Monthly Archives: November 2006
ஒவ்வோர் ஆத்மாவுக்கான முழுமையான கூலி!
ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்த (தீர்ப்பு) நாளில், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் – அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 16:111)
பாங்கு எப்படி வந்தது?
213- முஸ்லீம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்த போது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிருத்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கின்ற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர் … Continue reading
தரீக்காக்கள் இஸ்லாத்தில் உள்ளதா?
ஸூஃபியிஸம்: ஸூஃபிகள், ஸாதுலிய்யா தரீக்கா, காதிரிய்யா தரீக்கா, நூரிய்யா தரீக்கா என்று பல தரீக்காக்களை உருவாக்கி மார்க்கத்தைப் பல பிரிவுகளாக பிரித்து விட்டனர்.
தவறிப்போன நம்பிக்கைகள்!
அன்றியும் (மறுமையில் அல்லாஹ் நிராகரித்துக் கொண்டிருந்த இவர்களை நோக்கி) “நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்து விட்டீர்கள்; இன்னும், நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் (என்று எண்ணிக் … Continue reading
தூக்கம்…
212- தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் நபி (ஸல்) அவர்கள் பள்ளியின் பக்கத்தில் ஒரு மனிதரோடு இரகசியமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு வராமல் நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் மக்கள் தூங்கி விட்டனர். புகாரி-642: அனஸ் (ரலி)
கொடிய பகைவன்
(நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கின்றான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி (சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாக கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான். (அல்குர்ஆன்: 2:204)
கழிவறை துஆ….
211- நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்கு நுழையும்போது, இறைவா! அறுவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானை விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். புகாரி-142: அனஸ் (ரலி)
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியிருந்தால்..
மேலும் அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணம் கூறுகிறான்: அது அச்சமில்லாமலும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன – ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்துக் கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும், … Continue reading
ஒரு முஸ்லிம் அசுத்தம் ஆகமாட்டான்…
210- நான் குளிப்புக் கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில் நின்று கொண்டிருந்த சமயம் நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் நழுவி விட்டேன். குளித்து விட்டுப் பின்னர் வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அபூஹூரைரா! எங்கு நழுவி விட்டீர்? என்று கேட்டார்கள். குளிப்புக் கடமையாகியிருந்தேன். எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே … Continue reading
நீங்கள் அழைத்து கொண்டிருந்தவர்கள் எங்கே?
எவன் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனைச் செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கின்றானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக் கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) ‘அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, … Continue reading