உஹது போரில் நபி (ஸல்) அவர்கள் காயமடைந்தபோது…

கேள்வி எண்: 50. உஹது போரில் நபி (ஸல்) அவர்கள் காயமடைந்தபோது நிராகரிப்பாளர்களைப் பற்றிப் பின்வருமாறு தம்முடைய வேதனையை வெளிப்படுத்தினார்கள் ‘தம்முடைய நபியைக் காயப்படுத்திய சமூகம் எப்படி வெற்றியடையும்?’ இதைக் குறித்து இறங்கிய திருமறை வசனம் எது?  

பதில்: “(நபியே!) உமக்கு இது விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம் அல்லது அவர்களை வேதனைப் படுத்தலாம் – நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக. வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கிறான் – அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்” (அல்குர்ஆன்: 3:128-129)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.