ஆள்பாதி ஆடைபாதி?

விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தில் கோலோச்சி கொண்டிருக்கும் இந்த காலத்தில் மனிதன் மீண்டும் ஆதி மனிதனின் கற்காலத்திற்கு சென்று கொண்டு இருக்கிறான். சகல விஷயத்திலும் முன்னேற்றத்தின் பாதையில் வெற்றி நடை போடும் மனித இனம், உடலை மூடி மறைக்கும் உடை விஷயத்தில் மட்டும் கீழிறங்கி கொண்டு இருக்கிறது. ஆண் தன் அங்க அவயங்களை முழுமையாக மறைத்து உடை உடுத்தி கொள்கிறான். ஆனால் முழுமையாக மறைக்க வேண்டிய பெண் சகலமும் திறந்தவாறு. நம் கண் கொண்டு பார்ப்பதை தவறு என்று சுட்டி காட்டும் நோக்கோடு சொல்லும் போது கூட, இது இப்போதைய நாகரீகம் என்று சொல்லி தங்கள் தவறை மூடி மறைத்து விடுகிறார்கள். மனிதனை வளர்ச்சியின் உச்சாணிகொம்புக்கு கொண்டு சென்ற நாகரீகம் தான் சில விஷயங்களில் அதே மனிதனை கலாச்சார சீர்கேட்டிலும், இன்னும் சமூகங்களின் ஒழுக்க சீர் கேட்டிற்க்கும் வழி திறந்து விட்டது.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.