அ(ல்லாஹ்)வனே அனைத்துக்கும் சொந்தக்காரன்.

6:162. (நபியே) (தூதரே) நீர் கூறும்: என்னுடைய

தொழுகையும், (வணக்க வழிபாடு) என்னுடைய குர்பானியும்,

(அறுத்து பலியிடுதல்) என்னுடைய வாழ்வும், என்னுடைய

மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய

அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

6:163. “அவனுக்கு யாதோர் இணையுமில்லை – இதைக்

கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு)

வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் – நான்

முதன்மையானவன் (என்றும் கூறும்)

6:164. அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான்

இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப்

பொருட்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் –

பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே கேட்டை

தேடிக் கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை

மற்றோர் ஆத்மா சுமக்காது.
பின்னர் நீங்கள் (அனைவரும்)

உங்கள் இறைவன் பக்கமே திரும்பி செல்ல

வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம்

செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு

அறிவிப்பான் என்று (நபியே) நீர் கூறும்.

6:165. அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக

ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில்

உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை சிலரை

விடப் பதவிகளில் உயர்த்தினான் – நிச்சயமாக உம்

இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன்

நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடையவன்.

அல் குர்ஆன்: அல் அன்ஆம்(கால்நடைகள்)

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.