Monthly Archives: July 2006
அல்லாஹ்வுக்கு இணைவைத்தலே மாபெரும் அநீதி
78- எவர் இறைநம்பிக்கைக் கொண்டு(பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திட வில்லையோ என்னும்(6:82) வசனம் அருளப்பட்டபோது அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமானதாகத் தென்பட்டது. ஆகவே அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தனக்குத் தானே அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்? ஏன்று கேட்டனர். ஆதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இந்த வசனம் குறிப்பிடுவது)அதுவல்ல, அது இணைவைப்பையே குறிக்கின்றது. என் அருமை … Continue reading
தோலின் உணர்ச்சிகள் செத்தாலும் ஓயாத தண்டனை பற்றி..
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவ னாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன்: 4:56)
நல்ல பிள்ளைகளுக்கு வேதகட்டளை!
4-36 மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. … Continue reading
வஹ்ஹாபி என்பதன் அர்த்தம்
தௌஹீதின் எதிரிகள் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களைச் சம்பந்தப்படுத்தி தௌஹீதுடைய அடிப்படையில் இருப்பவனுக்கு ‘வஹ்ஹாபி’ என்று சொல்கின்றனர். இவர்கள் உண்மை சொல்லுகின்றவர்களாக இருந்தால் அப்துல் வஹ்ஹாபுடைய மகன் முஹம்மதைச் சம்பந்தப்படுத்தி ‘முஹம்மதி’ (முஹம்மதைச் சேர்ந்தவன்) என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். (அவ்வாறு சொல்லியிருந்தால் முஹம்மத் (ஸல்) அவர்களைச் சார்ந்தவன் என்று கருத்துக் கொள்ள இடமேற்பட்டு … Continue reading
அல்லாஹ் ஏற்படுத்தும் ஒளி!
அல்லாஹ் வானங்கள், பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்). அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை : விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது. அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எரிக்கப் படுகின்றது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று, மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், … Continue reading
இஸ்லாத்திற்கு முந்தைய நல்ல செயல்கள்
ஒரு நிராகரிப்பவன் இஸ்லாத்தை தழுவும் முன்பு செய்த நல்லறங்கள் பற்றி……. 77- அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன்பு தர்மம் செய்தல், உறவினரைச் சேர்(ந்து வாழ்)தல்,போன்ற நல்ல காரியங்களைச் செய்துள்ளேன். அவற்றிற்கு (மறுமையில் எனக்கு) நன்மை ஏதும் உண்டா? என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் … Continue reading
இஸ்லாத்திற்கு முந்தைய கெட்ட செயல்கள்
இஸ்லாம் முந்தைய கெட்ட செயல்களை அழித்து விடுகிறது என்பது பற்றி….. 76- இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர். விபச்சாரம் அதிகமாகச் செய்திருந்தனர்.(ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகின்ற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்பு விடுகின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்டப்பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் … Continue reading
இஸ்லாத்திற்கு முந்தைய கெட்ட செயல்கள்
இஸ்லாம் முந்தைய கெட்ட செயல்களை அழித்து விடுகிறது என்பது பற்றி….. 76- இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர். விபச்சாரம் அதிகமாகச் செய்திருந்தனர்.(ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகின்ற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்பு விடுகின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்டப்பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் … Continue reading
பயந்து கொள்ளுங்கள்
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை – நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 8:25)
அனைத்தின் மீதும் ஆற்றலுடையோன்!
(நபியே!) நீர் கூறும்: ”உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்) வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. … Continue reading