மஹரைத் தவிர்க்க ஒருவர் தன்மகளை சகோதரியை அடுத்தவருக்கு மணமுடித்துவிட்டு அவரின் மகளை சகோதரியை மணப்பது (ஷிஃகார்) தடை.

893. ‘ஷிஃகார்’ முறைத் திருமணத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஒருவர் மற்றெவாருவரிடம் ‘நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரவேண்டும்” என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே ‘ஷிஃகார்’ எனப்படும். இதில் இரண்டு பெண்களுக்கும் ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) இராது.

புஹாரி:5112 இப்னு உமர் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.