Monthly Archives: September 2006
கால்களை நன்றாக நன்கு கழுவுதல் பற்றி…
139- நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளு செய்து கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்து விட்டார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணிரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) குதிக்கால்களைச் சரியாகக் … Continue reading
வேத எச்சரிக்கையால் பயன் பெறுவோர் யார்?
“நபியே! எவர்கள் மறுமையில் தங்கள் இரட்சகனிடம் ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்படுவோம் என்று பயப்படுகிறார்களோ அவர்கள் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தவான்களாகுவதற்காக நீர் எச்சரிக்கை செய்யும். அவர்களுக்கு (அந்நாளில்) உதவியாளனும், பரிந்து பேசுபவனும் அந்த அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை” (அல்குர்ஆன்: 6:51)
பூமியின் தாழ்வான பகுதி!
கேள்வி எண்: 10. “அலிஃப், லாம், மீம். ரோம் தோல்வியடைந்து விட்டது. பூமியின் மிகவும் தாழ்வான பகுதியில்” என்று குர்ஆன் குறிப்பிடும் அந்த தாழ்வான பகுதி பூமியில் எங்குள்ளது? இந்த இடம் பற்றி இன்றைய அறிவியலாளர்கள் கூறும் கருத்து என்ன? பதில்: “அலிஃப், லாம், மீம். ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில், ஆனால் அவர்கள் … Continue reading
தூக்கத்தில் ஷைத்தான் தங்கும் இடம்!
138- நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூ செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப் படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-3295: அபூஹூரைரா (ரலி)
மறைவானவற்றை முற்றிலும் அறிந்தவன்!
(நபியே) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் (நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்த போது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்? என்று கேட்பான்; அதற்கு அவர்கள் அது பற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 5:199)
மூக்குக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தல் பற்றி…
137- உளூ செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும், மலஜலம் கழித்து விட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-161: அபூஹூரைரா (ரலி)
என்னுடைய அனைத்து வழிபாடும்…..
(நபியே) நீர் கூறும்: என்னுடைய தொழுகையும், (வணக்க வழிபாடு) என்னுடைய குர்பானியும், (அறுத்து பலியிடுதல்) என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (அல்குர்ஆன்: 6:1620)
மாதவிடாய் சட்டங்கள்
மாதவிடாயும், பிரசவ இரத்தமும். மாதவிடாயின் கால வரையறை. பெரும்பாலும் மாதவிலக்கு வரக்கூடிய காலம் 12 வயது முதல் 50 வயது வரையாகும். சிலசமயம் பெண்ணின் நிலையைப் பொறுத்து இதற்கு முன்னரோ, பின்னரோ மாதவிடாய் ஏற்பட்டு விடலாம். மாதவிடாயின் குறைந்த கால அளவிற்கும், அதன் கூடுதலுக்கும் வரையறை கிடையாது. கர்ப்பமுற்றவளின் உதிரப்போக்கு. ஒரு பெண் கர்ப்பமுற்று விட்டால் … Continue reading
நபி(ஸல்)அவர்கள் செய்த உளு…
136- அம்ர் பின் அபீ ஹஸன், அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) இடம் நபி (ஸல்) அவர்களுடைய உளூவைப் பற்றிக் கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று உளூ செய்து காட்டினார்கள். பாத்திரத்திலிருந்து தண்ணீரை தமது கையில் ஊற்றி … Continue reading
நமக்கு கஷ்டத்தை அல்லாஹ் நாடவில்லை
ரமளான் (நோன்பு) மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) … Continue reading