க இன்னீ குன்து மினள்ளாலிமீன்” (அல்லாஹ்வே! உன்னைத்தவிர வேறெந்த நாயனுமில்லை; நீ மிக்கப் பரிசுத்தமானவன்; நானோ அக்கிரமக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்) (21:87) என்று யூனுஸ் நபி (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டுள்ளார்கள். ‘இந்த துஆவைக் கொண்டு எந்த ஒரு முஸ்லிம் பிரார்த்தனைப் புரிகிறாரோ, அது நிறைவேற்றப்பட்டே தீரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: ஹாகிம் (ஸஹீஹ்)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.