Author Archives: Jafar
நம்மை (அல்லாஹ்வை) எவரும் மிகைக்க முடியாது!
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கிறோமா? உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக … Continue reading
சுயமதிப்பு!
மனிதன் வெறும் தசைகளாலும் எலும்புகளாலும் பின்னப்பட்ட விலங்கல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனும் உயிரோட்ட உணர்வுகளாலும் சிந்தனை பிணைப்புகளாலும் இணைக்கப்பட்டுள்ளான். ஒருவனின் புறவாழ்வில் நடைபெறும் செயல் முறைகள் அனைத்தும் அவனது சிந்தனையின் பிரதிபலிப்புகள் மாத்திரம் அல்ல. அவற்றில் உள ரீதியான காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன. அந்த வகையில் சுய மதிப்பு என்பது முக்கியமான இடத்தை வகிக்கின்றது. உள … Continue reading
வெற்றிபெற்ற பிரிவினரின் வழி
1. வெற்றிபெற்ற கூட்டத்தினர், தமது வாழ்க்கையில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும், அவர்களுக்குப் பின்னால் அவர்களது தோழர்களது வழிமுறையையும் பின்பற்றக்கூடியவர்களாக இருப்பர். இது அல்லாஹ் தனது ரஸுலின் மீது அருளிய அல்குர்ஆனும், நபி (ஸல்) அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் தனது தோழர்களுக்குத் தெளிவுப்படுத்திக் காட்டியதுமாகும். இவ்விரண்டையும் உறுதியாகப் பற்றிப்பிடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குக் … Continue reading
அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல்
ஷைத்தான் மனிதர்களை குழப்புவதற்கும் விலக்கப்பட்டவைகளில் அவர்களை வீழ்த்துவதற்கும் பெரும் ஆர்வம் கொண்டவன். இதனால்தான் அல்லாஹ் நம்மை இப்படி எச்சரிக்கிறான்: “நம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். யாரேனும் அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் மானக்கேடானவை மற்றும் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் அவனை ஏவுவான்” (24:21). மனிதனின் இரத்தம் ஓடும் நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடுகின்றான். மனிதர்களை மானக்கேடானவற்றில் … Continue reading
ஒருவர் மற்றவரை விட சிறந்தவராகயிருத்தல்
விசுவாசிகளில் ஒருவர் மற்றவரை விட சிறந்தவராகயிருத்தல். இவ்வகையில் எமன் தேசத்து மக்களின் சிறப்பு பற்றி 31- நபி(ஸல்)அவர்கள்தமது கரத்தால் யமன் நாட்டுசத் திசையை நோக்கி சைகை காட்டி இறைநம்பிக்கை அதோ அங்கிருக்கும் யமன் நாட்டைச் சார்ந்ததாகும். அறிந்து கொள்ளுங்கள் கல் மனமும்,(இறக்கமற்ற)கடின சுபாவமும், ஒட்டகங்களின் வால்களை பிடித்தபடி அவற்றை அதட்டிக் கொண்டே (நாடோடிகளாக)சென்று கொண்டிருக்கும்(பாளைவன)ஒட்டக மேய்ப்பவர்களிடையே … Continue reading
அண்டை வீட்டாருக்கு உதவுவது..
அண்டை வீட்டாருக்கு உதவுவது விருந்தினரை உபசரிப்பது நல்லதை பேசுவது அல்லது மௌனமாய் இருப்பது ஈமானின் ஒரு கிளையாகக் கருதுதல் 29- அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக் கைக் கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் (ஒன்று)நல்லதைப் பேசட்டும் … Continue reading
இந்த நண்பன் மிகவும் கெட்டவன்
43:36. எவனொருவன் அர் ரஹ்மானின் (அருளாளன் அல்லாஹ்வின்) நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான். 43:37. இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். 43:38. … Continue reading
தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும்..
தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது ஈமானின் அடையாளம் 28- அல்லாஹ்வின் தூதர் அவர்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான)ஈமான் கொண்டவர் ஆகமாட்டார் எனக்கூறினார்கள். புகாரி-13: அனஸ்(ரலி)
அல்லாஹ்வின் திருத்தூதரை நேசிப்பது
அல்லாஹ்வின் திருத்தூதரை ஒருவரின் குடும்பம் பிள்ளைகள், தந்தை பிற மனிதர்கள் ஆகியோரைக் காட்டிலும் அதிகம் நேசிப்பது 27- நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை அவரது குழந்தைகள் ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும் வரை அவர்(உண்மையான)ஈமான் கொண்டவர் ஆகமாட்டார். புகாரி-15: அனஸ்(ரலி)
ஈமான் கொண்டவர் அதன் சுவையை..
ஈமான் கொண்டவர் அதன் சுவையை உணர்தல் 26- எவரிடம் மூன்று தன்மைகளக் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுமையை உணர்ந்தவராவார்(அவை)அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி-16: அனஸ்(ரலி)