சந்திரன் சூரியனுடன் இணைந்து விடுமா?

கேள்வி எண்: 8. சந்திரன் மற்றும் பூமியின் ஆயுட்காலம் பற்றி ஆராய்ச்சி நடத்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், ஒரு காலகட்டத்தில் சந்திரன், சூரியனுடன் ஒன்றிணைந்து விடும் என்ற வியக்கத்தகு உண்மையை கண்டறிந்துள்ளார்கள். இது பற்றிக் குர்ஆன் கூறும் கருத்து என்ன?

பதில்: கேள்விக்கான விடைகாணும் முன் சூரியன் மற்றும் சந்திரன் பற்றி இன்றைய அறிவியலாளர்கள் கூறுபவற்றைச் சற்று பார்ப்போம்.

சூரியனின் தன்மைகள்:- ஹைட்ரஜன் பெருமளவும் ஹீலியம் ஓரளவும் அடங்கிய ஒரு மிகப்பெரிய நெருப்பு பந்து தான் சூரியன். சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவற்றின் மொத்த எடையில் 98 சதவிகிதம் சூரியனின் எடையாகும். பூமியின் எடையை விட, சூரியனின் எடை 3,30,000 மடங்கு அதிகமாகும். பூமியின் அளவை (Size)விட 109 மடங்கு பெரிதாகும்.

சூரியனின் வெளிப்புறத்தில் எரிந்து கொண்டிருக்கும் தீயின் சுவாலைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரையிலும் இருக்கிறது. இவ்வாறு எரிந்து கொண்டிருப்பதற்கு காரணம், சூரியனின் உட்புறத்தில் (Core) நிகழ்ந்து கொண்டிருக்கும் ‘நியூக்ளியர் ரியாக்ஸன்’ (Neuclear Reaction) என்ற செயலின் மூலம் ‘ஹைட்ரஜன் அணுக்கள், ஹீலியம் அணுக்களாக’ மாறுகிறது. இதன் காரணமாக ஏராளமான வெப்பம் உருவாகிறது.

சூரியனின் உட்புறம் ஓர் அணு உலையைப்போல் இருக்கிறது. இதனின் வெப்பம் 15 மில்லியன் (1-1/2 கோடி) டிகிரி சென்டிகிரேட் ஆகும். ஒரு வினாடிக்கு 500 டன் எடையுள்ள ஹைட்ரஜன் வாயுக்கள் ‘நியூக்ளியர் ரியாக்ஸன்’ என்ற செயலின் மூலம் எரிந்து ‘ஹீலியம்’ அணுக்களாக மாறுவதாகவும் கணக்கிட்டுள்ளனர். ஹைட்ரஜன் என்ற சூரியனின் எரிபொருள் இன்னும் 5 பில்லியன் (5 Billion) ஆண்டுகளுக்கு தேவையான அளவு அதில் இருப்பதாகக் கணித்துக் கூறுகின்றனர்.

இவ்வாறு ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் அணுக்களாக மாறும்போது ஏராளமான ‘மின் காந்த வெப்பக் கதிர்களை’ (Electromagnetic Radiation) உறுவாக்குகிறது. இந்த வெப்பக் கதிர்கள் சூரியனின் வெளிப்புறத்தை நோக்கிச் செல்கிறது. அதனால் சூரியனின் வெளிப்புறம் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுடைய தீச்சுவாலைகளுடன் எரிந்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு சூரியனின் மத்தியில் உற்பத்தியான இந்த வெப்பக் கதிர்களே சூரியன் மிக மிகப் பிரகாசமாக இருப்பதற்கு காரணமாக இருக்கின்றன. மேலும், சூரியக்குடும்பத்தில், சூரியனின் ஈர்ப்புச் சக்தியால் ஈர்க்கப்பட்டு அதனதன் பாதைகளில் சுற்றி வரும் கோள்களையும், சந்திரன்களையும் ஆஸ்டெராயிட்ஸ் (Asteroids) எனப்படும் விண்கற்களையும் வெப்பமடையச் செய்வதற்கு இந்த வெப்பக் கதிர்களே காரணமாக இருக்கின்றன. இந்தக் கதிர்களின் மூலமே சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் பிரகாசமாக இருக்கின்றன.

சந்திரனின் தன்மைகள்:- சூரியனிலிருந்து ஒளியைப் பெற்று பிரகாசிக்கும் சந்திரன், பூமியைச் சுற்றிவரும் துணைக்கோளாகும். பூமியின் எடையில் 1.2 சதவிகிதம் எடையே இருக்கும் சந்திரன் பூமியை விட மிகச் சிறியதாகும். இதன் பகல்நேர வெப்பநிலை 127 டிகிரி சென்டிகிரேட் ஆகும். ஆதாவது பூமியின் பாலைவனப் பகுதியின் சராசரி பகல் நேர வெப்பநிலையை விட 2-1/2 மடங்கு அதிகமாகும். சந்திரனின் இரவு நேர வெப்பநிலை -173 டிகிரி சென்டிகிரேட் ஆகும். அதாவது பூமியின் துருவப் பகுதியின் இரவு நேர வெப்பநிலையை விட 2-1/2 மடங்கு குறைவாகும்.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி இவைகளின் முடிவு:- இந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும் முடிவு உண்டா என்று இவற்றின் தோற்றம் குறித்து ஆராய்ந்து அறிந்த நவீன அறிவியலாளர்களைக் கேட்போமேயானால், அவர்கல் ‘ஆம் அவற்றுக்கும் அழிவு உண்டு’ என்றே கூறுகிறார்கள். நமது சூரியக்குடும்பம் இருக்கும் பால்வெளி நட்சத்திர மண்டலத்தை (Milkyway Galaxy) ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அவற்றில் ஆயிரக்கணக்கான சக்தியிழந்த நட்சத்திரங்கள் (Dead Stars) இருப்பதைக் கண்டனர். இதுபோல் மற்ற விண்ணடுக்குகளிலும் (Galaxies) ஆயிரக்கணக்கில் சக்தியிழந்த நட்சத்திரங்கள் (Dead Stars) இருப்பதைக் கண்டனர். இந்த டெட் ஸ்டார்கள் எப்படி இறந்திருக்கக் கூடும் என்பதை ஆராய்ச்சி செய்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ‘ஒவ்வொரு நட்சத்திரமும் எப்படி இறக்கின்றன’ என்ற கோட்பாட்டை (Theory) வரையறுத்தனர். ராயல் கிரீன்வீச் அப்ஸர்வேட்டரியைச் சேர்ந்த சர் மார்டின் ரீஸ் என்பவர் கூறுகிறார்:- ‘பொதுவாக நட்சத்திரங்கள் இறக்கும்போது பெரும்பாலானவைகள் வெடித்துச் சிதறி அதன் மூலம் மிகப்பெரிய வாயுக்கள் அடங்கிய நெபுலாக்களைத் தோற்றுவிக்கின்றது. இந்த நெபுலாக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இப்பேரண்டத்தில் நிலைத்திருக்கும். இந்த நெபுலாக்களிலிருந்தே புதிய புதிய நட்சத்திரங்கள் தோன்றுகிறது. அளவில் மிகப்பெரிய நட்சத்திரங்களே (Big Stars) ‘சூப்பர் நோவா’ என்பதைத் தோற்றுவிக்கிறது. ஆனால் சூரியனின் அளவில் மிகச் சிறியது. இதன் இறப்பு என்பது ஈர்ப்பாற்றலினால் ஏற்படக்கூடியது’ என்று கூறினார். (ஆதாரம்: டிஸ்கவரி சேனல் புரோகிராம் “The sun’)

அவர்களுடைய இக்கோட்பாட்டின்படி, 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய இந்த சூரியன் தற்போதுதான் நடுத்தர வயதை அடைந்துள்ளது. தற்போது சூரியன், 1000 வருடங்களுக்கு முன்னர் இருந்ததைவிட மிகத் தீவிரமாக (More Violent Than Before) இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் இன்னும் தீவிரமாக இருக்கும் என்கின்றனர். இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் அதிதீவிர வெப்பக்கதிர்களால் இந்த பூமியில் உள்ள கடல்நீர் அனைத்தும் ஆவியாகி விடும் என்கின்றனர். சூரியனின் மத்தியிலுள்ள அதன் எரிபொருளான ஹைட்ரஜன் வாயுக்கள் தீர்ந்ததும், சூரியனின் முடிவு ஆரம்பமாகின்றது. அப்போது சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்துக் கொண்டே செல்லும். இதன் காரணமாக சூரியனின் ஈர்ப்பு விசையில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு, சூரியனைச் சுற்றி வருகின்ற கோள்களும், சந்திரன்களும், எண்ணற்ற விண்கற்களும் சூரியனுடன் இணைந்து விடும். அதன் பின் ஒரு கட்டத்தில் சூரியன் வெடித்துச் சிதறி பற்பல துண்டுகளாகி விடும். எஞ்சிய அடர்த்தியான பகுதி ஒளியிழந்து வெண்மை நிறமாகக் காட்சியளிக்கும். இதனை ஒயிட் டுவார்ஃப் (White Dwarf) என்கின்றனர்.

இந்த விஞ்ஞானிகள் கூறக்கூடிய காலக்கணக்குகள் எல்லாம் அவர்கள் கணிப்புகளே. இவைகளின் மீது நாம் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனென்றால் இன்று ஒரு கோட்பாட்டைக் கூறும் அறிவியலாளர்கள் நாளை இன்று கூறியதற்கு நேர்மாற்றமான மற்றொரு கருத்தைக் கூறுவர். இதனால் நாம் அவர்களைக் குறை கூறுவதற்கில்லை. ஏனென்றால் அவர்கள் அறிந்ததைக் கூறுகிறார்கள் அவ்வளவுதான். சூரியனின் முடிவு எப்போது ஏற்படும் என்பதில் நமது சிந்தனையை செலுத்தாமல் (ஏனென்றால் உலக முடிவு நாள் எப்போது ஏற்படும் என்பது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது என்று இறைவன் திருமறையில் கூறுகிறான்.) அவர்கள் கூறும் கருத்துக்களை நாம் சிந்திப்போமேயேனால் நமக்கு ஆச்சரியமளிக்கக்கூடிய வகையில் இறைவனின் வசனங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இதைக் கூறியிருக்கிறது என்பதை அறிகிறோம். இனி இறைவனின் திருவசனம் இவைப்பற்றி என்ன கூறுகின்றது என்பதைப் பார்ப்போம்.

“‘கியாம (முடிவு) நாள் எப்போது வரும்?’ என்று (ஏளனமாகக்) கேட்கிறான். ஆகவே, பார்வையும் மழுங்கி, சந்திரன் ஒளியும் மங்கி, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டு விடும். அந்நாளில் ‘(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?’ என்று மனிதன் கேட்பான். ‘இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!’ (என்று கூறப்படும்). (அல்குர்ஆன்: 75:6-11)

1400 ஆண்டுகளுக்கு முன்னால் குர்ஆன் கூறிய கருத்தான ‘சூரியனும், சந்திரனும் ஒன்றிணைந்து விடும்’ என்பதை 21-ம் நூற்றாண்டின் இன்றைய நவீன விஞ்ஞானம் கூறி மெய்ப்பித்திருப்பதை அறிகிறோம். இறுதியான – உண்மையான ஞானம் – (விளக்கம்) அல்லாஹ்விடமே இருக்கிறது.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.

0 Responses to சந்திரன் சூரியனுடன் இணைந்து விடுமா?

  1. saleem ansari says:

    pls read this website.