Monthly Archives: April 2011
அத்தியாயம்-2 நேர்மை (பிர்ரு) நற்செயல்கள்.
எந்தவிதமான பற்றும் பிடிப்பும் இல்லாமல் வைக்கப்படும் நம்பிக்கையை இஸ்லாம் வெறுக்கின்றது. வெற்றுச் சடங்குகளையும் வீண் சம்பிரதாயங்களையும் இஸ்லாம் மறுக்கின்றது. செயலில் வராத நம்பிக்கையை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. (நேர்மை) – நற்செயல்கள் என்றால் என்ன என்பதை திருக்குர்ஆனின் ஒரு வசனம் தெளிவாக விளக்குகின்றது. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் … Continue reading
அத்தியாயம்-2 சில அடிப்படை கோட்பாடுகள்.
நம்பிக்கை: (ஈமான்) இறைவன் ஒருவனே என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்றும் நம்புகின்றவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்று நம்மில் பலர் எண்ணலாம். ஆனால் நம்பிக்கை (ஈமான்) என்பது இத்துணை குறுகியதன்று. அது இதனினும் விசாலமானது. ஈமான் என்பது சில சடங்கு, சம்பிரதாயங்களின் தொகுப்பல்ல. பெயரளவில் வைக்கப்படுகின்ற நம்பிக்கை ஈமானாகி விடாது. ஈமான் … Continue reading
அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-2)
11. இறைவன் தந்திருக்கின்ற வழிகாட்டுதல்களைக் கொண்டு, மனிதன் தன்னுடைய ஈடேற்றத்திற்கு தானே முயற்சிகளை மேற்கொண்டு வழிதேடிக் கொள்ள வேண்டும் என்று ஒரு உண்மையான முஸ்லிம் நம்புகின்றார். ஒருவர் தான் ஈருலக வாழ்விலும் வெற்றி பெறவேண்டும் என்றால் அவர் தனது நம்பிக்கை, செயல், நடைமுறை இவைகள் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு முயற்சிக்க வேண்டும். செயலில் இல்லாத நம்பிக்கை, … Continue reading
அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-1)
உண்மையான முஸ்லிம் ஒருவர் பின்வருவனவற்றை நம்புகிறார். 1. இறைவன் ஒருவனே. அவன் மேலானவன், நிரந்தரமானவன், முடிவற்றவன், வல்லவன், கருணையுள்ளவன், அளவற்ற அன்புடையவன், படைத்தவன், பரிபாலிப்பவன், பாதுகாப்பவன். இவற்றை ஒரு முஸ்லிம் பரிபூரண நம்பிக்கைக் கொள்கிறார். இந்த நம்பிக்கை உறுதிபெற இறைவனையே முழுமையாக நம்பியிருக்க வேண்டும். அவனிடமே தஞ்சம் புக வேண்டும். அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்திட வேண்டும். … Continue reading
மனிதன் அல்லாஹ்வின் மீது கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் அவனுக்கே கேடாக ஆகி விடுகிறது!
21:11. மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையையோ நாம் அழித்தோம். அதற்குப் பின் (அங்கு) வேறு சமுதாயத்தை உண்டாக்கினோம். 21:12. ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள். 21:13. “விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுகபோகங்களுக்கும், உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக” (என்று … Continue reading