சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான அல்லாஹ்வின் உவமைகள் யாவை?

கேள்வி எண்: 74. சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உவமைகளாக அல்லாஹ் தன் திருமறையில் எதைக் கூறுகிறான்?

பதில்: “அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான். அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது; (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும்போதும் அதைப்போல் நுரை உண்டாகின்றது; இவ்வாறே சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்கு பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்” (அல்குர்ஆன்: 13:17)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.