Monthly Archives: April 2007
ஜகாத் கொடுப்பவர் கொடுக்காதவர் பற்றி
569.நபி (ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல், காலித் இப்னு வலீத், அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் (ஜகாத் தர) மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், இப்னு ஜமீல் ஏழையாக இருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரைச் செல்வந்தராக்கிய பிறகு அவர் ஜகாத் தர மறுத்துள்ளார். … Continue reading
குதிரைகளின் அடிமைகளின் ஜகாத்.
568.”(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் குதிரைகளுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை..”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1463 அபூஹுரைரா (ரலி)
ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட வருடம் எது?
கேள்வி எண்: 33. ஹிஜ்ரி எத்தனையாவது ஆண்டில் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது?
ஜகாத் அளவு
567.”ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக் என்பது 60ஸாவு) தானியத்தில் ஸகாத் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1405 அபூ ஸயீத் (ரலி)
ஜனாஸா தொழுகையில் இமாம் எங்கு நிற்பது?
566.பிரசவத் தொடக்குடனேயே இறந்துவிட்ட பெண்ணிற்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுதபோது மைய்யித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். புஹாரி : 1331 ஸமுரா பின் ஜூன்துப் (ரலி)
கல்வி ஞானம் பெற்றவர்கள் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கும் வெகுமதி!
28:76. நிச்சயமாக காரூன் மூஸாவின் (மோசே) சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தான். எனினும்: அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்;அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன;அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; “நீ (இதனால் பெருமைக் கொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் … Continue reading
ஜனாஸாவைக் கண்டால் எழுதல்.
561.”ஜனாஸாவைக் கண்டால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி:1307 அமீர் பின் ரபிஆ (ரலி) 562.”உங்களிலொருவர் ஜனாஸாவைக் கண்டும் அதனுடன் நடந்து செல்லப் போவதில்லை என்றால் அவர் அதைக் கடந்து செல்லும்வரை அல்லது அது அவரைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவருக்கு … Continue reading
ஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-3)
நபிமார்களின் பணி: 1. சமூகத்தைச் சீர்படுத்துவதற்காக: அல்லாஹ்வின் செய்தியைப் பெற்று அதைக் கூட்டாமல் குறைக்காமல் அப்படியே கூறுவது. மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ”அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள் ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் … Continue reading
கப்ரில் ஜனாஸா தொழுகை நடத்துதல்.
559.’நபி (ஸல்) அவர்கள் தனியாக இருந்த ஒரு கப்ருக்கருகே சென்று (ஜனாஸாவுக்காகத்) தொழுகை நடத்தினார்கள். மக்களும் அணி வகுத்து நின்றனர். புஹாரி : 857 இப்னு அப்பாஸ் (ரலி) 560.பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த கரு நிறமுடைய ஓர் ஆணோ பெண்ணோ இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு நாள் திடீரென்று … Continue reading
ஜனாஸா தொழுகையில் தக்பீர் கூறுதல்
555.நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜாஸி (மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள். புஹாரி : 1245 அபூஹூரைரா (ரலி) 556. (அபிசீனிய மன்னர்) நஜ்ஜாஸி இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை அறிவித்த … Continue reading