மலைகளைப் போன்ற மேகங்கள்

கேள்வி எண்: 26. இன்று நாம் விமானங்கள் மூலம் மேகங்களுக்கு மேலே சென்று ‘மேகக் கூட்டங்கள் மலைகளைப் போன்று’ இருப்பதைக் காண்கிறோம். ஆனால், விமானங்கள் கண்டுபிடிக்கப்படாத 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவனால் அருளப்பட்ட திருமறையில் இப்பேருண்மையை விளக்கும் வசனம் எது?

பதில்: “(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச் செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிலிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான். அதை தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் – தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் – அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது”  (அல்குர்ஆன்: 24:43)

சிறு விளக்கம்: பகல் நேரத்தில் விமானங்கள் மூலம் மேகங்களுக்குச் சென்றவர்கள் இந்த அரியக்காட்சியைப் பார்த்திருப்பார்கள். மேகங்கள் ஒன்றன் மீது ஒன்றாகவும், கூட்டங்களாகவும் நகர்ந்து செல்லும். அவைகள் பார்ப்பதற்கு மலைகளைப்போல் இருப்பதைக் காணலாம்.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.