அஹ்ஸாப் போரின் போது அல்லாஹ் முஸ்லிம்களை எவ்வாறு காப்பாற்றியதாக திருமறையில் கூறுகிறான்?

கேள்வி எண்: 73. அஹ்ஸாப் போரின் போது நாற்புறமும் பல்லாயிரக்காணக்கான எதிரிகள் சூழப்பட்டிருந்த முஸ்லிம்களை “எவ்வாறு” காப்பாற்றியதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?

பதில்: “முஃமின்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்தபோது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்க இயலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான்” (அல்குர்ஆன்: 33:9)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.