நபி (ஸல்) அவர்கள் கண்ட அல்லாஹ்வின் சான்றுகள்

104- நான் (மிஃராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா அவர்களை ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான சுருள் முடிகொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா அவர்களை நடுத்தர உயரமும், சிகப்பும், வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்புக் கொண்டவர்களாகவும் (சுருள்,சுருளாக இல்லாமல்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும் (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகாப்பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்கு காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை நீங்கள் அவனை (தஜ்ஜாலை) சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ளவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி 3239: இப்னு அப்பாஸ் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.